Discover and read the best of Twitter Threads about #இந்த_நாள்_இனிய_நாள்

Most recents (15)

புத்தரை வாய்க்கு வந்தபடி திட்டிய ஒரு கயவன், அவர் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் சாதிப்பதைக் கண்டு,

"உனக்குச் சூடு, சுரணையே இல்லையா?" என்று கேட்ட போது புத்தர் கூறினாராம்:

''உன்னிடம் இருக்கும் ஒரு பொருளை எனக்குத் தருகிறாய். அதை நான் ஏற்காவிடின் அது என்னவாகும்.?"
அவன்,''நீ ஏற்காவிடின் அது எனக்கே சொந்தமாகும்'' என்றானாம். ''உன் இழிமொழிகளை அப்படித் தான் நான் ஏற்கவில்லை" என்று அவர் 'நெத்தியடி' அடித்தார்.

நம் உடலில் உள்ள இதயம், கெட்ட இரத்தத்தை உள்ளே அனுமதிப்பதில்லை.

சிறுநீரகம் கழிவுப் பொருளை வெளியே தள்ளுகிறது.
நுரையீரல் என்ன செய்கிறது.?
கேடான கார்பன்- டை-ஆக்சைடை அப்புறப் படுத்துகிறது.

கண், சிறு தூசி பட்டாலும் கணப் பொழுதில் நம் இமையை மூடி விடுகிறது.

மூக்கு சிறு துகள் நுழைந்தாலும் தும்மி வெளியேற்றுகிறது.

நம் வாய்க்குள் சிறு கல் நுழைந்தாலும் நாக்கு உடனே கண்டறிந்து நம்மைத் துப்பச் செய்கிறது.
Read 4 tweets
ஒரு சிறிய நகரம்.

அதில் ஒரு சிறந்த வயலின் வித்வான் வாழ்ந்து வந்தார்.

அவர் வயலின் இசைக்கு யாவரும் வசப்படுவர்.

அப்படிப்பட்ட ஞானமுடையவர்.

இந்நிலையில் அவ்வூரில் முகாமிட்டிருந்த சர்க்கஸ் கூடாரத்திலருந்த புலி ஒன்று தப்பித்து ஊருக்குள் புகுந்து விட்டதாக தகவல் பரவியது. (1)
இதைக் கேட்ட மக்கள் தங்களை பாதுகாப்பதில் ஈடுபட்டதோடு அவர்கள் மிகவும் நேசித்த வயலின் வித்வானையும். எச்சரித்தனர்.

இந்த நிலையில் வித்துவானின் கெட்ட நேரம், புலியும் அவர் முன்னே வந்து நின்றது

வித்வான் பயப்படவே இல்லை. பட்டென்று தன் வயலினை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். (2)
அவருடைய நம்பிக்கை நம் இசை கேட்டு புலி நம் வசமாகிவிடும் என்று.

மக்கள் இவரின் செயலை பார்த்து இது என்ன முட்டாள்தனம் என்று பார்த்து கொண்டிருக்கும் போதே,

நல்ல வேளை சர்க்கஸ் கூடாரத்திற்கு புலி ஊருக்குள் வந்த தகவல் போய்,
சர்க்கஸின் ரிங் மாஸ்டர் அங்கு வந்து சேர்ந்தார். (3)
Read 5 tweets
ஒருவர் தனக்கு பெரிய கஷ்டம் வந்து விட்டது என்றும், அதை எப்படித்தான் சமாளிப்பது என்று தெரியவில்லை தனது நண்பர் ஒருவரிடம் புலம்பி கொண்டே இருந்தார்.

அந்த நண்பர் தினமும் கேட்டு கேட்டு அலுத்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார் அவர் நண்பர். கஷ்டப்படுகிற நண்பருக்கு ஒரு அறிவுரை சொன்னார்:
"ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணிய எடுத்து உங்க உள்ளங்கையில் வைத்து இருங்கள்" என்று மட்டும் சொல்லி விட்டு மறுநாள் சந்திப்பதாக கூறி சென்று விட்டார்.

கஷ்டத்தில் உழல்பவர் கொஞ்சம் சிந்தித்தார்.

பின்பு ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு தன் கையில் வைத்திருக்க ஆரம்பித்தார்.
மறுநாள், நண்பரை பார்க்க வேகமாக வந்து விட்டார் தண்ணீரை கிண்ணத்தில் பிடித்து கையில் வைத்திருந்தவர்.

நண்பர் அவரை பார்த்து "என்ன நண்பா, நான் சொன்ன மாதிரி செய்தீங்களா?" என்றார். 

ஆமாம் நண்பரே, கையிலேயே வைத்திருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது கையெல்லாம் ரொம்பவும் வலிக்கிறது.
Read 6 tweets
கேரளாவில் ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூன்று சென்டுல ஒரு வீடு.

வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட்டையில் பச்சையா பாசம் படிந்த மரங்கள்.

பாக்குற எல்லா பக்கமும் பச்சை பசேல்னு ஒரே குளிர்ச்சி.
இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு.

அந்த வீட்ல ஒரு வயதான தம்பதிகள். அவங்கள தேடி யாரும் வந்த மாதிரி இல்ல. பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல.

நாங்க புதுசா கல்யாணம் ஆன இளம் ஜோடி. வேலைக்கும் போறோம்.
வார நாட்களில் எங்க ரெண்டு பேருக்கும் வேலைக்கு போய்ட்டு வரவே சரியா இருக்கும்.

எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு Sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி.

காபி குடித்து விட்டு ஒரு மணி நேர சம்பாஷணைக்கு பின் தான் வீடு வருவோம். நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும்.
Read 11 tweets
ஒரு ஊரில் தச்சர் ஒருவர் இருந்தார்.

அவர் காலையில் அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.

போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக்கொண்டே சென்று மெக்கானிக் கடையில் பழுது பார்த்து புறப்பட்டார்.
அதனால் ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்குச் சென்றார்.

தாமதமாக வேலைக்கு வந்ததால் அவருடைய முதலாளி அவரை கடுமையாக திட்டினார்.

அதனால் மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.
சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம்பட்டது.

இது என்னடா நமக்கு இன்று வந்த சோதனை.?
என்று நினைத்தபடியே தன் காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார்.

சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது.

என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே.? என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் விரைவாக முடித்தார்.
Read 13 tweets
ஒரு முறை ரமண மகரிஷியை ஒரு விழாவிற்கு அழைத்திருந்தார்கள் அருளுரை வழங்க வேண்டி.

விழாவில் அனைவருக்கும் அறுசுவை உணவு தயாராகி இருந்தது.

ரமணரின் அருளுரை முடிந்து உணவு இடைவேளை வந்தது.

பெரும் திரளான கூட்டம். எல்லாம் போக பிச்சைக்காரர்கள் வேறு கூட்டமாக உணவருந்த வந்து விட்டனர் அங்கே.! Image
நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு பெரிய தர்ம சங்கடமாகிவிட்டது.
என்ன செய்வது என்றுத் தெரியவில்லை.

ஒரு முடிவுக்கு வந்து பிச்சைக்காரர்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்று மைக்கில் அறிவிப்பு செய்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்.

மிகவும் சிரமப்பட்டு பிச்சைக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ரமணமகரிஷிக்கு உணவு பரிமாறிவிட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மகரிஷியைத் தேடிக்கொண்டிருந்தனர்.

இறுதியில் "ரமணமகரிஷி பிச்சைக்காரர்களுடன்" வெளியே அமர்ந்திருந்தார்.!

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரே அதிர்ச்சி. பதைபதைத்துப் போனார்கள். ரமணரை உள்ளே வந்து உணவருந்த வேண்டினார்கள்.
Read 5 tweets
ஒரு அநியாயக்கார அரசன் ஒருவன், தன்னை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக ஒரு குடிமகனைக் கைது செய்து "மூன்று மீட்டர் மாத்திரமே பரப்பளவான ஒரு தனிச் சிறையில்" அடைக்கும்படி கட்டளையிட்டான்.

நிரபராதியான அந்த குடிமகன் சிறையில் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான்.

"நான் நிரபராதி அரசே.!"
இந்த நாட்டில் கருத்து சொன்னது ஒரு குற்றமா.?
ஏன் என்னைக் கைது செய்தீர்கள்? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்கள்?
என்று உரக்கக் கதறினான்.

பின்னர் அவனை "ஒரு மீட்டர் மாத்திரமே விசாலமான ஒரு தனிச் சிறையில்" அடைக்கும்படி கட்டளை வந்தது.

மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தான் அந்தக் குடிமகன்.
ஆனால் இம்முறை "நான் நிரபராதி" என்ற வாதத்தை மறந்து விட்டான்.

"இது என்ன கொடுமை.! இந்தச் சிறையில் எப்படி இருப்பது.? உறங்குவது.? அமர்ந்து கொண்டுதானே உறங்க முடியும்.? இது உங்களுக்கே தப்பாகத் தெரியவில்லையா.?" எனக் கதறினான்.

சினம் கொண்ட காவலர்கள் வேறு ஒரு முடிவு செய்தார்கள்.
Read 10 tweets
1994 ஜனவரி 17ல் நில நடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெரிதும் பாதிக்கப் பட்டது.

இரண்டு மூன்று நாட்கள் கழித்தும் அங்கு நிலைமை சரியாகவில்லை.

தெருக்களைக் வாகனங்கள் கடக்க மிக அதிக நேரம் தேவைப்பட்டது.

அங்கங்கே கார்கள் மணிக்கணக்கில் நின்றிருந்தன.
எங்கே சிக்கல் என்றுத் தெரியவில்லை.
ஒரு பிரபல தொலைக் காட்சி சேனல் நிருபர்கள், நின்று கொண்டிருந்த ஒவ்வொரு காரின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி அழைத்து பயணிகளின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு காரோட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். "இந்த கலிபோர்னியா மாகாணமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத இடமாகி விட்டது.!"
முதலில் தீ பரவியது.
பிறகு வெள்ளம்.
இப்போதோ பூகம்பம்.

காலையில் எத்தனை சீக்கிரம் வீட்டை விட்டுக் கிளம்பினாலும் அலுவலகம் சென்று சேர தாமதம் தான் ஆகிறது. சே, என்ன தான் செய்வது? என்று மனிதர் பொரிந்து தள்ளி விட்டார்.

அந்த நிருபர் அடுத்த காரின் ஜன்னலைத் தட்டி இதே கேள்வியைக் கேட்டார்.
Read 10 tweets
சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர்
பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது.

சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.
குப்பை எடுத்துச் செல்லும் லாரி ஒன்று சற்று தள்ளி நின்றிருந்தது.

மூன்று துப்புரவு ஊழியர்கள் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை கூடைகளில் எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பல முறை வந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் சென்றார்கள்.
ஒவ்வொரு முறையும் அந்த லாரியில் போட்டு வர வேண்டி இருந்தது.

அவர்களில் ஒருவர் தான் சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியவர்.

மற்ற இரு ஊழியர்களும் சுரத்தே இல்லாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க இவரோ அந்த வெயிலையும், செய்யும் வேலையின் பளுவையும்
பொருட்படுத்தவேயில்லை.
Read 11 tweets
1) "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்.!"
இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்த போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்..!
எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர். அவருக்கா இப்படி ஒரு சிரமம்.?
2) ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன்.

அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..! ஒரு ஹெல்ப் பண்ணு எனக்கு.
உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே.!'
எவ்வளவு பெரிய நடிகர்!
MGR, சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!
படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?
Read 10 tweets
1903-ஆம் ஆண்டு.
இடம் லண்டன்.

மேடை நாடகங்கள் மிகப் பிரபலமாக இருந்த காலகட்டம் அது.

மாலை நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவழிக்க நாடகக் கொட்டகைகளுக்கு மக்கள் திரண்டு வந்தார்கள்.

லண்டனில் ஏராளமான நாடக குழுக்கள் ஓர் அரங்கில் "ஷெர்லாக் ஹோம்ஸ்' நாடகத்துக்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது.
தினசரி ஒரு சிறுவன் ஒத்திகைக்கு வந்து கொண்டிருந்தான்.

இறுதிக்கட்ட ஒத்திகை அன்று.
மறுநாள் நாடகம்.

'பில்லி' என்ற வேலைக்காரன் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு அன்று காய்ச்சல் என்று தகவல் வந்தது.

பாத்திரம் வேலைக்காரன் என்றாலும், நிறைய வசனம் அந்த கேரக்டருக்கு.
பேச வேண்டிய முக்கியமான பாத்திரம்.

தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

புதிதாக யாரையும் ஏற்பாடு செய்ய முடியாத நிலை.

வழக்கமாக அந்தச் சிறுவனைப் பார்த்த இயக்குநர் "டேய் தம்பி நடிக்கிறாயா?' என்று கேட்டார். காதில் தேனாகப் பாய்ந்தது அந்தக் கேள்வி.
Read 18 tweets
ஒரு நாள் கௌதம புத்தர் பிக்சைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர் உபதேசங்களில் உடன்பாடில்லாத ஒருவன் அவரைக் கண்டபடி ஏசினான்.

அவன் திட்டத் திட்டப் புன்னகை மாறாமல் புத்தர் சென்று கொண்டிருந்தார்.

பின்னாலேயே வந்து திட்டி ஓய்ந்தவனுக்கு அவர் புன்னகை என்னவோ செய்தது.
சகிக்க முடியாததாகவும், வியப்பைத் தருவதாகவும் இருந்தது.

என்ன மனிதர் இவர் என்று வியந்தவன் "ஏனப்பா, இத்தனை நான் திட்டியும் கொஞ்சமும் சூடு சுரணை இல்லாத ஆளாய் இருக்கிறாயே?" என்று கேட்டான்.

கௌதமர் அவன் சொன்னதை அமைதியாகக் கேட்டார். திரும்பவும் புன்னகை மலர்ந்தது அவர் முகத்தில்.
"ஐயா, ஒரு பொருளை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கையில் அவர் வாங்கிக் கொள்ள மறுத்தால் அப்பொருள் யாருக்குச் சொந்தம்?" என்று கேட்டார்.

"கொடுக்க முயன்றவருக்குத் தான் சொந்தம். இதிலென்ன சந்தேகம்?" என்றான் அவரைத் திட்டியவன் பதிலாக அவர் கேட்ட கேள்விக்கு.

திரும்பவும் புன்னகை புத்தரிடத்தில்.
Read 8 tweets
ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள்.

உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டு பிடிக்கிறீர்கள்.

அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்கு அந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞர் ஒருவரையே அழைக்கிறீர்கள்.
அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட.

நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டு பிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள்.

சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டு பிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்கிறார்.
பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களையும் புட்டு புட்டு வைக்கிறார்.

உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.?

உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்.?

அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா.?
Read 15 tweets
உருசியா நாட்டை சேர்ந்தவர் நிஸ்னி நவ்கிரோட் என்கிற கிராமத்தில் 1868 மார்ச் 28ந்தேதி பிறந்தார் மாக்சிம் கார்க்கி.

அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் தான் இவரது இயற்பெயர்.

5 வயதில் இவர் தந்தை இறந்து போக, தாய் உயிருடன் இருந்த போதும் தாயன்பு கிடைக்காமல் பாட்டி அக்குலினாவிடம் வளர்ந்தார். Image
குடும்பத்தில் வறுமை.
விளைவு, பள்ளிக்கு போவதை 7 வயதிலேயே நிறுத்தி விட்டார்.

8 வயதிலேயே வேலைக்கு சென்றார். அங்கு பல தரப்பினரோடு பழகினார், அதோடு கொஞ்சம் படித்து வைக்கலாம் என தனிப்பட்ட முறையில் படிக்கத் துவங்கினார். இத்தாலி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மனி மொழிகளை கற்றுக் கொண்டார்.
1892ல் இவர் முதல் சிறுகதை மகர் சுத்ரா என்கிற தலைப்பில் மாக்சிம் கார்க்கி என்கிற பெயரில் எழுதினார்.

அது வெளி வந்தபின் தொடர்ந்து அந்த பெயரிலேயே எழுதத் துவங்கினார்.

1899ல் இவரது முதல் நாவல் வெளிவந்தது. ரஷ்யாவின் ஜார் மன்னராட்சியை எதிர்த்து புரட்சிக்கர கட்டுரைகளை எழுதி வந்தார்.
Read 16 tweets
ஆளவந்தாரின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் இலைகள் உதிர்ந்துபோன மொட்டை மரம் ஒன்று இருந்தது.

அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான், “இந்த மரத்தை ஏன் இப்படியே வைத்திருக்கிறீர்கள்?”

“அது வீட்டுக்குப் பின்னாடி தானே கிடக்கட்டும்‘னு விட்டுவிட்டோம்.” என்று பதில் சொன்னார் ஆளவந்தார்.
“மொட்டை மரத்தை இப்படி விட்டு வைப்பது கூடாது. அது நல்லதல்ல.

மேலும் அந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டிய பிறகும் நீங்கள் உபயோகிக்கக் கூடாது.

ஏதாவது மோசமான சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடியே அந்த மரத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெளியே வீசி விடுங்கள்" என்றான் பக்கத்து வீட்டுக்காரன்.
அவன் யோசனைப்படியே, ஆளவந்தாரும் மறுநாள் மரத்தை வெட்டித் தள்ளினார். சிறு துண்டுகளாக்கி வெளியே தூக்கிப் போட்டார்.

அந்த மரத் துண்டுகள் வெளியே வந்து விழுந்த சமயத்தில், பக்கத்து வீட்டுக்காரன் தன் இரு மகன்களுடன் சிறு துண்டு துண்டுகளாக கிடந்த அந்த மரத்துண்டுகளை உடனே எடுத்துப் போனான்.
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!