விஸ்வா || VISWA Profile picture
Breaking News | Educationist | History Fanatic | Travel Enthusiast | Proud Dravidian Stock | Secular Indian

Jan 13, 2023, 16 tweets

#அடிமைகளின்_துரோகசரிதம்
சொத்துத் தகராறுக்காக சொந்த பங்காளிகளை கொலை செய்த வழக்கில் கொலைக் குற்றவாளியாக இருந்தவர்தான் பழனிச்சாமி. பின்னர் பங்காளிகளுக்குள் சமரசமானதால் அவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்டார்.
படிப்பு பிடிக்காமல் கல்லூரி படிப்பை பாதியில் துறந்து விட்டு,

வெல்ல வியாபாரம் புளி வியாபாரம் செய்த எடப்படிக்கு
செங்கோட்டையனின் அறிமுகம் கிடைத்தது ஆரம்ப கட்டத்தில் செங்கோட்டையைனை பார்த்தால் பம்முவார் எடப்பாடி. ஆனால் காலத்தின் கோலம் எடப்பாடியின் கீழேயே அமைச்சராக பணியாற்ற வேண்டிய நிலைமை செங்கோட்டையனுக்கு
எடப்பாடி பழனிச்சாமி 16 பிப்ரவரி 2017

அன்று பதவியேற்றபோது, பலரும் முணுமுணுத்தது “எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கிறாருன்னு பாப்போம்” என்பதே.
சந்தித்த சிக்கல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. எப்படியாவது மத்திய பாஜக ஆட்சியோடும், மோடியோடும் நெருக்கமாக வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்த எடப்பாடி தொடர்ந்து தோல்வியையே சந்தித்தார்.

அதே நேரத்தில், தர்மயுத்தம் நடத்தி வந்த ops, ஒரே மாதத்தில் ஐந்து முறை மோடியை சர்வ சாதாரணமாக சந்தித்தார். மோடியின் நெருக்கடி தாங்காமல், பன்னீர்செல்வத்தோடு இணைவதற்கு ஒப்புக் கொண்டார்.
பிறகு மனங்கள் இணையவில்லை என்று தர்மயுத்த அணியின் எம்பி மைத்ரேயன் தன் மனவருத்தத்தை தெரிவித்தார்.

அவ்வப்போது சலசலப்புகள் எழுந்தே வந்தன. பன்னீர்செல்வமும், அவ்வப்போது, லேசாக பட்டும் படாமல் தன் எதிர்ப்புகளை சாடை மாடையாக தெரிவித்து வந்தார்.
ஆனால் இன்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் சொன்னது. “பொது மேடையில் எடப்பாடியின் காலில் எந்த நேரத்திலும் பன்னீர்செல்வம்

விழத் தயாராக இருக்கிறார்”
தன்னை ஏளனமாக எள்ளி நகையாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்து, வியப்போடு தன்னை பார்க்கும் வகையில், அமைதிப்படை அமாவாசையாக உருவாகியிருக்கிறார் எடப்பாடி .
சட்டசபை மற்றும் ஆளுநர் விருந்தில் இருவரும் அருகருகே அமர்ந்து குலாவியதை கவனிக்க

#அமாவாசை_ஆளுமையானகதை
1991ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு, ராஜீவ் அனுதாப அலையில் எம்எல்ஏவான புளிமூட்டை பழனிச்சாமி.
தன்னை அதிமுகவுக்கு கொண்டு வந்த செங்கோட்டையனுக்கு எதிராகவே அரசியல் செய்யத் தொடங்கினார்.
செங்கோட்டையனும் அவருக்கு எதிராக காய்களை நகர்த்த, 2011 தேர்தல் வெற்றிக்கு பின்,

மன்னார்குடி மாபியாவிடம் சரணடைந்தார். மன்னார்குடிக்கு விசுவாசம் தவறாமல் கப்பம் கட்டுவேன் என்று வாக்குறுதியின் அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகிறார்.
2011ல் அமைச்சரானது முதல், எடப்பாடியின் வசூல் தொடங்கியது. ஜெயலலிதா இருக்கும் போதே எடப்பாடிக்கு முதலமைச்சர் ஆசை வந்தது

2011ல் அமைச்சரான உடனேயே எடப்பாடிக்கு முதல்வர் பதவி மீது கண் வந்தது. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்படுவார். அப்போது ஏற்படும் இடைக்காலத்தில் முதல்வராக வேண்டும் என்று உறுதி பூண்டார் எடப்பாடி.
ஜெயாவின் ஊழல் பணங்கள் குறிப்பிட்ட அமைச்சர்களிடம் கொடுத்து வைக்கப்படும்.

வாங்கும் லஞ்சத்தில் ஜெயலலிதா பங்கை சம்பந்தப்பட்ட அமைச்சர் தனியாக எடுத்து வைக்க வேண்டும். எப்போது ஜெயா கேட்கிறாரோ, அப்போது உடனடியாக பணத்தை தர வேண்டும்.
மற்றவர்கள் ஜெயா திருப்பிக் கேட்கையில் அதே தொகையை திருப்பித் தருவார்கள். ஆனால், எடப்பாடி அதை விட கூடுதலாக திருப்பி கொடுப்பார்

ஜெயாவுக்கு ஓபிஎஸ் மீது எப்போதுமே ஒரு சாப்ட் கார்னர் உண்டு. பண விவகாரத்தில் நேர்மையாக நடந்து கொள்வார் என்பதால் ஜெயாவுக்கு பன்னீர் மேல் உள்ள நன்மதிப்பை கெடுக்க வேண்டும் என்று உறுதி பூணுகிறார் எடப்பாடி. அதற்கு தான் இந்த கூடுதல் தொகை சதித் திட்டத்தில் கைகோர்த்தார் வைத்தியலிங்கம்.

அந்த சமயத்தில், ஜெயலலிதா அமைத்திருந்த நால்வர் அணியின் மீது லேசான அவநம்பிக்கை ஏற்பட எம்பி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை, எடப்பாடி மற்றும் வைத்தியிடம் அளிக்கின்றனர், வேட்பாளர்களை தனித்தனியே சந்தித்த எடப்பாடி மற்றும் வைத்தி, ஒவ்வொரு எம்பிக்கும் 3 கோடி ரூபாயை அளித்தனர்.

கட்சி தேர்தல் செலவுக்கு பணம் தருவதை தவிர்த்து, இவர்கள் நமக்கு 3 கோடி ரூபாயை தருகின்றனரே என்று பல எம்பிக்கள், எடப்பாடிக்கே விசுவாசமாக இருந்தனர்
2014 தேர்தல் சமயத்தில் எ
ஓபிஎஸ், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தார். பன்னீரை எப்போதும் உடன் அழைத்துச் சென்றார் ஜெ

அந்த நம்பிக்கையை உடைத்து, ஜெயாவின் கோபத்துக்கு பன்னீர்செல்வத்தை ஆளாக்க
2014ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாகவே, பன்னீர்செல்வம், சசிகலாவோடு சேர்ந்து, அணி சேர்த்து, கட்சியை கைப்பற்ற முயல்கிறார் என்று பல மொட்டை கடுதாசிகளை எடப்பாடி-வைத்தியலிங்கம் போயஸ் தோட்டத்துக்கு அனுப்புகிறது.

தன் தலைமை மீதும், தன் மீதும் நம்பிக்கை வைத்துள்ள ஒரு தலைவன்,இது போன்ற அவதூறுகள் குறித்து என்னவென்று விசாரித்து உண்மையை அறிந்து கொள்வான். தன் மீதே நம்பிக்கை இல்லாத தற்குரி ஜெயா பொய்ச் செய்திகளை நம்பி விடும்.
2015ல், எடப்பாடி வைத்தி ஜோடி பரப்பிய தகவல்களை அப்படியே நம்பினார் ஜெ

துரோகம் தொடரும்...

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling