Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் Profile picture
Poovulagin Nanbargal is a 30-year-old movement, working on socio-environmental issues in Tamil Nadu.
Jessayen Thangaraj Profile picture 1 subscribed
Dec 20, 2022 5 tweets 3 min read
காப்புக் காடுகளைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் குவாரிகள், சுரங்கங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

கடந்த ஆண்டுதான் இதற்கான தடையே விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விலக்களிப்பது விபரீதமான முடிவாகும். தமிழ்நாட்டில் செயல்படும் குவாரிகளில் இருந்து பெருமளவிலான கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒரு சில குவாரி முதலாளிகளின் நலனுக்காக இயற்கை பாதுகாப்பில் சமரசம் செய்வது கண்டனத்திற்குரியது.
Dec 19, 2022 4 tweets 2 min read
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் நூறு நாட்களை தாண்டியும் போராடிவருகின்றனர். அமைச்சர்கள் போராடும் மக்களை அழைத்து பேசியபோது கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மீறி தீட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ள ஒப்பந்தபுள்ளிகளை கோரியுள்ளது அரசு. அதை எதிர்த்து இன்று கிராம மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை நோக்கி அமைதி பேரணியை அறிவித்துள்ளார்கள். அதை ஒடுக்க அந்த கிராமத்துனரை அச்சுறுத்தும் வகையில் அதிகளவு காவல் துறையினரை குவித்துள்ளது தமிழக அரசு. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.
Dec 18, 2022 6 tweets 2 min read
அன்னூருக்கு ஒரு நியாயம், பரந்தூருக்கு வேறு ஒரு நியாயமா முதல்வரே?

அன்னூரில் அமையவிருந்த டிட்கோ தொழிற்பேட்டைக்காக விளை நிலங்களை கையகப்படுத்துக்கூடாது என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். . Image அம்மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு, விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதே நடவடிக்கையை அனைத்து விஷயங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என கோருகிறோம்.
May 21, 2021 6 tweets 3 min read
“மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின்”(SIEAA) சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், EIA 2006 சட்டத்தை மீறி நாங்களே எங்கள் கட்டிடங்களை கட்டிவிட்டோம்,அதனால் அனுமதி வாங்குவதற்கு தேவைப்படும் ஆய்வு எல்லைகளை (TOR)வரையறுத்து தாருங்கள்”என @ishafoundation நிறுவனம் அனுப்பிய கடிதம். இந்த விண்ணப்பத்தை 2020 மார்ச்சில் பரிசீலித்த SEIAA, சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு செய்ய ஆய்வு எல்லைகளை (ToR) மட்டுமே வழங்கியது. அதன் பின்னர் நடந்த கூட்டங்களில் ஈஷாவிற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதாக எந்த குறிப்பும் இல்லை.
Jan 22, 2021 5 tweets 1 min read
மனிதனால் மட்டுமே இன்னொரு உயிரினத்தின் மீது இப்படியொரு கொடூரத்தை நிகழ்த்த முடியும்.
தனியார் ரிசார்ட்டிற்கு சொந்தமானவர்கள் இதை செய்திருப்பதாக அறிகிறோம்.
கடும் வேதனைக்குள்ளாக்கும் இந்த காட்சிகளை காண முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மசினகுடி என்பதே 'மசினன்'குடி தான். முழுக்க முழுக்க பழங்குடிகளின் வாழ்விடம். இங்கு யானை வலசை பாதையானது பல ஆண்டுகளாக இருக்கிறது. இத்தனை ஆண்டு காலமும் யானைகளோடும் பிற வன உயிரினங்களோடும்தான் அம்மனிதர்கள் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.
Jan 14, 2021 5 tweets 1 min read
அதானியின் “காட்டுப்பள்ளி துறைமுக” விரிவாக்கத் திட்டம் தேவையற்ற திட்டம். இதன் நோக்கம் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களை மூடவைப்பதுதான். கொரோனா காலகட்டத்திற்கு முன்னுள்ள துறைமுக பயன்பாட்டு தரவுகளை வைத்து பார்க்கும்போது இந்த சந்தேகம் உறுதியாகிறது. தமிழகத்தில் உள்ள மூன்று பெரிய துறைமுகங்களின் சரக்குகளை கையாள்வதற்கான கூட்டுதிறன் வருடத்திற்கு 274.9 மில்லியன் டன்கள். ஆனால் 2019-20ல் இந்த மூன்று துறைமுகங்களும் சேர்ந்து கையாண்டது 122.3மி.டன்கள். அதாவது 44% மட்டுமே.