விஸ்வா || VISWA Profile picture
Breaking News | Educationist | History Fanatic | Travel Enthusiast | Proud Dravidian Stock | Secular Indian

Jan 27, 2023, 12 tweets

#கூலிப்படைத்_தலைவன்
ஜேசு பங்கய ராஜ் என்றால் தமிழ்நாட்டில் யாருக்குமே தெரியாது..

தனக்குத் தானே கல்வி வள்ளல் பட்டம் போட்டுக்கொண்ட ஜே பி ஆரின் பூர்வாசிரம பெயர்தான் அது..
மகொர தமிழர்களை நெருங்க விட்டது இல்லை, அரசியலிகும் தனிமனித வாழ்க்கையிலும். மகோராவின் மலையாளி பாசம் சென்னையை 2015

வெள்ளத்தில் மூழ்கடித்தது என்றால் நம்ப முடிகிறதா?
அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் குமரியில் பிறந்த மலையாளி ஜேசு வெறித்தனமான எம்ஜிஆர் ரசிகன். வாட்ட சாட்டமான உடலை கொண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார்.
மகோராவிற்கு ரசிகர் மன்ற வேலை பார்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார்

திமுக புண்ணியத்தில் அரசியல் பவர் சென்டராக அன்று மாறி இருந்த மகோராவை சந்தித்து சஸ்பெண்ட் ஆர்டரை கேன்சல் செய்ய குமரியில் இருந்து சென்னை வந்தார்.
காசிமேட்டில் ஒரு குடிசையை போட்டு எம்ஜிஆர் ரசிகர் மன்றம் பெயர் பலகையுடன் போட்டோவும் வைத்து அங்கேயே கிடந்தார்.
எம்ஜிஆர் அவரை போலீஸ் ஆகவிடலை

பல நடிகர்கள் தயாரிப்பாளர்கள் நடிகைகளின் கணவர்கள் சாபத்தை சம்பாதித்து இருந்த எம்ஜிஆர் தனக்கு அவர்களால் எந்த நேரமும் ஆபத்து என்று கருதினார். ஆட்டுக்குட்டிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு போலல்லாம் அன்னிக்கு கிடையாது. மகோரா தனக்கென ஒரு அடியாள் படையை சீமானை போல் வைத்துக் கொண்டிருந்தார்

அடியாள் படையில் ஜேப்பியார் இருந்தபோது ஜெயா சோபன் பாபு உடன் லிவிங் டுகேதெரில் இருந்தார். கடுப்பான மகோரா ஜெயாவ தூக்கிட்டு வர உத்தரவிட்டார்.
ஜேசு தானே களத்தில் இறங்கி, ஜெயாவை கடத்தி செம்மஞ்சேரி பக்கம் ஒரு குடிசையில் அடைத்து வைத்தார். பயந்து போன ஜெயா சோபனை விட்டு விலக சம்மதித்தார்

அந்த பேக்கரி டீலிங்கில் கிடைத்த பரிசு தான் இன்று எம்ஜிஆர் ஆத்தா சத்தியபாமா பெயரில் செம்மஞ்சேரி புறம்போக்கு நிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகம்.
1977-ல் எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்த கலைஞர் ஆட்சி நீக்கப்பட்டு இந்திரா அடிவருடி எம் ஜி ஆர் முதலமைச்சர் ஆனார்

நிர்வாகம் என்பதை பற்றி ஒரு மண்ணாங்கட்டியும் அறியாத மகோரா தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ஜேப்பியாரை தலைவர் ஆக்கினார். அதுவரை அந்த பதவியில் IAS அதிகாரி தான் நியமிக்கப்பட்டனர்.
பத்தாம் கிளாஸ் பெயிலான JPR நிர்வாகத்தால்
80களில் சென்னையில் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடியது

400 ஆண்டு சென்னை வரலாற்றில் முதன் முறையாக அதன் மூலை முடுக்கு எல்லாம்
தண்ணீரை விற்க மெட்ரோ வாட்டர் லாரிகள் கிளம்பின.
அந்த லாரிகளின். பெரும்பாலான லாரிகள் ஜேபிஆர் பினாமி பெயரில் ஓடின.
குப்பங்களுக்கு நேரடியாக குடிநீர் லாரியில் சென்ற ஜேபிஆர் சென்னையை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்

1988 இல் மகோரா மண்டைய போடும் வரை சென்னை மாவட்ட செயலாளராக கலக்கிக் கொண்டிருந்த ஜேபிஆர், மறைவுக்குப் பின் சிறிது காலம் ஜானகி அணியில் இருந்து பிறகு அரசியலை விட்டு ஒதுங்கிக் கொண்டு கல்விக் கொள்ளையில் இறங்கினார்
எம்ஜிஆரை குஷிப்படுத்தி அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து உருவான

முதல் தனியார் பல்கலை சத்தியபாமா.
60களில் ஆரம்ப கல்விக்கு காமராஜர் அடித்தளம் இட,
70களில் கலைஞரால் தொழில் வளர்ச்சி பெருக, உயர்கல்வி நிறுவனங்களின் தேவை அதிகரித்தது.
இதனை வாய்ப்பாக பயன்படுத்தி அதிமுக அடியாள்படை மாணவாரியாக சுயநிதி பொறியியல் கல்லூரி தொடங்க அனுமதி பெற்றன

இந்தக் கல்லூரிகள் அனைத்தும் அரசு புறம்போக்கு நிலத்தை அடிமாட்டு விலைக்கு அடிமைகள் ஆட்டைய போட்டு உருவாக்கியது.
பச்சமுத்து எஸ் ஆர் எம் பல்கலை, பெருங்களத்தூர்
முனு ஆதி , ஆதி பொறியியல் கல்லூரி, வாலஜாபாத்.
விஸ்வநாதன், VIT வேலூர்.
1989இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது திமுக

நிர்வாக சீர்திருத்தங்கள் நிகழும் முன் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு ராஜீவ் மரண அனுதாபத்தால் ஜெயா ஆட்சிக்கு வந்தார். ஒட்டுண்ணி கூட்டம் முன்னை விட அதிகமாக சுரண்டியது. நிலம் நீர் காற்று என பஞ்சபூதங்களும் கொள்ளை அடிக்க பட்டன.
96 இல் தான் முழுமையாக 5 ஆண்டு வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling