Discover and read the best of Twitter Threads about #உடன்கட்டை

Most recents (3)

கொலை - வீரத்தின் வெளிப்பாடு!

பண்டைக் காலங்களில் (சங்க இலக்கியங்களில், பின் அதையொட்டிய காலங்களில்) கொலை மனித இனத்தின் வீரத்தின் வெளிப்பாடாகக் காணப்படுகின்றது.

" பெருமையும் உரனும் ஆடூஉ மேன" என்று பழந்தமிழ் இலக்கணம் ஆடவனுக்கு இலக்கணம் காட்டுகிறது.
இந்தப் பெருமையும் நெஞ்சுரனும் மனிதக் கொலைகள் மூலமே வெற்றியாகவும், விழுப்புண்ணாகவும் மக்களிடம் வெளிப்பட்டன.

இங்கு மனிதக் கொலைகளே முதன்மை பெற்றன. நாடு பிடிக்கும் அரசியல் நோக்கங்களுக்காக நடைபெறும் போர்களில் மனித உடல்களே மன்னனுக்குக் கவசம்.
எதிரிகளில் எத்தனை பேர் இறந்துபட்டனர், தன் படைவீரர்களில் எத்தனை பேர் மடிந்தனர் என்பதை வைத்தே நடைபெற்ற போரை மதிப்பிட்டனர்.

அறநெறிக் காலங்கள் என்று குறிப்பிடப்பட்ட இந்தக் காலங்களிலெல்லாம் மனித உயிர்கள் வீரத்தின் அடையாளங்கள். இதைச் சமூகம் அன்று அங்கீகரித்திருந்தது என்பது வெளிப்படை.
Read 11 tweets
வராலற்று புத்தகங்களில் மிகத்தவறாகவே இடம் பெற்றிருக்கும் இவர், ஒரு #மிகப்பெரிய #சாம்ராஜ்யத்தின் #சக்ரவர்த்தி, #எளிமையானவர், தன்னுடைய மதத்தின் மீது தீராத பற்று கொண்டவர், பிற மதத்தின் கலாச்சாரத்தை மதித்தவர், மாறாக 'சதி-உடன்கட்டை ஏறுவது' போன்ற சமூக கொடுமைகளுக்கு எதிராக களம் இறங்கிய..
சமூகசீர்திருத்தவாதி, ஹிந்துக்களின் கோயில்களுக்கு பல இடங்களில் அவரது அரசு தரப்பில் நிலம் கொடுத்தவர்
#முழு #இந்தியாவையே ஆண்ட பேரரசின் சொந்தக்காரர் #ஒளரங்கசீப் #மறைந்த #தினம் #இன்று அவர் பற்றி சில உண்மைகள்...
ஒளரங்கசீப் அவையிலும் இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் இருந்தனர். ஆனால் அவர்ஆட்சிக்கு வந்த பதினோராவது ஆண்டிலிருந்து அவற்றுக்குத் தடைவிதித்தார். இஸ்லாம் மத நெறிகளின் படி இசை, #ஆடல், #நடனம் போன்ற சிற்றின்பங்கள் கூடாது. ஒளரங்கசீப்பும் அதைத்தான் கொள்கையாகக் கடைபிடிக்க ஆரம்பித்தார்.
Read 15 tweets
கணவன் இறந்த உடன் மனைவி #உடன்கட்டை ஏறவேண்டும் என்பதை ஒழித்த போது இந்துக்களின் மனம் புண்பட்டது.

#குழந்தை திருமணத்தை தடை செய்யப்பட்டபோதும் இந்துக்களின் மனம் புண்பட்டது.

இந்துக்களிலேயே வேறு வேறு சாதியை சேர்ந்தோர் #திருமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டது.
இளம் விதவைப்பெண்கள் #மறுமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டது.

குறிப்பிட்ட சமூகத்துப் பெண்கள் #மாராப்பு சேலையை அணியும் உரிமையை பெற்றபோதும்
இந்துக்களின் மனது புண்பட்டது.

#தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்லலாம் என்ற உரிமையை பெற்றபோதும் இந்துக்களின் மனது புண்பட்டது.
பன்றி, மாடு, ஆடு குளிக்கும் ஆறு, குளத்தில் மனிதன் குளிக்க கூடாது என்கிற #காட்டுமிராண்டி தனத்தை மீறி பொதுமக்கள் நீராட உரிமை பெற்றபோதும் இந்துக்கள் மனது புண்பட்டது.

பெரும்பான்மை இந்துக்களுக்கு #கல்வி வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் கொடுத்தபோதும் இந்துக்களின் மனம் புண்பட்டது.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!