அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது தொடர்பாக ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழுவில் இருந்தவர்கள் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் உட்பட அனைவரும் இறை நம்பிக்கையாளர்களே. கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. அவர்கள் உருவாக்கிய வரையறையின் படியே அர்ச்சகர் நியமனம் நடைபெறுகிறது.
இத்தனை நாட்களாக ஆகம விதிகள் பற்றி எதுவும் தெரியாமல் பிறப்பின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டது ஆகம விதி மீறலாக தெரியவில்லை. பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகராக நியமிக்கப்படும் போதுதான் நூலிபான்களுக்கு ஆகம விதிகள் ஞாபகம் வருகிறது.
ஆகம விதிகளை கடுமையாக கடைப்பிடித்து கட்டப்பட்ட கோவில்கள் என்று பார்த்தால் தமிழ்நாட்டில் ஒரு கோவிலும் மிஞ்சாது.
ஆகமங்களில் நவக்கிரகங்கள் கிடையாது. அனுமார் கிடையாது. ஆனால் ஆகம கோவில்கள் என்று அழைக்கப்படுகிற பல கோவில்களில் இவை இருக்கிறது.
ஸ்மார்த்தர்களுக்கு உருவ வழிபாடு இல்லை. ஆனால் அவர்கள் ஆகம கோவில்கள் என்று அழைக்கப்படுகிற கோவில்களில் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். இது ஆகம விதி மீறல்தான் என்றாலும் அதை பற்றி நூலிபான்கள் என்றுமே புகார் எழுப்பியதில்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அதன் பிறகு, உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து ஒரு வழியாக 2019இல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது அதிமுக அரசு. இந்த முறை 5 மாவட்டங்களை பிரித்து புதிதாக மாவட்டங்களை உருவாக்கி அங்கு வார்டு எல்லை மறு வரையறை செய்யாமலேயே சட்டத்துக்கு புறம்பாக தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது
மறுபடியும் திமுக நீதிமன்றத்தை நாட, அதிமுக அரசின் அறிவிப்பு சட்டத்துக்கு புறம்பானது என்பதை நீதிமன்றம் ஒப்புக்கொண்டு, குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் வார்டு எல்லை வரையறை செய்த பிறகுதான் தேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
ஆட்சிக்கு வந்த உடன் முதல் வேலையாக 24 ரூபாயாக உயர்த்தியது அதிமுக அரசு. அதன் பிறகும் பல முறை விலையை உயர்த்தி 10 ஆண்டு ஆட்சி முடிவில் 43 ரூபாய்க்கு கொண்டு வந்து விட்டது
ஒன்றிய அரசின் 2019-20 ஆண்டு வரி வருமானம் 20 இலட்சம் கோடி. இதில் தோராயமாக 8.5% அதாவது 1.7 இலட்சம் கோடி தமிழ்நாட்டில் இருந்து வசூல் ஆகிறது.
ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு அளிக்கும் தொகை 54 ஆயிரம் கோடி. மீதி 1 இலட்சத்து 16 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசே செலவு செய்கிறது
2019-20 ஆண்டு ஒன்றிய அரசு நாட்டின் பாதுகாப்புக்கு செலவிட்ட தொகை 3 இலட்சம் கோடி. இதற்கான தமிழ்நாட்டின் பங்கு 8.5% என்று வைத்துக்கொண்டாலும் 25 ஆயிரம் கோடிதான் வரும். இதர செலவுகளையெல்லாம் சேர்த்து 40 ஆயிரம் கோடி கூட நமது பங்காக கொடுக்கலாம். ஆனால் 1 இலட்சத்து 16 ஆயிரம் கோடி அதிகம்!
மீதமுள்ள 76 ஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கு வந்தால், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நடத்த வேண்டிய தேவை இல்லை. பெட்ரோல் டீசல் விலையை வெகுவாக குறைக்கலாம்.
இது நாள் வரை பெட்ரோல் டீசலுக்கான Basic Excise Duty லிட்டருக்கு முறையே ரூ. 2.98/- மற்றும் ரூ. 4.83/- என்று இருந்ததை ரூ. 1.4/- மற்றும் ரூ. 1.8/- என்று குறைத்தது
ஒன்றிய அரசு தனது வரி வருவாயில் 59% தான் எடுத்துக்கொண்டு மீதமுள்ள 41% நிதியை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
ஆனால், surcharge மற்றும் cess பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது. இதை பயன்படுத்தி பாஜக அரசு கிடைக்கிற இடங்களில் எல்லாம் இந்த இரண்டு வரிகளையும் தீட்டி தள்ளுகிறது