Discover and read the best of Twitter Threads about #ஆதிசங்கரர்

Most recents (19)

#திருப்பருப்பதம் - #ஸ்ரீசைலம்_மல்லிகார்ச்சுனேசுவரர்_கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரின் பாடல் பெற்ற தலமாகும். மல்லிகார்ஜுன சுவாமிக்காக ஆந்திர மாநிலத்தின் நந்தியால் மாவட்டத்தில் நல்லமலைக் குன்றில், கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது இக்கோவில். ஸ்ரீசைலம் என்றும் அழைக்கப் Image
படுகிறது. சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர்.
சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி, தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்துக் கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன் என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னைக் காண வர முடியாது என்று உத்தரவும் Image
Read 19 tweets
#மகாபெரியவா #ஆதிசங்கரர்
திருப்பூர் கிருஷ்ணன்
இது 1983இல் நடந்த சம்பவம். அப்போது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. அவர் ஆதிசங்கரருக்கு ஓர் அஞ்சல் தலை வெளியிட விரும்பினார். ஆதிசங்கரருக்கு அஞ்சல் தலை வெளியிடுவதற்கு முன்பாக அதுபற்றி மகாசுவாமிகளின் கருத்தை அறிய விரும்பினார் இந்திரா Image
காந்தி. சதாராவில் முகாமிட்டிருந்த மகாசுவாமிகளிடம் கருத்துக் கேட்டு வருமாறு அன்றைய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சி. சுப்பிரமணியத்தை அனுப்பினார். சி.எஸ். ஏன் வந்திருக்கிறார் என்பதை சுவாமிகள் அறிந்து கொண்டார். சற்றுநேரம் கண்மூடி அமர்ந்திருந்த சுவாமிகள் பிறகு சி.எஸ்.ஸிடம்
கேட்டார், “மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட முடிவு செய்துவிட்டு என் ஆசியைக் கோருகிறதா அல்லது அஞ்சல் தலை வெளியிடலாமா என்பது பற்றி என் கருத்தைக் கேட்கிறதா?அஞ்சல் தலை வெளியிட முடிவெடுத்திருந்தால் வெளியிடட்டும்! அதில் நான் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை!”

சி.எஸ். பணிவோடு பதில் சொன்னார்,
Read 6 tweets
#ஆதி_சங்கரர்

மிக நீண்ட பதிவு :

கேரள மாநிலத்தின் பூர்ணா நதிக்கரையில் “காலடி” என்ற ஊரில் இறைவழிபாட்டிலும் தான தருமங்கள் செய்வதிலும் புகழ் பெற்று விளங்கிய சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு, பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தது.

இதனால் இத்தம்பதியர்கள் மன வருத்தமடைந்தனர். Image
அவர்கள் திருச்சூருக்குச் சென்று “வடுகநாதன்” என்ற பெயரில் அங்கு குடிகொண்டிருக்கும் சிவபெருமானிடம் தங்களுக்குக் குழந்தை வரம் தர வேண்டி ஒரு மண்டலம் விரதம் இருந்தனர்.

இவ்விரதத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றினார்.
அவர்களிடம் “உங்களுக்குத் தீய குணங்களுள்ள பல குழந்தைகள் வேண்டுமா அல்லது நற்குணமும் இறை பக்தியும் கொண்டு, பலருக்கும் குருவாய் விளங்கக் கூடிய ஒரு குழந்தை வேண்டுமா?” என்று கேட்டார்.

இதை கேட்ட தம்பதியர்கள் இருவரும் சேர்ந்தவாறு, “எங்களுக்கு நற்குணமுடைய ஒரு குழந்தை போதும்” என்றனர்.
Read 74 tweets
#கனகதாரா_ஸ்தோத்திரம் #சொர்ணத்து_மனை
#ஆதிசங்கரர் சிறுவயதில் சன்னியாசி ஆனவுடன் யாசகத்திற்குப் புறப்பட்டார். ஒரு நாள் அவர் யாசித்த வீடு மிகவும் ஏழ்மையான வீடு. பவதி பிட்சாந்தேஹி என குரல் கொடுத்த ஆதிசங்கரருக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண் தன்னிடமிருந்த
காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். ஒரு ஏழைப் பெண் அளித்த பிட்சையை ஏற்றுக் கொண்ட ஆதிசங்கரர் இந்த வீட்டில் ஒரு சன்யாசிக்கு கொடுப்பதற்கு கூட ஒரு நெல் மணி இல்லாத அளவுக்கு ஏழ்மையில் இருக்கிறார்களே என்று பரிதாபப்பட்டார். உடனே அவரது காதில் உதவி செய்வதாக இருந்தால் பரிதாபப்பட வேண்டும
உதவி செய்ய இயலாத போது பரிதாபப் படக்கூடாது என்று ஒரு அசிரீரீ கேட்டது. இதனை கேட்ட ஆதிசங்கரர் அவளுக்கு உதவ விரும்பினார். மகாலட்சுமியை நோக்கி மனம் உருகப் பாடினார். ஆதிசங்கரர் தனது பாடலில் சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய
Read 10 tweets
#ஆதிசங்கரர் #அனாயாச_மரணம் படுக்கையில் பலநாள் படுக்காமல், உடம்பெல்லாம் பீஷ்மர் போல் ஊசி தைத்துக் கொள்ளாமல், அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே, தண்ணீர் குடிக்காதே என்று வெள்ளைக் கோட்டின் கட்டுப்பாடில்லாமல், ஆஸ்பத்திரிகளை அணுகாமல், ஊரெல்லாம் கடன் வாங்கி பில் கட்டியும் பலனின்றி,
உறவினர் நொந்து கொள்ளாமல், யாருக்கும் ஆஸ்பத்திரி, மருந்து, டாக்டர் செலவு, வைக்காமல் வந்தோம் போனோம் என்று மறையக் கொடுத்து வைக்கவேண்டாமா?

ஆதி சங்கரர் அதற்காக இந்த ஸ்லோகத்தை இயற்றியுள்ளார்.

अनायासेन मरणं विनादैन्ये- न जीवनं देहि मे क्रिपय शम्भो भक्तिं अचन्चलं

AnAyAse- na MaraNam,
VinA Dainyena JIvanam DEhime Kripaya ShambO Bhakthim Achanchalam "

அநாயாசேன மரணம் விநா தைன்யேன ஜீவனம் தேஹிமே க்ருபையா சம்போ த்வயி பக்திம் அசஞ்சலம்

கொஞ்சம் மாற்றியும் இந்த ஸ்லோகம் கிடைக்கிறது

अनायासेन मरणं विनादैन्येन जीवनं । देहान्त तव सानिध्यम्, देहि मे परमेश्वरम्॥

anāyāsena
Read 7 tweets
#ஶ்ரீரங்கம் #பூலோக_வைண்டம் #ஶ்ரீரங்கநாதர்
எங்கும் சுத்தினும் ரங்கனச் சேர் என்பது ஆன்றோர் வாக்கு. ஶ்ரீரங்கத்தில் முழுதாக வாழ கொடுப்பினை இல்லாவிட்டிலும் இறுதி காலத்தையாவது ரங்கனை சேவித்துக் கொண்டு அங்கேயே வாழ விருப்பம் இல்லாதோர் இல்லவே இல்லை என்று அறுதியிட்டு கூறலாம். தினம்
பெருமாள் வீதி உலா வருகிறார். உடல் நலம் இல்லாவிட்டாலும் நம் வாசலில் எழுந்தருளி நமக்கு கடாக்‌ஷிக்கிறார். அதனால் பலருக்கும் வேலையில் இருந்து ஒய்வு பெற்றதும் ஶ்ரீரங்கத்திலேயே குடியிருக்க முயற்சி செய்கின்றனர். இங்கு ஆசார்யர்கள் செய்யும் உபன்யாசங்களை கேட்டு பயன் பெற வேண்டும் என்று
எத்தனை பேருக்கு ஆசை! நமக்கு மட்டுமா அந்த ஆசை? எத்தனை ஆழ்வார்களை ஈர்த்துள்ளது? எத்தனை ஆசார்யர்க்ளை ஈர்த்துள்ளது? அதற்கு என்ன காரணம்? ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல். அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இருந்து கொண்டு அனுபவிப்போம். “வைகுந்தம் அடைவது மன்னவர் விதி” என்று
Read 14 tweets
#ஆதிசங்கரர் #ஶ்ரீநரசிம்ஹர் மண்டனமிஸ்ரர் என்னும் பண்டிதரை வாதில் வெல்வதற்காக அவரது ஊரான மகிஷ்மதிக்குச் சென்றார் ஆதிசங்கரர். பல நாட்கள் கடும் வாதம் செய்து மண்டனமிஸ்ரரை வீழ்த்தித் தன் சிஷ்யர் ஆக்கினார். ஆனால் மண்டனமிஸ்ரரின் மனைவியான உபயபாரதி, “ஸ்வாமி! நீங்கள் பெற்றது பாதி வெற்றி
தான்! நான் என் கணவரில் பாதி. என்னையும் நீங்கள் வாதம் செய்து வென்றால் தான் உங்கள் வெற்றி முழுமை அடையும். என்னுடன் வாதிட நீங்கள் தயாரா?” என்று ஆதிசங்கரரைப் பார்த்துக் கேட்டாள்.
“தயார்!” என்றார் சங்கரர். உபயபாரதியுடன் பல நாட்கள் சங்கரர் வாதம் செய்தார். திடீரென ஒருநாள் காம
சாஸ்திரத்திலிருந்து அவள் கேள்வி தொடுத்தாள். எட்டு வயதிலேயே துறவியான சங்கரருக்குக் காம சாஸ்திரம் பற்றி எதுவுமே தெரியாது. பதில் தெரியாமல் திகைத்தார்.
“என்னிடம் போய் இந்தக் கேள்வி கேட்கிறீர்களே இது தகுமா?” என்று கேட்டார். “கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால் நீங்கள் தோற்றதாகத் தான்
Read 14 tweets
#மாங்காடு #ஸ்ரீகாமாட்சிஅம்மன்
காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகில் மாங்காடு என்னும் ஊரில் உள்ளது காமாட்சி அம்மன் கோவில்.
இங்கு #ஆதிசங்கரர் மகா மேருவை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அன்னை பார்வதி தவம் இருந்து காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்ட இடம். காமா என்ற சொல்லுக்கு
அன்பு, ஈர்ப்பு, காந்தத்தன்மை என்று பொருள். காமாட்சி என்றால் வசீகர கண்களைக் கொண்டவள். மாங்காடு காமாட்சி அம்மன் தவசக்தியின் பெண்மை வடிவமாக போற்றப் படுகிறாள். சென்னையில் உள்ள அம்மன் தலங்களில் மிக பிரபலமான தலம் இது . ஆதி காமாட்சி, தவக்காமாட்சி, தபசு காமாட்சி என்ற திருப்பெயர்களும்
இங்கே அவளுக்கு உண்டு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு என்னும் காரணப் பெயர் பெற்றது. ஈசனை மணப்பதற்காக தேவி ஒற்றைக் காலில் நெருப்பின் மீது நின்று தவமிருந்த இடம் இது. ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடு குண்டத்தின் நடுவில் தன் இடது காலின் கட்டை விரலால்
Read 27 tweets
#மகாபெரியவா #MahaPeriyava please do listen to this speech in Tamil about Maha Periyava shared by one who has spent al lot of time with Him, Mr Veezhinathan.
Know the facts of what a divinity #MahaPeriyava is! #ஆதிசங்கரர் சாஸ்திரத்தை அவர் என்றும் மீறினது இல்லை, நம்மையும் அவ்வழியில் நடக்க வைத்தார்.
It is pure joy to listen to the blessed people’s experience with Maha Periyava. We learn when we listen.
Read 4 tweets
#மகாபெரியவா
சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். 1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது
அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார். அப்போது சுவாமிகள் இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகி இருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து
வரச் சொன்னார்கள். சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை
Read 20 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காவல்காரன் முனியாண்டி தினம் தப்பட்டை அடித்துக் கொண்டு நடுநிசியில் #ஜாக்ரதை என்று கத்திக் கொண்டே போவான். ஒருநாள் அவசரமாக முனியாண்டி வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை சண்முகம் செய்யவேண்டியதாயிற்று.
அவன் பிள்ளை சண்முகம் முன்
ஜன்மத்தில் ஒரு வேதமறிந்த பண்டிதனாக இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது. இரவில் மகன் சண்முகம் தப்பட்டை அடித்துக்கொண்டு ஜாக்ரதை சொல்லிக்கொண்டு அப்பன் முனியாண்டி வேலையை செய்தான்.
அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் அந்தப் பையனைப் பார்க்க வந்தார்.
ஐயோ
ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ, இங்கேயே ஏதாவது தண்டனையை கொடுத்து நிறைவேற்றுவாரோ என்று காவல்காரன் முனியாண்டி நடுங்கினான். ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தார்! எதற்காக? முதல் நாள் இரவு பையன் சண்முகம் ‘ஜாக்ரதை
Read 11 tweets
#மாத்ருகா_பஞ்சகம்
#ஆதிசங்கரர்
ஆதி சங்கரர் தனது மாத்ருகா பஞ்சகம் என்ற ஸ்லோகத்தில் தாயை துதிப்பதிலிருந்து அவரின் மாத்ரு பக்தியை கண்டு நம் கண்கள் குளமாகும். கயாவில் ஸ்ராத்தம் செய்யும் போது ஸ்ராதத்தை நடத்தும் சுவாமி பிண்ட பிரதானம் கொடுப்பதை பற்றி ஒரு நீண்ட விளக்கம் கொடுப்பார்.
குறிப்பாக தாயாருக்கு பிண்ட பிரதானம் கொடுக்கும் போது நாம் கர்ப்பத்தில் இருக்கும் போதும் நம்மை வளர்த்து ஆளாக்கும் போதும் தாயாருக்கு எவ்வளவு உபாதைகளை கொடுத்தோம் என்பதை பற்றி ஓர் அரை மணி நேரம் விரிவாக விளக்குவார். அப்போது நம் கண்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் சுரக்கும். ஆதி சங்கரர்
மாத்ருகா பஞ்சகம் என்ற ஸ்லோகத்தில் தாயை துதிக்கும் விதம் அவரின் மாத்ரு பக்தி நம் கண்களை குளமாக்கும். உன் மரண சமயத்தில் அருகே இருப்பேன் என்று வாக்குக் கொடுத்து தான் துறவியாக மாறுவதற்குத் தன் தாயிடம் சம்மதம் வாங்கியதும், அதன்படி அந்தச் சமயத்தில் தன் தாய்க்குக் கொடுத்த வாக்கை
Read 11 tweets
#சங்கரஜெயந்தி 6.5.2022. ஆதி சங்கர பகவத் பாதாள், சேது-ஹிமாச்சலம் மூன்று முறை பாத யாத்திரையாக திக்விஜயம் செய்து, தன்னுடைய தரிசனத்தால், மக்களை புனிதப்படுத்தி, தன் வாக் அம்ருதத்தினால் அனைவருக்கும் தெளிவு பிறக்கும்படி செய்தார். #ஆதிசங்கரர் #திருவானைக்காவிற்கு வந்த பொழுது,
திருவானைக்காவில் அன்னை அகிலாண்டேஸ்வரி இந்த அண்டசராசரத்திற்கும் தாயார், கருணையே வடிவானவள் தான் ஆனால் இந்த கலியில மக்கள் ரொம்ப பாவம் செய்வதால் கோபமாக உக்கிர ரூபத்தில் அங்கு இருந்தாள். அப்படி ரொம்ப கோபத்துடன் இருந்த அவளை சாந்தப் படுத்தி, மக்களுக்கு அனுக்கிரஹம் கிடைக்க செய்யணும்
என்று சங்கரர் நினத்தார். என்ன கோபமாக இருந்தாலும் அம்மாக்கு தன் பிள்ளையை பார்த்தால் மனஸ்சாந்தி ஏற்படும், சந்தோஷம் வந்துவிடும் என்று எண்ணம் உதிக்க, விநாயகரை அம்பாளுக்கு முன் பிரதிஷ்டை செய்தார். திரும்ப அந்த உக்கிரமான கோபம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, உக்கிர கலையை, இரண்டு
Read 7 tweets
#சிவராத்திரிஸ்பெஷல் #சிவானந்தலஹரி ஸ்லோகம்26ல்
கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்
க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।
ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-
நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26
பரமேஸ்வரனின்
திருவடியை சேவிப்பதின் பேரின்பத்தை வர்ணிக்கிறார்.
“ஹே கி³ரிஶ”– மலையில் வசிப்பவரே!
‘த்வாம் த்³ருʼஷ்ட்வா’ – உங்களை தரிசனம் செய்து
‘தவ ப⁴வ்ய அங்க்⁴ரியுக³ளம்’ – உங்களுடைய மங்களகரமான, சுபமான அந்த திருவடித் தாமரைகள் இரண்டையும்
‘ஹஸ்தாப்⁴யாம் க்³ருʼஹீத்வா’ – கைகளால் பற்றிக்கொண்டு
‘ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந்’ – தலையிலும், கண்களிலும், மார்பிலும் வைத்துக்கொண்டு
‘ஸமாஶ்லிஷ்ய’ – இறுகக் கட்டிக் கொண்டு,
‘ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலான் ஆக்⁴ராய’ – நல்ல மலர்ந்த தாமரைப் போன்ற அந்த பாதங்களின் நறுமணத்தை முகர்ந்து,
‘ப்³ரஹ்மாத்³யைஹி அலப்⁴யாம்’ – பிரம்மாதி தேவர்களுக்கும்
Read 13 tweets
#குருபக்தி
#ஆதிசங்கரர் அவருக்குப் பதினாறு வயதாகும் போது காசியில் அவர் பாஷ்யங்கள் எழுதி முடித்த சமயத்தில் பத்மபாதர் அவருக்கு சிஷ்யரானார். ஆதி சங்கரரின் முதல் சிஷ்யர் பத்மபாதர். சோழ நாட்டிலிருந்து சென்ற அவர் பெயர் ஸனந்தனன். ஆதிசங்கரரை தரிசித்து, பக்தி ஏற்பட்டு, ஆதிசங்கரருக்குக்
கைங்கர்யம் செய்து வந்தார். ஒரு நாள் கங்கையில், அந்த பக்கம் அக்கரையில், பத்மபாதர் இருந்தார். இந்த பக்கம் இக்கரையில ஆதி சங்கரர் இருந்தார். குரு ஸ்னானம் செய்துவிட்டு “துண்டு கொண்டுவா” என்றார். குருநாதர் ஈரமாக நிற்கிறாரே, துண்டு கேட்கிறாரே என்று நடுவில் நதி இருப்பது கூடத் தெரியாமல்
பத்மபாதர் நதியிலேயே நடந்து சென்றார். அப்போது கங்காதேவி அவர் பாதங்களை தாங்கிக் கொள்ள பத்மங்களை- தாமரைகளை உண்டாக்கி அதில் அவர் கால் வைத்துக் கொண்டு வர வழி செய்கிறாள். ஒடி வந்து வந்து துண்டை எடுத்துக் கொடுத்தார். அப்போது ஆதி சங்கரர் அவரிடம் காண்பிக்கிறார் “பார், கங்காதேவி பத்மங்களை
Read 26 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #ஶ்ரீரங்கம்
“வைகுந்தம் அடைவது மன்னவர் விதி' என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும். வைகுந்தம் கிடைக்குமோ கிடைக்காதோ (ஏன் என்று நமக்கே தெரியும்), ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம். வைகுந்த அனுபவம் இங்கேயே கிடைக்கிறது என்றால் Image
யாருக்குத் தான் ஆசை இருக்காது?
#ஆதிசங்கரர் தன்னுடைய ரெங்கநாத அஷ்டகத்தில்
“இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
புனர் ந சாங்கம் யதி சாங்கமேதி!
பாணெள ரதாங்கம் சரணேஸ்ம்பு காங்கம்
யானே விஹங்கம் ஸயநே புஜங்கம்!!”
என்று ஸ்ரீரங்கத்தில் வாழ ஆசைபடுகிறார். ஆசைப்பட்டது அனைத்தையும் கொடுக்கும் இடம்
ஸ்ரீரங்கம். இங்கு உடலை நீத்தவன் பிறப்பதில்லை என்கிறார் ஆதிசங்கரர்.
#பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன்.
#அதிகாரஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி #ஸ்வாமிதேசிகன் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
“ஆராதஅருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்தகோயில்
தோலாத
Read 10 tweets
#மாத்ருபஞ்சகம்
#ஆதிசங்கரர் முதலை வாயில் மாட்டிக் கொண்டு ஆபத்ஸன்யாஸம் எடுத்துக்கொள்ள நேர்ந்தபோது தன் மகன் எப்படியாவது உயிரோடு இருந்தால் போதும் தான் பார்க்க முடியாவிட்டாலும் எங்கேயாவது ஓரிடத்தில் நன்றாக உள்ளான் என்ற நினைவே தனக்குப் பெரிய நிம்மதி என எண்ணி தாயார் ஆர்யாம்பாள் அவரை
சன்யாஸம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார். அந்தச் சமயத்தில் ப்ரைஷோச்சாரண மந்திரத்தைக் கூறி ஆபத்ஸன்யாஸம் எடுத்துக் கொண்ட பகவத்பாதாள், தான் எங்கிருந்தாலும் நலமுடன் வாழவேண்டும் என்ற தாய்மை உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் அன்னையின் வயோதிக காலத்தில் அல்லது அவரது உயிர் பிரியும் நிலையில்
அன்னையின் ஈமச்சடங்குகளை தாயின் ஒரே மகன் என்ற உரிமையில் தான் கட்டாயம் நிறைவேற்றுவேன், தான் ஏற்றிருக்கும் சன்யாசம் ஒரு தடையாக இருக்காது என்றும் அவர் உறுதியளித்தார். அதேபோல சிருங்கேரியில் அவர் முகாமிட்டிருந்தபோது தனது அன்னைக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்று உணர்ந்து உடனடியாக
Read 23 tweets
கஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று சொல்லுவதே ஒரு மந்திரம் தான். அதில் #மீனாக்ஷி தேவியின் சரித்திரம் அற்புதமானது. மலயத்வஜ பாண்டிய மன்னர் மதுரையில் பிள்ளை வரம் வேண்டி அஸ்வமேத யாகம் செய்கிறார். இந்திரன் வந்து நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய் அந்த அம்பாளே உனக்கு வந்து
பிறப்பாள் என்று கூறுகிறார். மலையத்வஜ பாண்டியனுடைய மனைவி காஞ்சனமாலை போன பிறவியில் அம்பாளே தனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்று வேண்டியவள். அதற்கேற்ப மன்னரும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்கிறார். அந்த யாக குண்டத்தில் இருந்து மூணு வயது குழந்தையாக, அம்பாள் பச்சை நிறத்தில் வெளி
வருகிறாள். காஞ்சனமாலை எடுத்து அணைத்து பால் கொடுக்கறாள். குழந்தைக்கு ஆச்சரியமாக மூன்று ஸ்தனங்கள் உள்ளன! மன்னரும் சுந்தரேச பெருமானிடம் போய் வேண்டியவுடன் ‘நீ வளர்த்துக் கொண்டு வா. இந்த குழந்தை தன்னோட கணவனை பார்த்தவுடனே அந்த மூன்றாவது ஸ்தனம் மறைந்துவிடும் என்கிறார் இறைவன். அவ்வாறே
Read 28 tweets
ஒரு பிரம்மச்சாரி திருமணதிற்கு பணம் வேண்டி ஊரில் பலரிடம் கேட்டு கிடைக்காததால் #சுவாமிதேசிகர் இடம் கேட்க, அவர் ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வேண்டி அருளியது #ஸ்ரீஸ்துதி இது போல் #ஆதிசங்கரர் ஒரு ஏழை பெண்மணிக்கு #கனகதாராஸ்தோத்திரம் மூலம் அனுக்கிரகம் செய்துள்ளார். இருவருமே அந்தத் தங்கக்
காசுகளை கையாலும் தொடாமல் உதவி கேட்டு வந்தவருக்கும், மிக ஏழ்மை நிலையில் உஞ்சவிருத்திக்கு போட ஒரு நெல் மணி கூட இல்லாதவருக்கும் மனம் இரங்கி செல்வம் கிடைக்க அருளினார்கள். வந்தனா அனுக்கிரகம் இது. நமக்காக எழுதிய ஸ்துதிகள் இவை. அவர்களுக்கு இதன் தேவை கிடையாது. தமக்கென்று திரவியமே வைத்து்
கொள்ளாமல் யாசகம் எடுத்து ஜீவித்து வந்தவர் #வேதாந்ததேசிகர் பெரியவர்களாக யார் இருந்தாலும் அவர்களுக்கு விரோதிகள் இருப்பார்கள். அந்தப் பெரியவரை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்களும் இருப்பார்கள். ஸ்ரீவேதாந்த தேசிகருக்கும் இப்படிப்பட்ட விரோதிகள் இருந்தார்கள்
Read 13 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!