Profile picture
ராஜ்ராஜே @rajradje
, 28 tweets, 4 min read Read on Twitter
தோழர்களே இது ஒரு நீண்ட பதிவு திரி நேரம் ஒதுக்கி படிக்கவும்!

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிறைவு நாளன்று நான் ஒரு ட்வீட் செய்து பின் வருமாறு கேட்டேன்...
ஆனால் ஒருவர் கூட ஒரு சாதனையும் குறிப்பிடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது... எம்ஜிஆர் சாதனைகளே செய்யவில்லையா? அவரும் சில சாதனைகள் புரிந்துள்ளார்,
1. ஒவ்வொரு குடிசைக்கும் மின் விளக்கு
2. இலவச வேட்டி சேலை திட்டம் வருடத்தில் 2
3. குழந்தைகளுக்கான சத்துணவு திட்டம்
4. பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை
5. பள்ளி மாணவர்களுக்கு பாடநூல் திட்டம்
6. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
7. பெரியாரின் தமிழ் எழுத்து சீரமைப்பை ஏற்று நிறைவேற்றினார்
8. ஆரம்ப சுகாதார நிலையங்கள்
9. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
10. வாழையடி வாழை கர்ணம் பதவி ஒழித்து, கிராம அலுவலர்
இப்படி இன்னும் சில சாதனைகள் புரிந்துள்ளார்..
நான் இதைச் சொல்ல வேண்டும் என்று இதை எழுதவில்லை! என்னை எழுத வைத்தது இதுதான் தோழர்களே!
மேலே குறிப்பிட்ட குற்றச்சாட்டு உண்மையா! எம்ஜிஆர் அவ்வளவு துரோகம் நமக்கு செய்தாரா? ஆம் தோழர்களே அது உண்மைதான்! திமுக என்ற வலுவான கட்சி இருக்கும் போது ஏன் அதிமுக இரட்டை இலை விட்டு முளைக்க வேண்டும்? அதற்கு தண்ணீர் பாய்ச்சியது யார்? அதைத் தான் பார்க்க போகிறோம் இங்கே!
எம்ஜிஆர் வள்ளல் என்பவர்களே! அவர் உண்மையில் வள்ளல் தான்! கெஞ்சி உதவிக் கேட்பவர்களுக்கு அவர் வள்ளல்!
அவரை, அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு, போராட்டம் நடத்துபவர்களுக்கு அவர் ஒரு ஹிட்லர்! கடுமையாக நடந்துக் கொள்வார்! கொன்று ஒழிக்கவும் தயங்கியதில்லை!
திமுக ஆரம்பித்தது 1949ல் கொஞ்சம் கொஞ்சமாய் அண்ணாவும் அவர் தம்பிகளும் பம்பரமாக சுழன்று வேலை செய்து, மக்கள் மனதில் இடம் பிடித்து 67ல் ஆட்சியே பிடித்துவிட்டனர்! இரண்டு தரப்புக்கு பயங்கரமான அதிர்ச்சி அவர்கள். 1.பார்ப்பனர்கள் 2. காங்கிரஸ்
இவர்கள் எதிர்பாராத வெற்றி! அதுவும் ஆட்சிபீடம்!
இன்னுமொரு பெரிடியை கொடுத்தார் அண்ணா! ராஜாஜியை கழட்டி விட்டு நேராக சென்று பெரியாரை சந்தித்தார்!
சுயமரியாதை திருமணம் சட்டத்தை இயற்றி பெரியாரின் சுயமரியாதை கொள்கை படிதான் இந்த ஆட்சி நடக்கும் என்றார்! மாநிலத்திற்கு நாடு என்று பெயர் உண்டா? தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது!
அதிர்ந்து போனார்கள் இருதரப்பும்! திராவிட நாடு கேட்டவர்கள்! பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவோம் என்பவர்கள்! விட்டு வைப்பார்களா? சூழ்ச்சியும் துரோகமும் தொடங்கியது அப்போது முதல் தான் தோழர்களே! பஞ்சாபிலும் அகாளிதளம் ஆட்சியை பிடித்தது அதுவும் சேர்ந்து கொண்டது!
பார்ப்பனர்கள், காங்கிரஸ் அல்லாத ஆட்சி தமிழகத்திலும், பஞ்சாபிலும்! இங்கே ஹிந்தி எதிர்ப்பு வேறு 😂😂😂 கேட்கவா வேண்டும் வயிறு பற்றி எரிந்தது அவர்களுக்கு, என்ன செய்தாவது திமுக வை வீழத்த வேண்டும்! பார்ப்பனர்கள் காங்கிரஸில் இருந்தாலும் வர்ணாசிரம படி தலைமை நாக்பூரில் தான் ஆம் ஆர்எஸ்எஸ்
அவர்களும் சேர்த்து திட்டம் தீட்டினர்! காத்துக் கொண்டு இருந்தனர் எதிரிகள்! அண்ணா இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்து நோயால் மறைந்தார்! கட்சியில் சலசலப்பு கேட்க தொடங்கியது! எதிரிகள் மொப்பம் பிடிக்க தொடங்கினர்! ஆனால் யாரும் எதிர்பாராத கலைஞர் முதல்வரானார் கட்சி தலைவரும் ஆனார்! ட்வீஸ்ட் 💪
நாட்டில் இல்லாத திட்டங்கள் சீர்திருத்தங்கள், பெரியாரின் சுயமரியாதை கொள்கைகள் என்று படுவேகமாக இயங்கியது அரசு! 1969 கலைஞர் அரசு! ஒரு வருடம் முடியும் முன்பே! மகர சங்கராந்தி அன்று 1970 ல் துக்ளக் தொடங்கினார் சோ ராமசாமி! ஆம் தோழர்களே பொங்கல் இல்லை! மகர சங்கராந்தி தான் அவர்களுக்கு!
திமுகவை, கலைஞரை எதிர்க்க என்று மட்டும் யாராவது பத்திரிகை தொடங்குவார்களா? அதற்காக தொடங்கினார்கள் துக்ளக்... கலைஞர் எதிர்ப்பு ஒன்று தான் அந்த பத்திரிகையின் மூலதனம்! உயிர் மூச்சு! எல்லாம்! மீண்டும் 1972 ல் வரலாற்றில் இன்று வரை யாரும் பெறாத வெற்றி! 184 இடங்களில் திமுக வென்று...
ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார் கலைஞர்! ஒன்றே குலம் ஒருவனே தேவன்! என்றாவது அண்ணா சொன்னார், கலைஞர் ராமன் எந்த காலேஜில் என்ஜினியரிங் படித்தான்? என்றாரே! அப்போது எப்படி இருந்திருப்பார் என்று எண்ணுகிறேன்! 😂அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்!!! சட்டத்தை நிறைவேற்றியது!
நடுநடுங்கி போனார்கள்! இன்றளவும் ஏன் கலைஞர் எதிர்ப்பு என்று தெரிகிறதா! அவர்கள் அடிமடியில் கை வைத்து விட்டார்! இங்கு எல்லோரும் சமம் என்று நம்மை பெரியாரின் கொள்கைகளால் தலைநிமிர்த்தினார்! இந்தியாவே அதிர்ந்தது! பார்ப்பனர் அல்லாத ஒருவன் அதுவும் எந்த ஜாதியும் கர்ப்பகிரஹத்தில் நுழைந்து
பூஜை செய்து அர்ச்சகர் ஆகலாம் என்றால்... சும்மாவா? இன்றைக்கும் முடியவில்லையே! கேரளாவில் ஒன்று தமிழ் நாட்டில் ஒன்று நடந்துள்ளது! வெறு எங்காவது உண்டா?
இது தான் அவர்களை மிகவும் கடும் கோபத்தில் ஆழ்த்தியது! கிடைத்தார் மகராசன், வள்ளல், பொன்மனச் செம்மல் எம்ஜிஆர்!....
கூடவே ஜால்ரா தட்ட முற்போக்கு கம்யூனிஸ்டுகளும் ஆம் அவர்களும் தான் 😂😂😂 எமர்ஜென்சி இங்கு தேவையில்லை விடுவோம்!

எம்ஜிஆர் ஆட்சியை பிடித்தார்! யார் வழி வந்தார்? உங்கள் கொள்கை என்ன என்று கேட்டபோது அண்ணாயிசம் என்றார்! அது என்ன இசம் எங்கு இருக்கிறது? என்று கிண்டல் வந்ததும் ஒரு கையேடு..
கையேடு அடித்து வெளியிட்டார்! எல்லோரும் சிரித்தனர்! ஏன்? எல்லாம் பெயர் மாற்றம் செய்த திமுக கொள்கை தான்! அது என்ன என்று இன்று ஆட்சியில் இருக்கும் சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ வுக்கு தெரியுமா? 😂😂😂 சரி தொலையட்டும்! அண்ணாவின் கொள்கை படி! பெரியாரின் சுயமரியாதை...
கொள்கைகளை கொண்டு ஆட்சி செய்தாரா? இனிதான் அவர் எப்படி துரோகம் செய்தார்? எப்படி பகடைக் காயாக மாறினார் என்று சில சான்றுகள்!

1. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்து அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்! இவர் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை!

2. இட ஒதுக்கீடு எதிராக..
ரூபாய் 9000 வரம்பு! அதாவது வருட வருமானம் 9000 குறைவானவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடுகள் கிடைக்கும்! (பின்பு தோல்வி அடைந்தது மாற்றி 50% உயர்த்தினார் 😂😂😂)
3. உலகத் தமிழ் மாநாட்டை தொடங்கி வைக்க (எவர் தமிழ் நீசபாஷை என்றாரே) காஞ்சி சங்கராச்சாரி அழைக்கப்பட்டார் 😞😞😞
4. அதே சங்கராச்சாரி நடத்திய இந்து பண்பாட்டு விழாவில் முதல்வராக கலந்து கொண்டார்!!! /பெரியார், அண்ணா வழி வந்தார்???/
5. கலைஞர் ஆட்சியில் காஞ்சி சங்கர மடம் எதிரில் பெரியார் சிலை அமைக்க அனுமதி கொடுத்தார்! அதை ரத்து செய்து, சங்கராச்சாரியார் ஒரு துறவி ஆவார்! சங்கர மடத்தை ஆசிரமம்...
அவர் அங்கு இருக்கும் போது, பெரியாரின் சிலை அங்கு வைக்கக்கூடாது என்று! அனுமதியை நீக்கினார்! /ஆசிரியர் கி. வீரமணி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் வென்றார் சிலை வைத்தார்!💪 இப்போதும் சங்கர மடத்தின் எதிரில் பெரியார் தான் 💪💪💪/
6. பார்ப்பனர் டாக்டர் ஹண்டேவை அமைச்சர் ஆக்கினார்?
/மூன்றாம்தர ஆட்சி என்றாரே அவர்தான் ஹண்டே. அதற்கு கலைஞர் பதிலடி கொடுத்தாரே இது நாலந்தர ஆட்சி அதுவும் சூத்திரன் ஆட்சி என்றாரே அதற்கு பரிசு போல அமைச்சர் பதவி???/
7. சங்கராச்சாரி இந்திய சுற்று பயணம் முடிந்து திரும்பும் போது, தமிழக எல்லையில் அரசு மரியாதையுடன் வரவேற்பு அன்று
ஆர்எம்.வீரப்பன் தலைமையில்! சங்கராச்சாரியை வரவேற்று! அவரை ரிக்சாவில் அமர வைத்து RM. வீரப்பனே அதை இழுத்து வந்தார்!!! / எப்படி கேடுகெட்டு போனார்கள்?/
ஊடகங்கள் கேட்டபோது சொன்னாரே ஒரு சொல்! பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை முடிந்து விட்டது என்றார்! /முடிந்து விட்டதா?
இன்றளவும் NEET வரை வருகிறது எது? பார்ப்பினியம்தானே? சென்னை ஐஐடி ல் கோலேச்சுவது யார் அவாள் தானே?/
எப்படி யாரால் பெரியாரின் கொள்கைகளை கொலை செய்ய பட்டது தெரிகிறதா?

கச்சத்தீவு தாரை வார்த்ததும்,காவிரி வழக்கு கிடப்பில் போடப்பட்டதும், பர்மா பஜார் எரிப்பு,மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு
ஜாதி கட்சி வளர்ச்சி, வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக மேலவை கலைப்பு!!!, மொத்த கோமாளியின் ஆட்சி என்றால் அது எம்ஜிஆர் ஆட்சி தான்..

இதோ வினவு லிங்...
vinavu.com/2014/12/24/mgr…
சொல்லுங்கள் தோழர்களே, இன்றைய நம் நிலைக்கு பார்ப்பினித்தின் கால் பிடித்து, ஒரு பாப்பாத்தியை விட்டுச் சென்றது போதாது என்று! இந்த டயர் நக்கி அடிமைகளையும்...
கலைஞர் யார்யென்று தெரிகிரதா? கலைஞருக்கு நன்றி அஞ்சலி ! வாழ்க கலைஞர் புகழ்!
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to ராஜ்ராஜே
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member and get exclusive features!

Premium member ($30.00/year)

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!