, 23 tweets, 7 min read
My Authors
Read all threads
உதயநிதி : ஒரு திராவிட நாயகனின்
வரலாறு.

திமுக என்பது ஏறத்தாழ 8 கோடி (?) உறுப்பினர்களைக் கொண்ட மகத்தான
மாபெரும் ஜனநாயக இயக்கம்.
#Annaatthe
திராவிடத்தின் உயிர்மூச்சாம் திமுக இளைஞரணியில் செயலாளர் பதவி காலியாக இருந்த காலகட்டத்தில்
நான் எப்படி தடை பல கடந்து
இடையூறுகளை அகற்றி நெருப்பாற்றில் நீந்தி அந்த இளைஞரணி செயலாளர்
பதவியை அடைந்தேன் என்ற சரித்திரத்தை தொகுத்து வழங்குகின்றேன்.
#Annaatthe
இளைஞரணி பதவி காலியாக இருப்பதை அறிந்த திமுக தொண்டர்கள், இளைஞரணி செயலாளர் பதவிக்கு, திமுகவுக்காகவே தன்உடல், பொருள்,
ஆவி என்று அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்ட கடைக்கோடித் தொண்டன் என்னை நியமிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராடினார்கள்.
#Annaatthe
ஆனால் திமுக தலைவர் தளபதி திரு.ஸ்டாலின் அவர்கள், "வாரிசு அடிப்படையில் பதவி கொடுக்க,
திமுக ஒன்றும் சங்கரமடமல்ல"
என்று வெகுண்டெழுந்தார்.
#Annaatthe
"எனது மகன் அரசியலுக்கு வரமாட்டான்"
என்று தான் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெளிவாகவும் நிதானத்துடனும் சொன்னதை
திமுக தொண்டர்களுக்கு நினைவூட்டினார்
தளபதி ஸ்டாலின்.
#Annaatthe
தனது தந்தையை போலவே, வாரிசு அடிப்படையில் பதவி கேட்கும் உடன் பிறப்புக்களை கண்டித்து, ஜனநாயகம்
காத்திட முரசொலியில் கடிதம் எழுதினார்.
#Annaatthe
"தலைவரே, எந்தக்காலத்தில், நம்
கட்சியைப் போல சங்கரமடத்தில் வாரிசு அடிப்படையில் பதவி கொடுத்தார்கள் ?" என்று அப்பாவித்தனமாக கேட்டு பதில்
கடிதம் எழுதிய தொண்டர் ஒருவர்,
மண்டை உடைக்கப்பட்டு, கட்சியை
விட்டு நீக்கப்பட்டார்.
#Annaatthe
'உதயநிதியை நியமித்தே ஆகவேண்டும்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வைத்து, நாளுக்கு நாள் திமுகவினரின் போராட்டங்கள் வலுத்ததைத் தொடர்ந்து, இளைஞரணி செயலாளர் பதவிக்கு, நேர்முகத் தேர்வு
நடத்த தளபதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.
#Annaatthe
மனுநீதி சோழன் வம்சத்தில் வந்த தன்மீது, "தன்மகன் என்பதற்காகவே, எனக்கு ஸ்டாலின் பதவி கொடுத்தார்" என்று, உலகம் பழி சொல்லி விடக்கூடாது என, தலைவர் இந்த நேர்முகத் தேர்வை நடத்தி, எனக்கு பதவி கொடுப்பதை தவிர்க்கிறார்" என்பதை திமுகவின் இளைஞரணியினர்
புரிந்து கொண்டனர்.
#Annaatthe
உடனடியாக, "இளைஞரணி செயலாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வில், உதயநிதியைத் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளக்கூடாது" என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

#Annaatthe
நேர்முகத் தேர்வுக்கான தேதியும் வந்தது. வேறு யாரும் நேர்முகத் தேர்வை நடத்தி, தகுதியும் திறமையுமுள்ள திமுகவின் கடைகோடித் தொண்டன் ஒருவன் வரவேண்டிய அப்பதவிக்கு, தவறான
வழியில் நான் வந்து விடக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். அதனால் தானே அந்த தேர்வை நடத்தினார்.
#Annaatthe
நேர்முகத் தேர்வில் என்னைத் தவிர வேறுயாரும் கலந்து கொள்ளவில்லை என்பதையறிந்த தளபதி ஸ்டாலின் எரிமலையாக வெடித்தார். ஆனால்
கருணாநிதி கற்றுக்கொடுத்த கட்சியின் ஜனநாயக மாண்பு அவரை கட்டிப்போட்டது.
தலைவரின் முன்னால் நான்
அமர வைக்கப்பட்டேன். தளபதி ஸ்டாலின்,
சிறிதும் ஈவிரக்கமின்றி, திராவகத்தில் தோய்த்த கேள்வி அம்புகளை, என்னை நோக்கி வீசினார்.
#Annaatthe
உங்கள் பெயர் என்ன?
உங்களின் வயது என்ன?
நீங்கள் நடித்த படங்களின் பெயர் என்ன? உங்களுக்கு பிடித்த கதாநாயகியின்
பெயர் என்ன?
நயன்தாரா உங்களுடன் எத்தனை
படங்களில் நடித்துள்ளார்?
#Annaatthe
என்றெல்லாம் கேள்விகளால்
என்னை துளைத்தெடுத்த
தளபதி, கடைசியாக தன் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தார்.

"1லிருந்து 10-வரைக்கும் சொல்லுங்கள்"
நான் திகைத்தேன். 1லிருந்து
வரிசையாக சொல்ல ஆரம்பித்தேன்.
#Annaatthe
ஒன்றிரண்டு எண்கள் விடுபட்டு தடுமாறியபோது, ஜன்னலருகில்
நின்ற துரைமுருகன், ஜாடையின்
மூலம் அதை சரி செய்தார்.
#Annaatthe
எல்லா அஸ்திரங்களையும் அடித்து நொறுக்கிய என்னை ஏறிட்டுப்
பார்க்க முடியாத வேதனையில்,
மேசைக்கு அடியில் தான் கையில் வைத்திருந்த கேள்விகளுக்கான துண்டுச்சீட்டை கசக்கி எறிந்தார்
தளபதி ஸ்டாலின்

#Annaatthe
என் தாத்தாவைப் போலவே,
என் தந்தையைப் போலவே,
மாசற்ற ஜனநாயக முறைப்படி
வெற்றி பெற்ற மனஆறுதலில்,
மேசைக்கு அடியில் நான் கையில் வைத்திருந்த, பதில்களுக்கான
துண்டுச் சீட்டை மடித்து, பாக்கெட்டில் சொருகிக் கொண்டு வெளியில்
வந்தேன்.

#Annaatthe
அறிவாலயம் விழாக்கோலம் பூண்டது. தமிழகமே ஆர்ப்பரித்தது.

அறிவாலயத்தின் உள்ளே,"எவ்வளவோ முயற்சித்தும், என்னால் உதயநிதியை வெல்ல முடியவில்லை அண்ணே" என்று, துரைமுருகன் தோளில் சாய்ந்து கண்கலங்கினார் தளபதி ஸ்டாலின்.
#Annaatthe
தனக்கு புத்தம் புது தலைவன் கிடைத்த மகிழ்ச்சியில், இளைஞரணியின்
பழமையான தொண்டர் துரைமுருகன், தன்கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சொன்னார்,
#Annaatthe
"தம்பீ, நீங்க11லிருந்து 20வரைக்கும் சொல்லச் சொல்லி கேட்டிருந்தாலும் கூட, கலைஞர் வழிவந்த ஜனநாயக முறைப்படி... உதயநிதிதான் வென்றாக வேண்டும். காரணம். அது ராயல் ப்ளெட்" என்றார்.

#Annaatthe
தந்தை பெரியாரும், பேரறிஞர்
அண்ணாவும், டாக்டர் கலைஞரும் கற்றுக்கொடுத்த சமூகநீதியை
எண்ணி பெரும் வியப்பில் ஆழ்ந்தார்
தளபதி ஸ்டாலின்.
#Annaatthe
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Udhay

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!