தமிழத்தில் 4762 அரசு கட்டடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என தலைமை செயலாளர் இறையன்பு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இது உண்மையெனில், அந்த கட்டடங்கள் அனைத்தையும் தாமதமின்றி உடனடியாக இடித்து தள்ள வேண்டும். கொளத்தூர் மற்றும் (1/ )
பல்வேறு இடங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்திருந்த குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை அதிரடியாக இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய அரசு, தான் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களையும் தாமதிக்காமல் உடனடியாக அகற்றுவதன் மூலம் மட்டுமே மக்கள் இனி எதிர்காலத்தில் (2/ )
ஆக்கிரமிப்புகளை செய்யாதிருக்கும் நிலையை ஏற்படுத்த முடியும். அதே போல், அரசு நீர்நிலைகளை ஆக்கிரமித்ததற்கு துணை நின்ற/காரணமான அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபட வேண்டும். இதை செயல்படுத்துவதன் மூலம் மட்டுமே மக்களின் நம்பிக்கையை பெறமுடியும். அதை விடுத்து அரசினுடைய (3/ )
கட்டடங்கள் தானே என்று அமைதி காத்தால், பொது மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஒத்துழைப்பை அளிக்க முன்வரமாட்டார்கள்.முதலமைச்சர் @mkstalin அவர்கள் உடனடியாக நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள அனைத்து அரசு கட்டடங்களையும் அகற்ற உத்தரவிட்டு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
'பார்ப்பன மதத்தில்' உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததாக திராவிடர் கழக கொள்கையுடைய ஒரு இடையீட்டாளரும், இஸ்லாமியர் ஒருவரும் பங்கேற்ற ஒரு 'யூ டியூப்' பேட்டியை பார்க்க நேர்ந்தது. உடன் அந்த இடையீட்டாளரை தொடர்பு கொண்டு 'பார்ப்பன மதம்' என்றால் என்ன என்று வினவினேன். அதற்கு பதில் (1/10)
இல்லை அவரிடம். ஆனால் நான் கேட்ட கேள்வியை தவிர்த்து, பாரதியே பதிவிட்டுள்ளார், 'பார்ப்பனன்' என்று கூறுவது தவறா? என்றார். பாரதியார் பார்ப்பனன் என்றும் அழைத்தார், துலுக்கன் என்றும் அழைத்தார். ஆனால், இப்போது 'துலுக்கன்' என்று கூறுவது தவறு என்றால் 'பார்ப்பனன்' என்று கூறுவதும் (2/10)
தவறு என்றேன். அவரிடம் பதிலில்லை. துலுக்கன் என்று அழைப்பதை அவர்கள் விரும்பவில்லை என்றார். அதே தானே பார்ப்பனர்களுக்கும் பொருந்தும்? என்றேன். பதிலில்லை.
ரிக்வேதம் பத்தாவது மண்டலம் பதினெட்டாவது அத்தியாயம் இவ்வாறு சொல்கிறது (10.18). இறந்த மனிதனின் சகோதரர்களும் மற்ற உறவினர்களும் (3/10)
தமிழகத்தில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டேயிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில், நான்கு மடங்கு, ஐந்து மடங்கு என உயர்ந்து மக்களை விழி பிதுங்க வைக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடித்து இடைத்தரகர்கள் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம் என்ன? விலை (1/4)
உயர்வுக்கு மழை ,வெள்ள காலத்தில் விளைச்சல் குறைவு, போக்குவரத்து பிரச்சினை என பல்வேறு காரணங்களை சொன்ன தமிழக அரசு, தொடரும் விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்து சரி செய்திருக்க வேண்டும். ஆனால் இடைத்தரகர்களின் கொள்ளையை, வாய் மூடி, மௌனம் காத்து வேடிக்கை பார்த்து வருவது(2/4)
வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு, நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, உடனடியாக விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் அமைச்சர்களை ஈடுபடுத்த வேண்டும். உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்தும்,எந்த அமைச்சருக்கு கோளாறு உள்ளது என்று ஆராய்ச்சி செய்வதையும்,(3/4)
திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த பிரித்திகா என்ற 10 வயது சிறுமி நேற்று பகல் ஒன்றரை மணியளவில் அப்பள்ளியின் மைதானத்தில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததையடுத்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு (1/6)
செல்லப்பட்டதாகவும், செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது என்றும் மருத்துவர்களால் கூறப்படுகிறது. கொடூரமான இச்சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க சொல்லி அம்மாவட்ட (2/6)
பாஜகவினர் காவல்துறைக்கும், நிர்வாகத்திற்கும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்களும் குற்றவாளிகளை உடன் கைது செய்து நீதியை நிலை நாட்டை வேண்டுமென்று தொடர்புடைய அதிகாரிகளிடம் பேசியுள்ளார்.
இந்நிலையில், பரிதவிக்கும் அந்த குழந்தையின் (3/6)
தமிழக அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் @katpadidmk அவர்களின் கவனத்திற்கு..
அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு வழங்க யாராவது லஞ்சம் கேட்டால் அவர்களை சிறையில் தள்ளவும் தயங்க மாட்டேன்' என தமிழக அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கூறியிருக்கிறார். முதலமைச்சர், நமது ஆட்சியில் யாரும்(1/6)
லஞ்சம் கொடுத்து ஒரு செயலை செய்து முடிக்கக்கூடாது என அடிக்கடி கூறுகிறார். அதன் படியே அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் செயல்பட வேண்டும்.
என்றும் அமைச்சர் துரை முருகன் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, புதுப்பாளையம் (2/6)
உள்ளிட்ட பல பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும், அதிகாரிககள் மற்றும் சில இடைத்தரகர்கள், பயனாளிகளிடம் லஞ்சம் பெறுகின்றனர் என்றும் வீடுகள் கட்டமாலேயே கட்டியதாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பணம் பெறப்படுகிறது என்றும், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள(3/6)
"கோவில்களில் ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்பது காலங்காலமாக உள்ள நடை முறை. இது குறித்து சட்ட வல்லுநர்கள், கோவில்களின் தலைமை குருக்கள், முதல்வருடனும் கலந்து பேசி முடிவை அறிவிப்போம்" : ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் @PKSekarbabu .
கோவில்களில் ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி(1/4)
என்பது 'நடைமுறை அல்ல சட்டம்'. மத விவகாரங்களில், நம்பிக்கைகளில் தலையிடுவதற்கு அரசுக்கோ, அமைச்சருக்கோ எந்த அதிகாரமும் இல்லை. ஹிந்து அறநிலைய துறைக்கு கோவில்களை நிர்வகிக்க உரிமை இல்லை என்பதையும், கோவில் நிர்வாகத்தில் குறைகள் இருந்தால் அதை மேற்பார்வையிடும் அமைப்பு தான் (2/4)
என்பதையும் உங்கள் சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி உண்மையை முதல்வரிடம் கூறுங்கள். சட்டம் கூறுகிறபடி, மசூதிகளில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற சட்ட வல்லுநர்களிடமும், முதல்வருடனும் கலந்து பேசி ஒரு முடிவை எடுங்கள். கட்டாய மத மாற்றம் செய்வோரை தடுத்து நிறுத்த (3/4)
மஹாளய அமாவாசையை முன்னிட்டு தங்களின் குழந்தைகள் நலம் வேண்டி, முன்னோருக்கு திதி தர்ப்பணம் செநீர் நிலைகளில் ய்யும் வழக்கத்தை நீண்ட நாட்களாக ஹிந்துக்கள் (அனைத்து சாதியினரும்) தங்களது வழக்கமாக, கடமையாக, உரிமையாக, நம்பிக்கையாக கடைபிடித்து (1/6)
கொண்டிருக்கும் நிலையில், இன்று அவர்களது உரிமைகள் இன்று மறுக்கப்பட்டும், மிதிக்கப்பட்டும் வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மயிலாப்பூரில் இன்று கபாலி கோவில் குளத்திற்கு மக்கள் வந்த வண்ணம் இருந்தபோதும், காவல்துறையினர் அங்கு அனுமதிக்கவில்லை. இதனால் மக்கள் கோவிலை ஒட்டிய பல்வேறு (2/6)
தெருக்களில் பல இடங்களில் தங்களது கடமையை நிறைவேற்ற வரிசையில் நின்று பரிதவித்து வருகின்றனர். மேலும், இன்று காலை அந்த தெருக்களில் இருந்த பொதுமக்களிடம், காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், மக்கள் கைகளில் இருந்த பழம், தேங்காய் உள்ளிட்டவைகளை தட்டி பறித்து(3/6)