Discover and read the best of Twitter Threads about #ஆண்டாள்

Most recents (4)

#வராஹ_அவதார_மகிமை
த்ரிவிக்ரம அவதாரத்தில் உலகெல்லாம் அளந்து நின்றான் எம்பெருமான். அந்த பிரம்மாண்ட ரூபத்தை பெரிது என்று கொண்டாடுகின்றோம். ஆனால் அந்த திரிவிக்ரம அவதாரத்தை விடப் பெரியது வராஹ அவதாரம். உலகத்தை அளப்பதற்குப் பரமாத்மா திருவடியைத் தூக்கி உலகின் மீது வைத்தான். அதே உலகத்தை Image
வராஹ அவதாரத்தில் தன் மூக்கின் மேல் தரிக்கிறான் பகவான், ஆதலால் உலகம் பகவான் மூக்கிலே ஒட்டிக் கொண்டிருக்கிறது. அந்த வராஹ அவதாரிதான் விஸ்வாத்மா – ஜகத்துக்கு தலைவன். திரிவிக்ரமாவதாரத்தை விட பல கோடி மடங்கு நெடிய வராஹ வடிவமானான் பகவான். ஹிரண்யாக்‌ஷனை சம்ஹாரம் பண்ணிய பரமாத்மா, பூமி Image
பிராட்டியை எடுத்துக் கொண்டு மேலே வருகிறார். பூமி பிராட்டி அந்த நேரத்திலே அழுது கொண்டு இருக்கிறாள். பகவானுக்கு வருத்தம். காப்பாற்றுகிற நேரத்திலே அவள் அழுது கொண்டிருக்கிறாளே! தூக்கிவிட்ட பகவானை கொண்டாடி மகிழ்வதல்லவா வழக்கம். நீ சந்தோஷப்பட வேண்டிய நேரத்திலே, இப்படி அழலாமா? என்று
Read 12 tweets
#ஸ்ரீசக்கரத்தாழ்வார் திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் திருவுருவம் இவர். சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்படுகிறார். #சுதர்சனம் என்பதற்கு நல்ல காட்சி என்று பொருள். தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்ட), நல்லவர்களுக்கு
அறச்சக்கரமாகவும் (தர்மச் சக்கரம்) இருப்பது இவர் சிறப்பு. சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் இருப்பார். மூன்று கண்கள் இருக்கும்.(நெற்றிக்கண்) தலையில் அக்னி கிரீடம் தாங்கி, 16 கரங்களில் ஆயுதம் ஏந்தி காட்சியளிப்பார். ஜீவாலா கேசமும், திரிநேத்ரமும், 16 கரங்களும் 16 வித
ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியிலும், இப்பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் கெடுதிகள் யாவும் நீங்கும். அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும். பகவானுக்கு பஞ்சாயுதங்கள் (5). ஆனால் ஸ்ரீ சுதர்சனாழ்வானுக்கு ஆயுதங்கள்
Read 26 tweets
#வராஹர் #சரமஸ்லோகம் #பூமிதேவிக்கு_உபதேசம்
ஹிதன்யாக்‌ஷனை வதம் செய்து பூமி பிராட்டியை மீட்ட போது, பூமாதேவி அழுது கொண்டிருந்தாள். பிராட்டி இப்படி ஏன் அழுகிறாள், “நீ சந்தோஷப்பட வேண்டிய நேரத்திலே, இப்படி அழலாமா?” என்று கேட்கிறார் பகவான். அதற்கு பிராட்டி சொல்கிறாள், “நான் கூக்குரல்
இட்டு அழுதபோது ஓடோடி வந்து ரட்சித்தீர்கள். நான் உங்கள் சிஷ்யை, பத்னி என்பதால் வந்தீர்கள். இந்த பூமியில் இருக்கிற ஜீவன்கள் கூப்பிட்டால், வருவீர்களா? என்னை ரட்சித்த மாதிரி இவர்களை ரக்ஷிப்பீர்களா?” என்று கேட்டாள். பெருமாளும் பூமி பிராட்டிக்குப் பதில் (உபதேசம்) சொல்லத் தொடங்கினார்.
#வராக_சரமச்லோகம்.
ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா;  
விஸ்வரூபம் ச மாமஜம்;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம்;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்;  நயாமி பரமாம் கதிம்;
எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும் போது என்னையே நினத்துக்
Read 12 tweets
#மார்கழிஸ்பெஷல் மாதங்களுள் நான் மார்கழி என்று கண்ணபிரான் கீதையில் அருளியுள்ளார். இதை தனுர் மாதம் என்றும் கூறுவர். இம்மாதம் சிறந்த புண்ணிய காலமாகும். மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது. அதனால் அம் மாதம் முழுவதும் பகவானைத் தியானிப்பதும், அவனைத் தோத்திரம் செய்வதும், Image
அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் நமக்கு சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறது. நாம் நமது மனத்தைத் தெளிவுப்படுத்தி ஆன்மீக மார்க்கத்தில் லயிக்கச் செய்வதற்கு மார்கழி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது. Image
ஸ்ரீமந் நாராயணனின் கேசவ, நாராயண, கோவிந்தா, மாதவா, மதுசூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பன்னிரெண்டு நாமங்களும் பன்னிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக இருக்கும் கேசவா மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது. Image
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!