Discover and read the best of Twitter Threads about #ஓம்_நரசிம்மாய_நமஹா

Most recents (6)

#சோளிங்கர்_நரசிம்மர் :*

1. 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது.

2. இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார்.
3. இந்த ஆலயம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது.

4. பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர்.
ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் காட்சி அளிக்கிறார்.
Read 9 tweets
#நரசிம்மர்_வழிபாடு

நரசிம்மர் - 40 தகவல்கள்.

1. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.

4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று.

இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள்
அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.

6. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.
Read 23 tweets
#மூன்று_நரசிம்மர்

ஒரே கருவறையில் 3 நரசிம்மர்கள்
தன் பக்தன் பிரகலாதன்,

அவனது தந்தை இரணியனால் கொடுமைப்படுத்தப்படுவதை அறிந்த திருமால்,

நரசிம்ம அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார்.
அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

அவரது கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர்.
வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர்.

இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
Read 4 tweets
#பஞ்ச_நரசிம்ம_சேஷ்த்ரம்

தமிழ்நாட்டின் சீர்காழியில் ஐந்து நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே #திருமங்கை_ஆழ்வார் எனும் விஷ்ணு பக்தர் ஆவார்.

அங்குள்ள ஐந்து ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக் கதை சுவையானது.
அந்த ஐந்து உத்தமமான நரசிம்மத் பெருமாள் ஆலயங்களிலும் ஒரே நாளில் சென்று வழிபட்டால் கடன் தொல்லை குறையும், எதிரிகள் தொல்லை விலகும், தடைப்பட்ட திருமணம் நடைபெறும், மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
ஓரிரு கிலோமீட்டர் தள்ளித் தள்ளி ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த ஐந்து ஆலயங்களும் #திவ்ய_தேசத்தில் காணப்படும் ஆலயங்கள் ஆகும்.

திருமங்கை ஆழ்வார் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் ஆவார்.

சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள
Read 39 tweets
#கண்_திறக்கும்_நரசிம்மர்

*கார்த்திகையில் கண் திறக்கும் ஸ்ரீ நரசிம்ம பெருமாள்*

ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் நாம் தங்கி இருந்தாலே இத்தலம் நமக்கு முக்தியை அளிக்க வல்லது.

🌹 *ஆழ்வார்கள் பாடிய நூற்றிஎட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளசிம்மபுரம் எனப்படும் சோளிங்கர்*.

*திருக்கடிகை* என்ற திருப்பெயரில் இவ்வூரை ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள்.

கடிகை என்பது ஒரு நாழிகைப் பொழுதைக் குறிக்கும்.

ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் தங்கி இருந்தாலே, இத்தலம் முக்தியை அளிக்க வல்லது.
அதனால் தான் திருக்கடிகை என்று இதனை ஆழ்வார்கள் அழைத்துள்ளார்கள்.

🌹நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்கள், சோளிங்கர் மலைக்கு மேல் நரசிம்மர் யோக நிலையில் தவம் புரிவதை அறிந்து கொண்டார்கள்.

750 அடி உயரம் கொண்ட அந்த மலைக்கு மேல் சென்ற முனிவர்கள்
Read 13 tweets
#ஸ்ரீ_நரசிம்மர்_சுவாமி

*திருமால் அவதாரங்களில் மிகக் குறுகிய கால அவதாரம் நரசிம்ம அவதாரம்."*

24 நிமிடங்கள்! கடிகை நேரமே நிகழ்ந்த மிகவும் உக்கிரமான அவதாரம்.

இந்த குறுகிய கடிகை நேரத்தில் நரசிம்மருக்கு "உக்கிரம்" எங்கேயிருந்து வந்தது? Image
🌹 பிரம்மாவுக்கோ, ஆராயாமல் கொடுத்த குற்ற பயம்!

🌹 ரிஷிகளுக்கோ உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தங்கள் கர்ம யோகைத்தை கைவிட்ட குற்ற பயம்!

🌹 தேவர்களுக்கோ தங்கள் சுயநலம் பற்றிய குற்ற பயம்!

அவரவர் செய்த குற்றங்களுக்கு அவரவர் மனசாட்சியே குத்தியதால் எம்பெருமான் "உக்கிரமாய்" தெரிகிறார்!
ஆனால் கண்ணாடிக்கு ஏது உக்கிரம்?

நீ எதுவோ, அதுவாகவே கண்ணாடியும் தெரிகிறது! கண்ணாடனும் தெரிகிறான்!

எல்லாரும் சூழ்ந்து கொண்டு குட்டிப் பிரகலாதனை மறைக்கிறார்களே அதனால் அல்லவோ நரசிம்மர் இதயம் உலுக்கி அங்கும் இங்கும் தேடுகிறார்? இதுவா "உக்கிரம்"?
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!