மகோராரசிகன் Profile picture
பதிவுகளை ஆர்டி செய்யும் ஃபாலோயர் ஐடிகள் அனைத்தும் திருப்பி ஃபாலோ பேக் செய்யப்படும்

May 9, 2023, 9 tweets

#மகமாயி_இருக்கிறாள்_மோடி.
By
முகிலன் ஆயக்காரன்புலம்

எனக்கு இந்தி மொழியைத் தப்புத் தப்பாக தடவித் தடவித்தான் படிக்கக் தெரியும். பொருளறியேன்.

மேலே இருக்கும் அந்த மேடையில் இதுதான் எழுதி இருப்பது போலிருக்கிறது:

"ஸ்வதந்த்ர வீர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஸ்மிர்தி தின்"

[விடுதலைப் போராட்ட வீரர் தாமோதர் சாவர்க்கர் (என்னவோ ஒரு மண்ணாங்கட்டி) நாள்.]

மேற்கண்ட நாளை கொண்டாடும் விதமாக ஆர் எஸ் எஸ் மேடையில் பேசிக்கொண்டடிருக்கிற இந்து மேலாதிக்க வெறியன் பெயர் பிரதீப் குல்கர்.

இவன் தான் இந்தியநாட்டின் "பாதுகாப்பு ஆய்வுகள், பாதுகாப்பு மேம்பாடுகளுக்கான

வாரியத்தின் இயக்குநர். India's Defense Research and Development Organization's (DRDO) Director

*இந்திய நாட்டின் பாதுகாப்பு தளத்தில் மிக உயர்ந்த மிகச் சில பதவிகள் ஒன்றில் இருக்கிற இந்த இந்து மத வெறியன் தான் இந்தியாவின் பல்வேறு ஏவுகணைத் திட்டங்கள் குறித்த இன்றியமையாத

பல தகவல்களை பாகிஸ்தான் பெண் உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்திருக்கிறான்.* (பாரத் மாதா குறித்த சில டீட்டெய்ல்ஸ பாகிஸ்தான் கன்னியிடம் கடன் கொடுத்தது பெரிய குற்றமா என்ன? விட்டுத் தள்ளுங்கள்)

ஆனால் நம்மூர் பாஜக காரனுங்க - ஆர்எஸ்எஸ் அடியாட்கள் - திருமாவையும்

ஸ்டாலினையும் சுவெவையும் உங்களையும் என்னையும் டப்பென்று தேச துரோகீன்னு சொல்வானுங்க பாருங்க.....

நமக்கே குழம்பிவிடும்.

எது நம் நாடு? நம்முடைய இத்தியாவா?? ஆர்எஸ்எஸ் உடைய அகண்ட பாரதமா?? அகண்ட பாரதத்துக்குள் இருக்கும் பாகிஸ்தானோடு பாதுகாப்பு தகவல்களை பகிர்வதுதானே முறை. உலக வழக்கம்?

சீனாவுடன் பகிர்ந்தால் தானே தவறு??

நமக்கே குழம்பிவிடும்

சனாதனத்தின் இந்தியாவா?? சாதா சனத்தின் இந்தியாவா??

நமக்கே குழம்பிவிடும்,

யார் விடுதலைப் போராட்ட வீரர்?

சட்டமறுப்பு இயக்கத்தை காந்தியார் அறிவித்தவுடன் தனது குடும்பத்திற்கு வணிக வழியாக வரவேண்டி முப்பதாயிரம் ரூபாய்க்கும்

மேலான பண‌ கொடுக்கல் வாங்கல் வழக்குகளை திரும்பப் பெற்று அவ்வளவு படத்தையும் ஒரு நொடியில் விடுதலை வேள்வியில் இழந்த பெரியாரா?? (இன்றைய மதிப்பில் மிக மிக குறைந்த அளவில் கூட நூறு கோடி தேறும்)

அல்லது ஆங்கிலேயரிடம் மாதம் அறுபது ரூபாய் ஓய்வூதியம் பெற்றுக்கொண்ட "வீர" சாவர்க்கரா??

இருவரில் யார் விடுதலை வீரர்??

நல்ல வேளையாக பாகிஸ்தானுக்கு செய்திகள் விவரங்கள் பகிர்ந்தவர் ஒரு இந்து மேல் சாதிக்கார இந்து வெறியன் ஆனதால் நாம் தப்பிப் பிழைத்தோம்.

இதுவே ஒரு இஸ்லாமியராக இருந்தால்:

தேசிய ஊடகம் இணைய வெளி பற்றி எரிந்திருக்கும்.

எல்லா இஸ்லாமியர்களும் வெர்ஜினிட்டி

டெஸ்ட் (கற்புச் சோதனைக்கு) உட்படுத்தப் பட்டிருப்பார்கள்

இன்னேரம் பத்து மசூதிகளை இடித்திருப்பார்கள்

மாடு வளர்க்கும் இஸ்லாமியருக்கு மரணதண்டனை தந்திருப்பார்கள்

ராகுலும் ஸ்டாலினும் பினராயியும் Director DRDO வும் கான்ஃபரன்ஸ் கால் பேசியதாக ஒரு ஆடியோ வெளியிட்டிருப்பான் அண்ணாமலை.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling