பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக்கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்,
மாநிலக்கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறுவதில்லை என்பது போல் கல்லூரி மாணவர்களிடையே (1/ )
நிலவும் இந்த பகைமை உணர்ச்சி நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தாலும், உயிர் பலியாகும் நிலைக்கு செல்வது கொடூரமானது.கட்டுபாடற்ற கல்வி முறை, ஒழுக்கத்தை போதிக்க மறந்த ஆசிரியர்கள், நிர்வாக திறனற்ற கல்லூரி, பெற்றோர்களின் கண்காணிப்பின்மை,அரசியல் ஆதிக்கம் ஆகியவையே இது போன்ற வெட்கக்கேடான(2/ )
சம்பவங்களுக்கு காரணமாகின்றன. இந்தியாவின் தலைசிறந்த தலைவர்கள் பயின்ற கல்லூரிகளின் மாணவர்கள் தெருக்களில் சண்டையிட்டுக்கொண்டு மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்குவதும், சட்ட ஒழுங்கை சீர்கெடுப்பதும் அராஜகத்தின் உச்சகட்டம். இதை கட்டுப்படுத்த முடியாத கல்லூரிகளின் நிர்வாகங்களும், (3/ )
பேராசிரியர்களும் வெட்கி தலைகுனிந்து நிற்கவேண்டும். மாணவர்கள் தான் வருங்கால இந்தியாவின் தூண்கள் என்பதை மனதில் கொண்டு அவர்களின் வளர்ச்சி, ஒழுக்கம் மற்றும் கல்வியில் அக்கறை செலுத்தாமல், அர்ப்பணிப்பு இல்லாமல் பணியாற்றுவதே இந்த நிலைக்கு காரணம். பெற்றோர்களும் தங்கள் கடமையினை(4/ )
உணராமல், தங்கள் பிள்ளைகளின் நடத்தை குறித்து கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்துவதும் ஒரு முக்கிய காரணம்.
சமூக நீதி, ஒழுக்கம், உரிமை என்றெல்லாம் அடுக்கு மொழி பேசும் அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் தங்களின் சுயநல அரசியலுக்கு மாணவ சமுதாயத்தை பலியிடுவதை நிறுத்த வேண்டும்.(5/ )
கல்லூரி விவகாரங்களில் அரசியல் தலையீட்டை முற்றிலும் நிறுத்த வேண்டும். மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அரசும், அரசியல் கட்சிகளும் உறுதுணையாக இருக்க வேண்டுமேயன்றி இடையூறாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.
எந்த விவகாரமென்றாலும், காவல்துறையை குறை சொல்வதை அனைவரும் நிறுத்த வேண்டும். மாணவ(5/ )
சமுதாயத்தை காவல்துறையின் நடவடிக்கைகள் மூலம் நிறுத்த முடியாது என்பது ஒருபுறமிருக்க, காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம் அரசியல்வாதிகள் தலையிட்டு காவல் துறையை மாணவர்களுக்கு எதிரானவர்களாக சித்தரித்து, காவல்துறையினரை தோற்கடிக்கப்பட்டவர்களாக உருவகப்படுத்துவதே தீர்வுகள் (6/ )
எட்டப்படாமால் மேலும் மேலும் தொடர்வதற்கான முக்கிய காரணம்.
கல்வித்துறையில் அதிகரிக்கும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தான் நிர்வாகமின்மை, ஒழுக்கமின்மை மற்றும் சீர்கேடுகளுக்கு வழிவகுக்கிறது. அரசியல் தலையீடு இல்லாமல் முழு அர்ப்பணிப்போடு கூடிய கல்வியாளர்களை, நேர்மையாளர்களை (7/ )
ஒழுக்கமானவர்களை கல்லூரிகள் தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே அடுத்த தலைமுறையை செம்மைப்படுத்த முடியும். இல்லையெனில் இன்றுள்ள நிலையே தொடரும். எச்சரிக்கை!(8/8)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 16,725 கோடி இழப்பீட்டு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இந்த நிலுவை எந்த அனுமானத்தின் அடிப்படையில் கேட்கப்படுகிறது என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும். கடந்த 2020-21 மற்றும் (1/6)
இந்த நிதியாண்டில் செப்டம்பர் காலாண்டு வரை ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் மத்திய அரசு செலுத்த வேண்டிய இழப்பீட்டு நிலுவை தொகை ரூபாய்.37,134 கோடி மட்டுமே. அதில் தமிழத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை ரூபாய். 2894 கோடி மட்டுமே. இதே காலகட்டத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், (2/6 )
உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு, முறையே 6723 கோடி, 3528 கோடி, 3145 கோடி மற்றும் 3125 கோடி செலுத்த வேண்டியுள்ளது, மேலும், ஜி எஸ் டி சட்டத்தில் குறிப்பிட்டது போல் மாநிலங்களுக்கு சேர வேண்டிய மொத்த நிதியையும் மத்திய அரசு அளிப்பதில் உறுதியாக உள்ளது என்பதை டிசம்பர் 13,2021 (3/6)
மாநிலக்கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, நேற்று அம்பேத்கர் கல்லூரி மற்றும் தியாகராயர் கல்லூரி மாணவர்களுக்குள் மோதல். ஒருவருக்கு வெட்டு, ஆறு பேர் கைது என்ற செய்தி கவலை தருகிறது.(1/9)
இந்த நான்கு கல்லூரிகளும் அரசு மற்றும் அறக்கட்டளைகளை சார்ந்தவை. சென்னை நகரின் மிக முக்கிய பகுதிகளில் அமைந்துள்ளவை. நீண்ட காலமாக செயல்படுபவை. இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள்,முதல்வர்கள் அனைவரும் பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர்களாகவே இருப்பார்கள். தமிழகத்தில் தனியார் கல்லூரிகள்(2/9)
பல இருக்கும் நிலையில், அந்த கல்லூரி மாணவர்களுக்கிடையே இது போன்ற மோதல்கள் நடைபெறாதது ஏன்? அரசு மற்றும் அறக்கட்டளை கல்லூரிகளில் மட்டும் ஒழுக்க குறைவு மற்றும் கட்டுப்பாடற்ற மாணவர்கள் உருவாகுவதற்கு காரணம் என்ன? உறுதியாக இதற்கு காரணம் மாணவர்கள் அல்ல,அந்த கல்லூரிகளின்நிர்வாகங்களே.(3/9)
'பார்ப்பன மதத்தில்' உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததாக திராவிடர் கழக கொள்கையுடைய ஒரு இடையீட்டாளரும், இஸ்லாமியர் ஒருவரும் பங்கேற்ற ஒரு 'யூ டியூப்' பேட்டியை பார்க்க நேர்ந்தது. உடன் அந்த இடையீட்டாளரை தொடர்பு கொண்டு 'பார்ப்பன மதம்' என்றால் என்ன என்று வினவினேன். அதற்கு பதில் (1/10)
இல்லை அவரிடம். ஆனால் நான் கேட்ட கேள்வியை தவிர்த்து, பாரதியே பதிவிட்டுள்ளார், 'பார்ப்பனன்' என்று கூறுவது தவறா? என்றார். பாரதியார் பார்ப்பனன் என்றும் அழைத்தார், துலுக்கன் என்றும் அழைத்தார். ஆனால், இப்போது 'துலுக்கன்' என்று கூறுவது தவறு என்றால் 'பார்ப்பனன்' என்று கூறுவதும் (2/10)
தவறு என்றேன். அவரிடம் பதிலில்லை. துலுக்கன் என்று அழைப்பதை அவர்கள் விரும்பவில்லை என்றார். அதே தானே பார்ப்பனர்களுக்கும் பொருந்தும்? என்றேன். பதிலில்லை.
ரிக்வேதம் பத்தாவது மண்டலம் பதினெட்டாவது அத்தியாயம் இவ்வாறு சொல்கிறது (10.18). இறந்த மனிதனின் சகோதரர்களும் மற்ற உறவினர்களும் (3/10)
தமிழகத்தில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டேயிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில், நான்கு மடங்கு, ஐந்து மடங்கு என உயர்ந்து மக்களை விழி பிதுங்க வைக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடித்து இடைத்தரகர்கள் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம் என்ன? விலை (1/4)
உயர்வுக்கு மழை ,வெள்ள காலத்தில் விளைச்சல் குறைவு, போக்குவரத்து பிரச்சினை என பல்வேறு காரணங்களை சொன்ன தமிழக அரசு, தொடரும் விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்து சரி செய்திருக்க வேண்டும். ஆனால் இடைத்தரகர்களின் கொள்ளையை, வாய் மூடி, மௌனம் காத்து வேடிக்கை பார்த்து வருவது(2/4)
வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு, நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, உடனடியாக விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் அமைச்சர்களை ஈடுபடுத்த வேண்டும். உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்தும்,எந்த அமைச்சருக்கு கோளாறு உள்ளது என்று ஆராய்ச்சி செய்வதையும்,(3/4)
திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த பிரித்திகா என்ற 10 வயது சிறுமி நேற்று பகல் ஒன்றரை மணியளவில் அப்பள்ளியின் மைதானத்தில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததையடுத்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு (1/6)
செல்லப்பட்டதாகவும், செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது என்றும் மருத்துவர்களால் கூறப்படுகிறது. கொடூரமான இச்சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க சொல்லி அம்மாவட்ட (2/6)
பாஜகவினர் காவல்துறைக்கும், நிர்வாகத்திற்கும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்களும் குற்றவாளிகளை உடன் கைது செய்து நீதியை நிலை நாட்டை வேண்டுமென்று தொடர்புடைய அதிகாரிகளிடம் பேசியுள்ளார்.
இந்நிலையில், பரிதவிக்கும் அந்த குழந்தையின் (3/6)
தமிழக அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் @katpadidmk அவர்களின் கவனத்திற்கு..
அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு வழங்க யாராவது லஞ்சம் கேட்டால் அவர்களை சிறையில் தள்ளவும் தயங்க மாட்டேன்' என தமிழக அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கூறியிருக்கிறார். முதலமைச்சர், நமது ஆட்சியில் யாரும்(1/6)
லஞ்சம் கொடுத்து ஒரு செயலை செய்து முடிக்கக்கூடாது என அடிக்கடி கூறுகிறார். அதன் படியே அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் செயல்பட வேண்டும்.
என்றும் அமைச்சர் துரை முருகன் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, புதுப்பாளையம் (2/6)
உள்ளிட்ட பல பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும், அதிகாரிககள் மற்றும் சில இடைத்தரகர்கள், பயனாளிகளிடம் லஞ்சம் பெறுகின்றனர் என்றும் வீடுகள் கட்டமாலேயே கட்டியதாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பணம் பெறப்படுகிறது என்றும், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள(3/6)