Discover and read the best of Twitter Threads about #ஐ

Most recents (3)

#உடையவர்

#அ ஷ்டாக்‌ஷரத்தை உயர் கோபுரத்தில் உரைத்த உயிரான உடையவர்

#ஆ ண்டாளை தங்கையாக உடையவர்

#இ ளையாழ்வாரென இன்னொரு திருநாமம் ஏற்ற உடையவர்

#ஈ டில்லா அரங்கனிடம் உடையவர் என்ற பேற்றை பரிசாய் பெற்ற உடையவர்

#உ ய்ய ஒரே வழி என அவர் தம் திருவடியை காட்டி தந்த உடையவர்

#ஊ ற்றாய் Image
கருணையை பொழியும் காரேய் கருணை இந்த உடையவர்

#எ திராஜர் என்றே அத்திகிரி அருளாளன் சாத்திய திருநாமத்தை உடையவர்

#ஏ ழுமலையான் சூட்டிய தேசிகேந்திரன் என்ற திருநாமத்தை உடையவர்

#ஐ ந்து ஆசார்யர்களை கொண்ட ஜகதாச்சார்யனே இந்த உடையவர்

#ஒ ப்பில்லா ஸ்ரீ பாஷ்யம் தனை தந்து கலைமகளால் ஶ்ரீ
பாஷ்யக்காரர் என்றே கூப்பிட பெற்ற உடையவர்

#ஓ லை ஒன்று தந்து தும்பையூர் கொண்டிக்கு மோக்‌ஷத்தை பெற வழி வகை செய்த உடையவர்

#ஔ ஷதமாய் நின்ற உடையவர், நிற்கும், உடையவர்

#அஃ தொன்றுமில்லா பகவானை சரண் புகுவோரை எம்பெருமானிடம் சேர்க்கும் வரை அயராத உடையவரின் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
Read 4 tweets
#குற்றியலுகரம்
என்பது
குறுமை + இயல் + உகரம்.

ஒரு சொல்லின் உடைய கடைசியில் வரும் வல்லின உகரம் ஆனது குற்றியலுகரம்.

(எ.கா: காசு)
பசு என்ற சொல்லையும்,
காசு என்ற சொல்லையும், சொல்லிப்பாருங்கள்.
பசு - சு நீண்டு ஒலிக்கும்.
காசு - சு சுருங்கி ஒலிக்கும்.
இந்த சுருக்கம் தான் குற்றியலுகரம்.
#குற்றியலுகரம் பற்றி தொல்காப்பியம் கூறும்
#சூத்திரம்

ஈரெழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்.

இங்கு "ஈரெழுத்து ஒருமொழி" என்பது நெடில் என்று பொருள்.

ஈரெழுத்து ஒருமொழி - இரண்டு மாத்திரை கொண்ட ஒரு எழுத்து - நெடில்
#குற்றியலுகரம் பற்றி எளிதாக சொல்ல வேண்டுமானால்...

குறில் எழுத்து / நெடில் எழுத்து / வல்லின எழுத்து / மெல்லின எழுத்து / இடையின எழுத்து / ஆயுத எழுத்து /
இவையாவற்றிக்கும் பின்னல்
"கு சு டு து பு று" போன்ற வல்லின உகரம் வந்தால்
அவையே
#குற்றியலுகரம்
Read 295 tweets
#இலக்கணம்_கற்போம்

முன்னுரை:

தமிழுக்கு பலரும் இலக்கணம் எழுதுயுள்ளார்கள்.
முதல் சங்க/இடை சங்க - காலத்திலும் இருந்தது.
கடை சங்க காலம் - இப்போதும் இருக்கிறது.
முதல்/இடை சங்க கால நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை. கடற்கோள்களால் அழித்து விட்டன.
கடைச்சங்க நூல்கள் சிலவை கிடைத்தாலும் பல நூல்கள் முழுவதுமாக கிடைக்கவில்லை.
அப்படி அழியாமல் காக்கப்பட்ட சில நூல்கள்: பின்வருமாறு...
தொல்காப்பியம்,
நன்னூல்,
நேமிநாதம்,
இறையனார் களவியல்,
நம்பியகப்பொருள்,
மாறன் அகப்பொருள்,
புறப்பொருள் வெண்பாமாலை,
புறப்பொருள் யாப்பெருங்கலம்,
யாப்பெருங்கலக் காரிகை,
தண்டியலங்காரம்,
மாறன் அலங்காரம்,
இவையாவும் பழம்பெரும் நூல்கள்

இதனை தொடர்ந்து 17'ம் நூற்றாண்டு நூல்கள் பின்வருமாறு...
Read 388 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!