#சின்னங்களின்_வரலாறு
#உதயசூரியன்
தந்தை பெரியாருடன் ஏற்பட்ட கருத்துமோதல்களைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா தலைமையில் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. திமுக தொடங்கி 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1953ஆம் ஆண்டு கலைஞரால் திமுகவில் இணைக்கப்பட்டவர்
எம்ஜிஆர். கலை, இலக்கியம் வழியாக இயக்கம் தமிழகம் முழுவதும் இளைஞர்களிடம் வேகமாக செல்வாக்குப் பெற்றது. 1951 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வளரும் நிலையில் இருந்த திமுக அந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தது.
அதே சமயம் தனது தேர்தல் நிலைப்பாடை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதுவே திமுகவின் முதல் தேர்தல் அறிக்கை என கருதப்படுகிறது. இந்தியாவிலேயே அதுதான் முதல் தேர்தல் அறிக்கை என்று கூறப்படுகிறது. அந்த அறிக்கையில், “திராவிடர்களின் கருத்தை அறியாமலும்,
திராவிடர்களின் அடிப்படை உரிமைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் ஒரே கட்சியின் சர்வாதிகார முறையில் தயாரிக்கப்பட்ட அரசியல் சட்டத்தை கண்டிக்கும் வகையில் தேர்தலில் திமுக தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனால், ஆந்திரா,கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய திராவிட இனமொழி வழி மாநிலங்களை
உள்ளடக்கிய திராவிடநாடு கோரிக்கையை ஏற்கும் கட்சிகளை திமுக ஆதரிக்கும்” என்று கூறப்பட்டிருந்தது.
அந்தத் தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற 15 வேட்பாளர்கள் வெற்றிபெற்றாலும் அவர்களில் பலர் திமுகவுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. எனவே, 1957ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நேரடியாக
போட்டியிடுவதா வேண்டாமா என்று திமுக மாநாட்டு வாசலிலேயே வாக்குப்பெட்டிகள் வைத்து தொண்டர்களின் கருத்து அறியப்பட்டது. பெரும்பான்மையோர் விருப்பத்தின் அடிப்படையில் திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தது. அந்த முதல் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு நிறைய சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
112 இடங்களில் போட்டியிட்ட திமுக 15 இடங்களில் வெற்றி பெற்றது. இவற்றில் சேவல் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் பலர் வெற்றி பெற்றிருந்தனர். இதையடுத்து திமுக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றது. தனது சின்னமாக உதயசூரியனை தேர்வு செய்தது. அப்போதிருந்து அந்த சின்னத்திற்கு இரண்டு முறை
சோதனை வந்தது. ஆனால், அந்த சோதனைகளைக் கடந்து இன்றுவரை சுமார் 52 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னத்தை தக்கவைத்திருக்கிறது.

1962 தேர்தலில் 50 இடங்களில் வென்ற திமுக, 1967 தேர்தலில் பெரும்பான்மை பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால், 1969 ஆம் ஆண்டு அண்ணா மறைவைத் தொடர்ந்து
பெரும்பான்மை திமுக எம்எல்ஏக்களின் ஆதரவோடு கலைஞர் முதல்வராக பொறுப்பேற்றார். அவர் முதல்வரான பிறகு 1971ம் ஆண்டு திமுக 184 இடங்களைக் கைப்பற்றி அரசு அமைத்தது. திமுகவின் இந்த வளர்ச்சி மத்தியில் ஆட்சிசெய்த காங்கிரஸுக்கும் தமிழகத்தில் இருந்த தமிழகத்தில் இருந்த திமுக எதிர்ப்பாளர்களுக்கும்
பிடிக்கவில்லை. பெரியாரின் சமூகநீதிக் கொள்கையை அமல்படுத்துவதில் கலைஞர் காட்டிய வேகம் அவர்களுடைய வெறுப்பிற்கு ஒரு காரணமாக இருந்தது.
அவர்கள் திமுகவில் இருந்த எம்ஜிஆரை மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை மூலமாக மிரட்டினர். அன்னிய செலாவணி விவகாரத்தில் சிக்கிய எம்ஜிஆர்
திமுக மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுவெளியில் பேசத் தொடங்கினார். இதையடுத்து அவர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அந்தப் பிளவைத்
தொடர்ந்து திமுகவின் சின்னமான உதயசூரியனை முடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எம்ஜிஆருடன் பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் மட்டுமே வெளியேறி இருந்தனர். அவர் ஒருவரைத் தவிர எம்எல்ஏக்கள் யாரும் வெளியேறவில்லை. எனவே, திமுகவின் சின்னமாக உதயசூரியன் தொடர்ந்தது.

இந்நிலையில் இந்திரா
கொண்டுவந்த நெருக்கடிநிலையை திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்த்தது. எனவே, 1976 ஜனவரி மாதம் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுகவின் முக்கிய தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு மிசா சட்டத்தின்கீழ் விசாரணையே இல்லாமல் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். நெருக்கடி
நிலைக் காலத்தில் மாநிலக் கட்சிகளுக்கு தடைவிதிக்கும் ஒரு நோக்கம் இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதிமுக என்ற பெயரை எம்ஜிஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றினார். ஆனால், திமுக தனது பெயரை மாற்ற மறுத்துவிட்டது. 1977 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்தலில்
திமுக 47 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் திமுக தனது வாக்குவங்கியை தக்கவைத்து மாநிலக் கட்சி என்ற அந்தஸ்த்தையும் சின்னத்தையும் நிரந்தரப்படுத்தியது.

1980 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த திமுக அதிமுகவை படுதோல்வி அடையச் செய்தது. அதைத்தொடர்ந்து வந்த சட்டப்பேரவைத்
தேர்தலில் காங்கிரஸின் பிடிவாதத்தால் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டு உள்ளடி வேலைகளால் தோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு, எம்ஜியார் சாகும்வரை இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்தார். அவருடைய மரணத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு ஆண்டு ஆளுநர் ஆட்சி என்ற பெயரில்
தமிழகத்தை காங்கிரஸ் ஆட்சி செய்தது. அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால், திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றினாலும் கலைஞர் பெண்களுக்கு சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச
மின்சாரம், மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் என்று ஏராளமான திட்டங்களை அறிவித்தார். ஆனால், திமுக ஆட்சி ஆளுநரின் அறிக்கையே இல்லாமல் கலைக்கப்பட்டது. தமிழகத்தில் வைத்து ராஜிவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் விடுதலைப் புலிகள் கொன்றனர். அந்தப் பழியை காங்கிரஸும் அதிமுகவும் திமுகமீது போட்டதால்
தமிழகமே ரத்தக்களறியானது. திமுகவினரின் சொத்துகள் சூறையாடப்பட்டன. அந்தத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. ஆனாலும் தனது வாக்குவங்கியை தக்கவைத்து சின்னத்தை பாதுகாத்துக்கொண்டது.

அந்தத் தேர்தலைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு திமுக இன்னொரு பிளவைச் சந்தித்தது. கலைஞருக்கு எதிராக வைகோ
தலைமையில் திமுகவின் 8 மாவட்டச் செயலாளர்களும், ஏராளமான பொதுக்குழு மற்றும் இளம் நிர்வாகிகளும் போர்க்கொடி உயர்த்தினர். தாங்கள்தான் உண்மையான திமுக என்று திமுகவை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டனர். திமுகவின் சின்னத்தை முடக்கவும் முயற்சி செய்தனர். ஆனால், திமுகவின் சட்டத்திட்டங்களும்
விதிகளும் மிகத் தெளிவாக இருந்ததால் எதிர் அணியின் வேண்டுகோளை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. திமுகவும் அதன் சின்னமும் இரண்டாவது முறையாக தக்கவைக்கப்பட்டது. தங்கள் முயற்சி தோற்றதால் வைகோவும் அவருடைய ஆதரவாளர்களும் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்
கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்கள். வைகோவுக்குப் பிறகு, திமுகவில் கட்சியைப் பிளக்கும் அளவுக்கு பெரிய சம்பவங்கள் நிகழவில்லை. எனவே, இன்றுவரை திமுகவின் சின்னமாக உதயசூரியனே நீடிக்கிறது.

இனியும் நீடிக்கும்...🖤❤️

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #தமிழ்நாட்டு_நூலிபான்கள்

#தமிழ்நாட்டு_நூலிபான்கள் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mythila1977

Feb 5
#தமிழ்நாட்டு_நூலிபான்கள் 4

கம்யூனிஸ்ட் தோழர் பி. ராமமூர்த்தி "அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறிவிட்டது" என்றார் பாராளுமன்றத்தில்

அப்போதைய நிதியமைச்சர் :
"விலை ஏறிய பொருட்களை உங்களை யாரு வாங்க சொன்னது" என்றார்

நிம்மி மாமி பதில் போல தோணுதா?

அவர் மாமி இல்ல மாமா R.வெங்கட்ராமன்
டெல்லியிலும் தமிழ்நாட்டிலும் ராசகோபாலு செல்வாக்கை ஒடுக்கி அவரை செல்லாக்காசு ஆக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தார் காமராஜர்.
ராஜகோபாலின் இடத்தை நிரப்பு பார்ப்பன லாபி அனுப்பி வைத்த மற்றொரு ஜாதி வெறியன் தான் #ராமசாமி_வெங்கட்ராமன் என்ற
சென்னை மாகாணத்தின் கடைசி பார்ப்பன அமைச்சர்
சென்னை மாகாணத்தை பெயர் மாற்ற அண்ணா தீர்மானம் கொண்டு வந்த போதெல்லாம் கடுமையாக எதிர்த்த தமிழின துரோகி. தமிழ்நாடு என்ற பெயர் வட இந்தியாவில் யாருக்கும் வாயில் வராது சென்னை என்ற பெயர் உலகம் முழுவதும் அறிந்ததே என இன்றைய ஆட்டுத்தாடி குரலாக ஒலித்து. தமிழ்நாடு தீர்மானத்தை தோற்கடித்தவர்
Read 18 tweets
Feb 3
#தமிழ்நாட்டு_நூலிபான்கள் 3
மதுரை வந்த காந்திஜியால கவரப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர இரண்டு ஆண்டுகளாக முயற்சித்த காமாட்சி என்ற இளைஞன்
1922 ல் சாத்தூர் தாலுகாவில் பெரியார் தலைமையில் மெட்ராஸ் பிரசிடென்சி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டதில் ஒரு வழியாக சேர்த்துக் கொள்ளப்பட்டார்
பிற்காலத்தில் காமராஜ் என மரியாதையாக இந்தியா முழுவதும் அந்த இளைஞன் அறியப்பட போகிறான் என்பதை பெரியாரே அப்போது அறிந்திருக்கவில்லை. பிராமணர்கள் கோலோச்சி கொண்டிருந்த காங்கிரசில் நம்ம பையன் ஒருவன் இருக்கட்டும் என்று உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து போட்டு கொடுத்திருந்தார்
சேரன்மாதேவியில் வா.வே.சு ஐயர் நடத்திய குரு குலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதால் பெரியார் காங்கிரஸ் காசை செலவுக்கு தர முடியாது என்றார். ராஜகோபாலு கட்டப் பஞ்சாயத்து செய்ததால் ஒரு கட்டத்தில் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.
காமராஜி, சத்தியமூர்த்தி குரூப்பில் இணைந்தார்
Read 12 tweets
Feb 1
#தமிழ்நாட்டு_நூலிபான்கள் 2
காந்தியடிகள் உயிரைக் குடித்த இந்துத்துவ வெறிக்கும்பல்தான் காமராஜரையும் டெல்லியில் உயிரோடு தீ வைத்து எரித்து படுகொலை செய்ய முயன்றது .
தமிழ்நாட்டு நூலிபான்கள் உண்டு வரலாற்றை மறைத்து விட்டது கூட பரவாயில்லை நாடார் சமூகம் மறந்தது எப்படி? Image
1966-ம் ஆண்டு... இந்தியாவில் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சாமியார்கள் கோஷ்டி தீவிரமாக வலியுறுத்திய தருணம்.இதற்காக டெல்லியில் பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஆதரவுடன் பூரி சங்கராச்சாரியார் உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்டது.
நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது.. Image
அப்போது, பசுவதை தடை சட்டத்தை முன்வைத்து ஜனசங்கம்/ ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் மத அரசியல் செய்வதை வன்மையாக கண்டித்து பேசிக் கொண்டிருந்தார் காமராஜர். அதில் உச்சமாக " நம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துட்டுப் போறாங்க என காங்கிரஸ் காரியக் கமிட்டியில் பகிரங்கமாகவே பேசினார் காமராஜர். Image
Read 11 tweets
Jan 31
கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன் என்கிறான் சீமான், கடுப்பான கழக உடன்பிறப்புகள் அவனை ஒரு அப்பனுக்கு பிறந்தவனா இருந்தால் வாடா என்று வம்பிழுக்கின்றனர்.

முதலில் அவனே ஒரு அப்பனுக்கு பிறந்ததாக எங்கும் சொல்லிக்கொள்வதில்லை அவனுக்கு எத்தனை
#கடலில்பேனா_வேண்டும் Image
அப்பாக்கள் என்பதை அவனே மேடை தோறும் சொல்லி வருவதை கவனிக்க வேண்டும்

சீமானின் அப்பாக்கள் பட்டியல் நீளமானது...

திருச்சி சங்கரப்பா...
திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன்
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா
திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் (பழைய செருப்பை பரிசளித்த அப்பா கதை உபயம் மயிராண்டி Image
குடும்பத்தார்)
இஸ்லாமிய தலைவர் பழனிபாபா
மற்றும் மறைந்த தலைவர்கள் பலரும் இவனது அப்பாக்கள் பட்டியலில் வருவார்கள்...

மொத்தத்தில் சீமானின் அப்பாக்களை கணக்கிடுவது கணிப்பொறிக்கே தலை சுற்றும் வேலை என்பதால் சீமானை ஒரு அப்பனுக்கு பிறந்தாக சொல்வதெல்லாம் வீண் வேலை.

ஆனால் பேட்டிகளில் Image
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(