Discover and read the best of Twitter Threads about #அழகியசிங்கர்

Most recents (4)

#அஹோபில_மடம் #அழகியசிங்கர்
தஞ்சை ஜில்லா மாயவரம் பக்கத்தில் உள்ள தேரழுந்தூர் அக்ரஹாரம், அஹோபில மடத்தில் நடந்த விஷயம் இது. ஊரில் இருந்த ஒரே அக்ரஹாரத்தில் மிச்சம் மீதி இருந்த நான்கைந்து பிராமண குடும்பத்தில் ஒன்று அஹோபில மடத்தின் இந்தக் கிளை.
600 ஆண்டுகளுக்கு முன் ஆந்திரத்தில் ImageImageImage
அஹோபில மலையில் துவங்கிய இந்த மடம்,
ஒரு காலத்தில் விண்ணைப் பிளக்கும் வேத பாராயணம் விழாகள் மற்றும் நான்கு வீதி முழுதும் நிறைந்திருக்கும் பெரிய பெரிய பிராமண அய்யங்கார் வீடுகள் என்று கல கலப்பாக இருந்தது. இன்று அக்ரஹாரங்கள் முஸ்லிம் மயமாகி மசூதிகளில் பாங்கு சொல்லும் சத்தங்கள் மற்றும்
அக்ரஹார திண்ணைகளில் முஸ்லிம் சிறுவர்கள் குரான் ஓதும் சத்தமும் கேட்கிறது. ஆனால் அதுதான் தமிழகக் கோவில்களில் பலவற்றின் நிதர்ஸனம். மடம் கோவில் சார்ந்தது அல்ல. இதற்கும் நில புலன்கள் உண்டு. ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை. வெளியூர் வாசிகள் போவதோ ஒரு வாரம். கோவில் வேலைகள் செய்து
Read 18 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆழ்வார்களிலே, நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தாராம்.
1) மத்ஸ்ய
2) கூர்ம
3) வராஹ
4) நரசிம்ம
5) வாமன
6) பரசுராம
7) ஸ்ரீராம
8) பலராம
9) கிருஷ்ண
10) கல்கி
அவதாரங்களை வரவழைத்தார். முதல் சுற்றில் மத்ஸ்ய, கூர்ம,
வராஹ மூன்று அவதாரங்களும் முறையே மீன், ஆமை, பன்றி ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி, நிராகரித்து விட்டார். நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால், அவரை நிராகரிக்கவில்லை. நரசிம்மர் முதல் கல்க
வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள். இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார். மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி, மூவடி நிலம் கேட்டு, பின் பெரிய காலால், மூவுலகையும் அளந்தவர் நீங்கள். அதுபோல போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள
Read 14 tweets
#அழகியசிங்கர் #அஹோபிலமடம்
திரு @sujathadesikan அவர்கள் பதிவு இது. Just copy pasting here.

1901 ஆம் ஆண்டு தேவனார்விளாகத்தில் ஸ்ரீ உ.வே வித்துவான் பருத்திப்பட்டு வங்கீபுரம் திருவேங்கடாசர்யார் அவர்களுக்கு ப்லவ வருஷம் கார்த்திகை மாதம் பூராட நட்சத்திரத்தில் அவதரித்தார்

ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மாசாரியார் ஸ்வாமி.  
செல்வச்சிறப்படைய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், “இந்த வீடு, தோட்டம், செல்வம் எல்லாம் தம்முடையது கிடையாது, எல்லாம் கண்ணனுடையது, இவற்றுக்கு டிரஸ்டியாக அடியேனை நியமித்துள்ளான், இதை கவனத்தில் கொண்டே காரியங்களைச் செய்து வருகிறேன்” என்று
தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல், மிக்க எளிமையுடனும், வைராக்கியத்துடனும் வாழ்ந்து வந்தார். சிறுவயதில் மற்ற சிறுவர்களுடன் பெருமாள் விக்ரகங்களுடன் விளையாடிக் கொண்டு பொழுதைக் கழித்து சாஸ்திரங்களையும் ஆழ்வார் அருளிச் செயல்களையும் கற்று, சிறுவயது முதலே பலருக்குக் காலட்சேபம்
Read 12 tweets
#அறிவோம்_மடங்கள் #அஹோபிலமடம் #அழகியசிங்கர் அஹோபிலம் என்ற திவ்ய தேசம் ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அஹோ என்றால் சிங்கம். பிலம் என்றால் குகை. இது 108 திவ்யதேசத்தில் 97 வது திவ்யதேசமாகும். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. இங்குள்ள அகோபில மடம் ஆதிவண்
சடகோப மகாதேசிகரால் பொயு 1400ல் நிறுவப்பட்டது. இந்த மடத்தின் முதல் ஜீயராக ஆதிவண் சடகோப மகாதேசிகர் இருந்தார் என்று கூறப்படுகிறது. வைணவத் துறவியான ஆதிவண் சடகோபர், வேதாந்த தேசிகரின் தலைசிறந்த மாணவர். பஞ்சாத்ரா முறைப்படி மடத்தை நிறுவினார். தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும்.
அகோபிலத்தில் எழுந்தருளியுள்ள நரசிம்மர் 600 ஆண்டுகளுக்கு முன் (கி.பி. 1398 ) காஞ்சியில் இருந்த கிடம்பி ஸ்ரீநிவாசாச்சாரியார் கனவில் வந்து அவரை அகோபிலம் வருமாறு அழைத்தார். அகோபில மலையில் அவரது கையில் மாலோல நரசிம்ஹர் விக்ரஹமாக வந்து சேர்ந்தார். அத்துடன் வயோதிகர் உருவில் வந்து கிராமம்
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!