Discover and read the best of Twitter Threads about #எம்பெருமானார்

Most recents (4)

ஸ்ரீராமாநுஜர் ஜெயந்தி*
25/4/23
ஒரு பூரண மனித ஆயுளைப் பூர்த்தி செய்த மகான் ஸ்ரீராமானுஜர். அவ்வாறு 120 ஆண்டுகள் வாழ்ந்து ஆன்மிக சமுதாயக் கடமையாற்றிய அப்பெருமகனாரின் வாழ்க்கையை 120 வாக்கியங்களில் தொகுத்தளித்திருக்கிறார் மெய்யூர் ஸ்ரீ நரசிம்மாச்சார்யார்.
ஸ்ரீமதே ராமானுஜாய நம: Image
1. ஸ்ரீ பெரும்பூதூரை பிறப்பிடமாக உடையவர்.
2. ஆஸுரிகேசவாசார்யர் மற்றும் காந்திமதிதேவியை பெற்றோர்களாக உடையவர்.
3. சித்திரையில் ஆதிரை நாளில் அவதரித்த பெருமையை உடையவர்.
4. திருமலை நம்பியை மாதுலராக உடையவர்.
5. மாதுலரால் சூட்டப்பட்ட லக்ஷ்மணன் என்ற பெயரை உடையவர்.
6. பிற்காலத்தில்
சூட்டப்பட்ட இளையாழ்வான், ராமானுஜர் என்ற பெயர்களை உடையவர்.
7. 16 வயதிற்குள் கசடறக் கற்றுக் கொண்ட வேத, வேதாங்க, சாஸ்திர கல்வியை உடையவர்.
8. நல்லார் பரவும் ராமானுஜன், கற்றார் காமுறு சீலன் என்று போற்றப்பட்ட பெருமையை உடையவர்.
9. வேதாந்த சாஸ்திரத்தை போதித்த யாதவபிரகாசரை குருவாக உடையவர்
Read 45 tweets
#மாசிமகம்_ஸ்பெஷல

#திருகோஷ்டியூர்_செளம்ய_நாராயண_பெருமாள_திருக்கோவில்
திருக்கோஷ்டியூர் தமிழ்நாட்டில் திருப்பத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் 104 ஆவது திவ்ய தேசமாகும். பெருமாள் ஐந்து தலங்களில் உள்ளார். சொளம்ய நாராயணனின் பிரம்மாண்டமான திரு உருவம்
ஐந்து தலை நாகத்துடன் பள்ளி கொண்ட நிலையில் காணப்படுகிறது.
உலக மக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்தால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமை இதற்குண்டு. இதன் வடபகுதியை மயன் என்ற அசுரத் தச்சனும், தென்
பகுதியை விஸ்வகர்மா என்ற தேவதச்சனும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். ‘ஓம்’, ‘நமோ’, ‘நாராயணாய’ எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.
விமானத்தின் கீழ்தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயன கோலம்
Read 35 tweets
#ஶ்ரீராமானுஜர் அவரின் #பன்னிரெண்டு_திருநாமங்கள்

#இளையாழ்வார்
ராமானுஜரின் தாய்மாமாவான பெரிய திருமலை நம்பி குழந்தையின் லட்சணங்களைக் கண்டு இவர் ஸ்ரீராமனுக்கு எப்படி தம்பி இலக்குவனோ அதுபோன்று உலகம் உய்யப் பிறந்த உத்தம புருஷன் என "இளையாழ்வார்' என்று நாம கரணம் சூட்டினார்.
#யதிராஜர் (துறவிகளின் அரசர்) பகவத் ராமானுஜர் இல்லறவாழ்வைத் துறந்து சந்நியாசம் மேற்கொண்டார். காஞ்சி வரதராஜரே அவரை "வாரும் யதிராஜரே!' (யதி- துறவி, ராஜர்- அரசர், துறவிகளின் அரசர்) என்று அழைத்து மகிழ்ந்தார். 

#உடையவர்
காஞ்சியிலிருந்து திருவரங்கம் வந்து திருவரங்கன் திருவடி தொழுதார்.
அப்போது, திருவரங்கன் திருவாய் மலர்ந்து கண்குளிர நோக்கி "வாரீர் எம் உடையவரே! இனி உபய விபூதி ஐஸ்வர்யமும் உமக்கே! இனி, நீர் இங்கு நித்யவாசம் செய்து கொண்டு நம் காரியத்தையும் ஸ்ரீ ரங்க ஸ்ரீயையும் வளர்த்து வாரும். உம்முடைய திருவடி மற்றும் திருமுடி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மோட்சம்
Read 20 tweets
#ஶ்ரீராமானுஜர் #சுருக்கமாக_அவர்_வரலாறு புரட்சித்துறவி என்று போற்றப்படும் ராமானுஜர் பொயு 1017-ல் சக ஆண்டு 939, கலி ஆண்டு 4118, வியாழக்கிழமை, சித்திரை மாதம் 12-ஆம் தேதி சுக்லபட்ச பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது பெற்றோர்
அசூரிகேசவசோமாயாஜுலு - காந்திமதி. குழந்தையைப் பார்க்க திருப்பதியிலிருந்து வந்த தாய்மாமன் திருமலைநம்பி, லட்சுமணன் அம்சமாக குழந்தை இருந்ததால் அதற்கு #இளையபெருமாள் என்று பெயர் சூட்டினார். இளைய நம்பிக்கு எட்டு வயதானபோது உபநயனம் செய்து வைக்கப்பட்டது. அவரது தந்தையே முதலில் கல்வி
கற்பித்தார். அவரது பதினாறாவது வயதில் அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அதன்பின் கொஞ்சநாட்களிலேயே அவரின் தந்தை காலமானார். தந்தையின் மறைவுக்குப்பின் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார் இளைய பெருமாள். இந்த நிலையில், இளையபெருமாளை ஸ்ரீரங்கம் அழைத்துச்செல்ல வந்து கொண்டு இருந்தார்
Read 21 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!