Discover and read the best of Twitter Threads about #அஹோபிலமடம்

Most recents (3)

#அழகியசிங்கர் #அஹோபிலமடம்
திரு @sujathadesikan அவர்கள் பதிவு இது. Just copy pasting here.

1901 ஆம் ஆண்டு தேவனார்விளாகத்தில் ஸ்ரீ உ.வே வித்துவான் பருத்திப்பட்டு வங்கீபுரம் திருவேங்கடாசர்யார் அவர்களுக்கு ப்லவ வருஷம் கார்த்திகை மாதம் பூராட நட்சத்திரத்தில் அவதரித்தார்

ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மாசாரியார் ஸ்வாமி.  
செல்வச்சிறப்படைய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், “இந்த வீடு, தோட்டம், செல்வம் எல்லாம் தம்முடையது கிடையாது, எல்லாம் கண்ணனுடையது, இவற்றுக்கு டிரஸ்டியாக அடியேனை நியமித்துள்ளான், இதை கவனத்தில் கொண்டே காரியங்களைச் செய்து வருகிறேன்” என்று
தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல், மிக்க எளிமையுடனும், வைராக்கியத்துடனும் வாழ்ந்து வந்தார். சிறுவயதில் மற்ற சிறுவர்களுடன் பெருமாள் விக்ரகங்களுடன் விளையாடிக் கொண்டு பொழுதைக் கழித்து சாஸ்திரங்களையும் ஆழ்வார் அருளிச் செயல்களையும் கற்று, சிறுவயது முதலே பலருக்குக் காலட்சேபம்
Read 12 tweets
#அறிவோம்_மடங்கள் #அஹோபிலமடம் #அழகியசிங்கர் அஹோபிலம் என்ற திவ்ய தேசம் ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அஹோ என்றால் சிங்கம். பிலம் என்றால் குகை. இது 108 திவ்யதேசத்தில் 97 வது திவ்யதேசமாகும். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. இங்குள்ள அகோபில மடம் ஆதிவண்
சடகோப மகாதேசிகரால் பொயு 1400ல் நிறுவப்பட்டது. இந்த மடத்தின் முதல் ஜீயராக ஆதிவண் சடகோப மகாதேசிகர் இருந்தார் என்று கூறப்படுகிறது. வைணவத் துறவியான ஆதிவண் சடகோபர், வேதாந்த தேசிகரின் தலைசிறந்த மாணவர். பஞ்சாத்ரா முறைப்படி மடத்தை நிறுவினார். தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும்.
அகோபிலத்தில் எழுந்தருளியுள்ள நரசிம்மர் 600 ஆண்டுகளுக்கு முன் (கி.பி. 1398 ) காஞ்சியில் இருந்த கிடம்பி ஸ்ரீநிவாசாச்சாரியார் கனவில் வந்து அவரை அகோபிலம் வருமாறு அழைத்தார். அகோபில மலையில் அவரது கையில் மாலோல நரசிம்ஹர் விக்ரஹமாக வந்து சேர்ந்தார். அத்துடன் வயோதிகர் உருவில் வந்து கிராமம்
Read 14 tweets
#அஹோபிலம் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் நல்லமலைப் பகுதி, புராண காலத்தில் அரக்கர் தலைவர் இரண்யனின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்திருக்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையின் அமைப்பே ஆதிசேஷன் படுத்திருப்பது போலக் காட்சியளிக்கிறது. அதன் தலைப் பகுதியில் திருப்பதி திருமலையும்,
மையப் பகுதியில் அஹோபிலமும், வால் பகுதியில் ஸ்ரீ சைலமும் அமைந்திருக்கின்றன. கருட புராணத்தின்படி, இந்த மலைப் பகுதியில் நரசிம்ம தரிசனத்துக்காகப் பல ஆண்டுகள் கருடன் தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்யனை வதம் செய்த உருவத்துடன் நரசிம்மர் கருடனுக்குக் காட்சி அளித்தபோது, கருடன் வியந்து
போய் "அஹோ பலா' (இதோ பலம்) என்று குரலெழுப்பியதாகவும் அதனால் இந்த இடத்துக்கு "அஹோபலம்' என்று பெயர் வந்து, அது மருவி அஹோபிலமானதாக ஒரு கருத்து. இரண்யனை வதைத்தைப் பார்த்துக் கொண்டிருந்த முப்பது முக்கோடி தேவர்களும், நரசிம்மரின் உக்கிரத்தைப் பார்த்து மிரண்டு போய்
"அஹோவீர்யம் அஹோசௌர்யம்
Read 24 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!