Tamil Gramsi Profile picture
https://t.co/SQ3xz1TuBD

Dec 8, 2022, 16 tweets

#Witness படம் பேசும் சமூக விஞ்ஞானம் !!!
ஒரு சமூகம் அதன் வளர்ச்சி அந்த வளர்ச்சியில் முதலாளித்துவத்தின் பங்கு என்று பல்வேறு காரணிகளை கொண்டது. சேரி மக்கள் சென்னையின் மையத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சென்னைக்கு வெளியே வலுக்கட்டாயமாக தூக்கி எறியப்பட்டனர். 1/n

இது ஏதோ சாதாரண நிகழ்வு போல் தோன்றினாலும் இது முதலாளித்துவத்தின் கண்ணசைவில் நடந்த சம்பவம்.

ரிச்சர்ட் லெவின்ஸ் உலக புகழ் பெற்ற மார்க்சிய சிந்தனையாளர் இந்த நகர உருவாக்கம் அதில் சேரியின் தோற்றம் அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை நிலை என்று பலவற்றை அறிவிய பூர்வமாக ஆய்வு செய்தவர். 2/n

அவரின் கூற்றுப்படி ஓர் நகரம் என்பது ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சுற்றுசூழலை கொண்டதல்ல. அவை ஓர் ஒழுங்குமுறை கொண்டவை. கட்டமைக்கப்பட்டவை.எங்கெல்லாம் பணக்கார மக்கள் வாழும் பகுதிகள் இருக்கிறதோ அங்கெல்லாம் அவர்களுக்கு சேவை செய்ய ஏவல் புரிய ஏழைகள் வாழும் சேரிகள் உருவாக்கப்படும்.3/n

இதை நாம் நம் சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட கண்ணகி நகர் எழில் நகர் , வல்லக்கோட்டை அருகே உருவாக்கிய நாவலூர் , மற்றும் பெரும்பாக்கம் ஹௌசிங் போர்டுகளோடு ஒப்பிட்டு பார்க்கலாம். 4/n

Omr சாலையில் IT நிறுவனங்களும் அதன் பொருட்டு உருவான gated கம்யூனிட்டிகளும் அடுக்குமாடி குடியிருப்புகளும் இப்பகுதியை சென்னையின் பணக்கார பகுதியாய் மாற்றியது. இந்த பணக்கார பகுதி முழுதிற்கும் சேவை செய்ய இப்பகுதி மக்கள் எண்ணிக்கை போதாது. 5/n

ஆனால் இவர்களுக்கு தேவையான உழைப்பு சக்தியை புதிதாக உருவாக்கப்பட்ட கண்ணகி நகரால் எழில் நகரால் நல்க முடிந்தது. இதே நிலை தான் முடிச்சூர் படைப்பை பகுதிகளில் இருக்கும் அருண் எஸ்ஸ்ல்லோ tvh போன்ற அடுக்குமாடிகளுக்கு உழைக்க குடியமர்த்தப்பட்ட நாவலூர் மக்கள். 6/n

ஆனால் பலருக்கு அவர்களின் வேலை சென்னை மாநகருக்குள் இருந்தது. தினம் 50 முதல் 70 கிமீ பயணம் செய்து வேலைக்கு வர வேண்டிய சூழல். பள்ளி வசதி இல்லை. அரசு மருத்துவமனை இல்லை. வேலை கிடைத்தாலும் முக்கால்வாசி வேலை housekeeping வேலை தான். 7/n

Omr இல் இருக்கும் அனைத்து கம்பெனிகளிலும் ரெஸ்ட் ரூம் சுத்தம் செய்யும் ஆட்கள் ண்ணகி நகரில் இருந்து தான் வருவார்கள்.

அடுத்தது லெவின்ஸ் கூறும் மிகமுக்கியமான சிக்கல் இம்மாதிரி உருவாகும் பகுதிகளில் இருக்கும் வளர இளம் பருவ மக்கள் சந்திக்கும் அரசாங்க ஒடுக்குமுறை. 8/n

கண்ணகி நகரில் இருந்து வேலை கேட்டு வந்தால் வேலை கொடுக்கப்படுவதில்லை. காரணம் அந்த பகுதியே ஓர் கிரிமினல்கள் கூடாரம் போல் சித்தரிக்கப்பட்டது. மேலும் கண்ணகி நகர் இளைஞர்கள் என்றால் போலிசும் சரியாக நடத்துவதில்லை. யாரை வேண்டும் ஆனாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யலாம். 9/n

போலீசை பார்த்தால் பொறுமையாய் நடக்க வேண்டும், ஒரு வேளை வேகமாய் நடந்தால் அடிப்பார்களோ கைது செய்வார்களோ என்று எந்த நேரமும் ஓர் மனவோட்டத்திலேயே இருக்க வேண்டிய சூழல்.

The daily harassment one can see , for instance , in these impoverished communities. 10/n

There , one ia constantly forced to make strategic decisions. Am i walking so slowly that the cop is going to think iam loitering ? Or, am i walking so fast that he or she will think that am running away stealing something. 11/n

கூறலாம் அவர்களுக்கு நல்ல இடத்தில் வீடு கட்டி கொடுத்துள்ளோம் என்று. பெரும்பாக்கம் ஓர் சதுப்பு நில பகுதி. வெள்ளம் மழைக்காலங்களில் இடுப்பு வரை தண்ணீர் நிற்கும். நாவலூர் பகுதி யில் இருந்து மருத்துவமனைக்கு செங்கல்பட்டு செல்ல 30கிமீ சென்னை ராஜாஜி வர 60கிமீ. 12/n

ஆக சமூக விஞ்ஞான பார்வை படி முதலாளித்துவ கட்டமைப்புக்கு உதவும் பொருட்டு ஒரு நகரத்தின் பூர்வ குடி மக்கள் நிலத்தோடு பெயர்க்கப்பட்டு கண்கானா தூரத்துக்கு தூக்கி ஏறியப்பட்டுள்ளனர். இதை இங்கிருக்கும் அரசாங்கங்கள் மாறி மாறி செய்துள்ளன. 13/n

ஆனால் இதே அரசாங்கத்தால் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட ஓர் வணிக வளாகத்தையோ , தனியார் மருத்துவமனையையோ தூக்கி வீச முடியுமா என்றால் முடியாது.

உலகம் முழுதும் இது ஏழை மக்கள் மீது நடத்தப்படுகிறது.14/n

ஆனால் இந்தியாவில் மட்டும் தான் ஏழைகள் 90 சதவீதம் தலித்துகளாகவும் , அதனால் தூக்கி வீசப்படும் 100 சதவீதம் தலித்துகளாக மட்டுமே இருக்கின்றார்கள். 15/n

இங்கு கூறப்பட்ட மார்க்சிய பார்வை மொத்தமும் படத்தில் காட்சிகளாக விரியும். 👌👌. 16/16

@negativespace04
@gselva158
@kavithazahir
@Rajasangeethan @PaPrem3 @_Forwardmessage

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling