ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்.."இழுத்தார் அன்பர். "வாயுபுத்திரனைப் பத்தியா
கேளேன்" என்றார் ஸ்வாமிகள்.
"ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார்.எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம் என்றார்
பெரியவா மெளனமாக இருக்கவே...அன்பரே தொடர்ந்தார்: "அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள், ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது?" என்று கேட்டு விட்டு பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக
கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.
தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது. கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல. பெரியவா சொல்லப்போகும் பதிலுக்காக அன்றங்கு கூடி இருந்த அனைவருமே
ஆவலுடன் இருந்தனர்.
பெரியவா சொன்ன பதில்
ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார். "பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா...' என்று சந்திரனை அந்தக்
குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.
அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.
சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.
அனுமன்
கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.
வாயுபுத்திரன் அல்லவா ?
அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை
அதே
நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்லமுடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.
இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு
ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம்
தெரிவித்தார்.
உளுந்து தானியம்
இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.ஆக,ராகு தோஷத்தால்
பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.
இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். வடையாகட்டும்... ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால்
செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள்.
இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத்
தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.
இனிப்பு ஜாங்கிரி
வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை
அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே
பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.
எது எப்படியோ... அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன... சர்க்கரையாக இருந்தால் என்ன? மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி" என்று சொல்லி விட்டு, இடி இடியெனச்
சிரித்தார் மஹா பெரியவா.
பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நூறு கோடி மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு அரசாங்கத்தை நொட்டை சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா?
இவர்கள் மீது குடியரசுத் தலைவர் இடம் ஏன் மத்திய அரசு புகார் அளிக்க கூடாது?
ஒரு நீதிபதி ஊழல் குற்றவாளிக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்த வழக்கில் இன்னொரு நீதிபதி 2500+ 1500= 5000
என்ற சுடலை போல கணக்கு போட்டு ஊழலே நடக்கவில்லை என்று வழக்கில் இருந்து குற்றவாளியை விடுவிக்கிறார்.
இவர்களுக்கு பங்களா.. டவாலி.. தோட்டக்காரன்.. வேலைக்காரன்..ட்ரைவர்.. என்று மகாராஜாக்கள் போல உபசரணை வேறு. இவர்களுக்கு ஆசை இருந்தால் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு பேசாமல்
எதிர்க்கட்சியில் பணியாற்ற போகலாம்...
இது நீதிமன்ற அவமதிப்பாக கருதினால் பிரசாந்த் பூஷன் போல ஒரு ரூபாய் மீட்டர் வட்டிக்கு வாங்கியாவது கட்டிவிட்டு போறோம் ..என்ன நாஞ் சொல்றது...🙄
குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம்
உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம்.
விவசாயிகள் பெயரில் நடைபெறும் போலி போராட்டம்.................
. ரயில், சாலை மற்றும்
தகவல் தொடர்பு அமைப்புக்கு இடர்பாடு ஏற்படுத்தி , சீனா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த ஏதுவாக இந்திய ராணுவத்தின் முதுகு எலும்பை உடைக்கத் தான் இந்த துரோக சதி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
விவசாயிகள் என்ற போர்வையில் விவசாய போராட்டம் என்று அழைக்கப்படும் இந்த தர்ணா டெல்லியையும் ஜம்மு-காஷ்மீருடன் இணைக்கும் சாலை மற்றும் ரயில் பாதையில் அமர்ந்திருக்கும் இந்த குண்டர்கள் விவசாயிகள் அல்ல, இவர்கள் இந்திய விரோத கும்பல்!!
குண்டர்கள் மற்றும் தரகர்கள்!!!!.
கடந்த ஒன்றரை
மாதமாக லே,லடாக், காஷ்மீரில் நிலை கொண்ட ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்கு தளவாடங்கள்,
மருந்துகள் மற்றும் வெடிமருந்து ஆயுதங்கள் வழங்கப்படும் சப்ளை செயினை இந்த தரகு குண்டர்கள் நிறுத்தியுள்ளனர்.
அரசாங்கம் தற்போது இந்த பொருட்களை விமானம் மூலம் துருப்புக்களுக்கு கொண்டு செல்கிறது
நமக்குள்...இருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு ..
ராம காரியத்தில் ஈடுபடுவோம்..
ஸ்ரீ ராமபிரானுக்கு ஆலயம் அமைப்பதற்காக துறவிகள் தலைமையில் இயங்கும் குழு.. நன்கொடை
கோரி
உங்கள் இல்லம் தேடி வருவார்கள்..
பெருமாள் நமக்கு அள்ளிக்கொடுத்ததில் கொஞ்சமாவது கிள்ளிக் கொடுங்கள்.
ஸ்ரீராமனுக்கு அழகான ஆலயத்தை அமைக்க.. மொத்த செலவையும் தானே ஏற்று லார்சன் டூப்ரோ கட்டிக் கொடுக்க முன் வந்தது ...டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் கட்டுமான பொருட்கள் தர முன்வந்தது
ஆனால் பொருட்களின் தரம்.. பற்றிய சிந்தனையாலும்... ஆயிரம் ஆண்டுகளுக்கு பெயர் சொல்லுமளவு கட்டுமானம் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தாலும்
ஒரே தரமுள்ள பொருட்களை ஒரே இடத்தில் வாங்க வேண்டிய நிலையில் பணமாக மட்டுமே (கவனிக்க
👉.பணமாக மட்டுமே) நன்கொடை பெற கமிட்டியால் தீர்மானிக்கப் பட்டது.
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி...
நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது!
" நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.
ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று
கேட்கிறாங்க...எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை.
பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு.
எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்.
அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்.
இப்போ பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாது.
கொஞ்ச நாள் கழிச்சு
கடைத்தெரு போனீன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்.
.அரிசி பருப்பு உப்பு புளி, மொளகா, எண்ணெய் -ன்னு ஒன்னும் கெடைக்காது.விவசாய வேலைக்கு ஆள் வராது.
(இப்பவே அப்படிதான் இருக்கு..🙄)ஒரு வேலைக்கும்
ஒருத்தனும் வரமாட்டான்.
எப்படி வருவான்னேன்.?
பணம் வேணும்னு உழைக்கிறாங்க.!
கட்டு கட்டா பணம்