Discover and read the best of Twitter Threads about #ஆணவம்

Most recents (4)

#ஆணவம்.

அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது.

“இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக் கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை.

வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?”

எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டு பிடிக்க வேண்டும் என்று விரும்பினான். Image
பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்த போது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராம நாமம் ஜபம் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறான்.
அவரிடம் சென்று, “ஏய்… வானரமே…

உன் இராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே…

ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார்?” என்றான் எகத்தாளமாக.

தியானம் களைந்த அனுமன், எதிர் நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்து கொள்கிறார்.
Read 23 tweets
#ஆணவம்

#தற்பெருமை

*ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது.

உன்னிலும் வல்லவர் உலகில் உண்டு.

*குருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை.

பாண்டவ, கவுரவப்படைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
களத்திலே அன்று வில்லாதி வில்லர்களான அர்ஜுனனும், கர்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான்.

தேர் உச்சியில் இருந்த கொடியில், ஆஞ்சநேயர் அழகாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்.
அர்ஜுனனும், கர்ணனும் தங்கள் அம்புகளை ஒவ்வொருவர் தேர்களை நோக்கி எய்கின்றனர்.

அடேங்கப்பா! ஆற்றல் மிக்க அந்த அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவு தள்ளி விழச் செய்கிறது.

அர்ஜுனனின் தேரைத் தாக்கிய அம்பு, அதை முப்பது கல் தொலைவில் விழச்செய்கிறது.
Read 10 tweets
*நானும் சிவன் தான் என்று ஆணவம் பிடித்த*

தேங்காய் கதை தெரியுமா?

பக்தி திருவிளையாடல் கதைகள் மூலம் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த பயனுள்ள கருத்துகள் ஏராளமாக இருக்கின்றன.

அவை அனைத்தும் மனிதனை நெறிபடுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
இவ்வகையில் ஆணவம் கொண்ட தேங்காய் எம்பெருமான் ஈசனிடமே கர்வமாக பேசி வாங்கி கட்டிய கதை தான் இது.

‘யாகவாராயினும் நாகாக்க’, என்ற வள்ளுவன் கூற்றை கடைபிடிக்க தவறியவர்கள் யாராக இருந்தாலும் இறுதியில் அவமானப்பட்டு தான் போக வேண்டி இருக்கும்.
ஒரு முறை கைலாயத்தில் சபை கூடிய போது அங்கு இருந்த தேங்காய் நடப்பவற்றை எல்லாம் பார்த்து கொண்டும், கேட்டு கொண்டுமாய் இருந்தது.

கூட்டம் கலைந்து அனைவரும் சென்றதும் ஆணவம் கொண்ட அந்த தேங்காய் சிவனை நோக்கி திரும்பி பார்த்து நானும் சிவன் தானே? என்றது.
Read 15 tweets
ஏன் மோடியை ஒரு சாரார் கொண்டாடுகிறார்கள், மறுசாரார் எதிர்க்கிறார்கள், வெறுக்கிறார்கள்?
அவசியம் ஒவ்வொரு இந்தியரும் புரிந்து கொள்ள வேண்டிய நேரமிது!

அன்று டாக்டர் #ஹெக்டே லண்டனில் ஒரு கான்பரன்ஸுக்கு போய்விட்டு இந்தியா திரும்புகிறார்.
அதே ஏர் இந்தியா விமானத்தில் மற்றொருவரும் கடைசி நேரத்தில் ஏறுகிறார். அவர் வேறு யாருமல்ல குஜராத்தின் முதல்வர் மோடி என்பதை அறிந்துகொள்கிறார் ஹெக்டே.

பயணிகள் இல்லாத விமானத்தில் இவர்கள் இருவர் மட்டுமே!விமானம் கிளம்புகிறது.
அந்த விமானத்தின் பயண நேரம் கிட்டத்தட்ட 10 மணி நேரம், கொஞ்ச நீண்ட பயணமே அது!

சிறிது நேரம் கழித்து மோடி எழுந்து சென்று விமான பணியாளர்களிடம் தண்ணீர் கேட்கிறார்.
அவர்கள் கொடுத்ததும் குடித்துவிட்டு கிளாஸை திரும்ப கொடுத்துவிட்டு மீண்டும் தன் இருக்கையில் சென்று அமர்கிறார்.
Read 20 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!