Discover and read the best of Twitter Threads about #ஓம்_குமாராய_நமஹா

Most recents (6)

#கடன்_நோய்_நிவர்த்தி

கடன் நோய் வழக்குகள் தீர பயன்படுத்த வேண்டிய கிழமை ஓரை

கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது போல நமக்கு தீராத கடன் இருந்தால்,

அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது.
குடும்ப சூழ்நிலையின் பலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித் தள்ளுவார்கள்.

இதற்கு, ஒரு எளிய பரிகாரம்.

கடன் அடைக்க தான் நாள் நட்சத்திரம், நேரம் உள்ளது.
நாள்பட்ட , கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும்,

இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும்.

இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும்.
Read 6 tweets
#காவடி

*தைப்பூசம் தினத்தன்று காவடி எடுப்பது ஏன்❓*

தைப்பூசம் தினத்தன்று முருகன் தலங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் காவடிகளாக இருக்கும்.

அதற்கு காரணம், தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பது தான்.
இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா?

அகத்திய முனிவர் ஒரு தடவை தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து,

தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களையும் கொண்டு வரும் படி கூறினார்.
அகத்திரியின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியா கக்கட்டி எடுத்துக் கொண்டு வந்தான்.

பழனி தலம் வந்த போது இடும்பன் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்தான்.

பிறகு புறப்படும்போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான்.
Read 7 tweets
#தைப்பூசம் பற்றிய 40 அரிய தகவல்கள்

(தைப்பூசம் 5.2.2023 )

1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.
3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.

4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.
5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான்.

அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.
Read 35 tweets
#பழனி_கும்பாபிஷேக_சிறப்பு

பழனி திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று.

பழனி ஆண்டவரை பற்றி யாருக்கும் தெரியாத ஆச்சரிய தகவல்கள்....!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாக திகழும் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலின் ஆச்சரியங்கள்..
🌹 தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் (நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி) மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது.

மார்கழி மாதத்தில் பன்னீர் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.
🌹 இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் (தலை) வைத்து உடனே அகற்றப்படுகிறது.

அதாவது முழு அபிஷேகத்திற்கு சந்தனமும், பன்னீரும் மட்டும் தான்.

இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
Read 13 tweets
#ஓம்_குமாராய_நமஹா

முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியே பூஜை

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ளது முத்துக்குமார சுவாமி திருக்கோவில்.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், ஆறு முகங்களுடன் ஆறுமுகனாக காட்சியளிக்கிறார்.
இந்த முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியே தீபாராதனை காட்சி பூஜை நடைபெறுவதே இந்த ஆலயத்தின் சிறப்பாக உள்ளது.

இது போன்று ஆறு முகங்களுக்கும் தனித்தனியாக எந்த ஆலயத்திலும பூஜை நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கு முருகப்பெருமானுக்கு மயில் வாகனம் இல்லை.

இடும்பன் வாகனமாக இருக்கிறார்.

ஆலய விழாக்களின் போதும், இடும்பன் மீது அமர்ந்தே முருகப்பெருமான் வீதி உலா வருகிறார்.

இந்த ஆலயத்தில் மற்றொரு சிறப்பும் உள்ளது.
Read 4 tweets
#வேல்_அர்ச்சனை

வேலுக்கு அர்ச்சனை!
ஈரோடு மாவட்டம்,

வெள்ளக்கோவில் என்ற ஊரில் வீரகுமாரசுவாமி திருக்கோயில் உள்ளது.

இங்கு முருகப் பெருமான் வீரத் தோற்றத்தில் கன்னி குமரனாகக் காட்சி தருகிறார்.
ஆகவே, பெண்கள் கோயிலுக்குள் செல்லும் வழக்கம் இல்லை.

மாறாக, ‘குறட்டு வாசல்’ எனப்படும் முன்புற வாசலில் நின்று சப்த கன்னியரையும், வீர குமாரரையும் வணங்கிச் செல்லும் வழக்கம் நீடிக்கிறது.
சூரபதுமன் மனம் திருந்தி மயில் வடிவ மலையாக அமர்ந்து தவம் செய்து அருள்பெற்ற தலம் மயிலம்; திண்டிவனம் அருகிலுள்ளது.

இங்கு கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்ட வேலும் மயிலும் இருக்கின்றன.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!