Discover and read the best of Twitter Threads about #கனகதாரா_ஸ்தோத்திரம்

Most recents (3)

#கனகதாரா_ஸ்தோத்திரம் #சொர்ணத்து_மனை
#ஆதிசங்கரர் சிறுவயதில் சன்னியாசி ஆனவுடன் யாசகத்திற்குப் புறப்பட்டார். ஒரு நாள் அவர் யாசித்த வீடு மிகவும் ஏழ்மையான வீடு. பவதி பிட்சாந்தேஹி என குரல் கொடுத்த ஆதிசங்கரருக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண் தன்னிடமிருந்த
காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். ஒரு ஏழைப் பெண் அளித்த பிட்சையை ஏற்றுக் கொண்ட ஆதிசங்கரர் இந்த வீட்டில் ஒரு சன்யாசிக்கு கொடுப்பதற்கு கூட ஒரு நெல் மணி இல்லாத அளவுக்கு ஏழ்மையில் இருக்கிறார்களே என்று பரிதாபப்பட்டார். உடனே அவரது காதில் உதவி செய்வதாக இருந்தால் பரிதாபப்பட வேண்டும
உதவி செய்ய இயலாத போது பரிதாபப் படக்கூடாது என்று ஒரு அசிரீரீ கேட்டது. இதனை கேட்ட ஆதிசங்கரர் அவளுக்கு உதவ விரும்பினார். மகாலட்சுமியை நோக்கி மனம் உருகப் பாடினார். ஆதிசங்கரர் தனது பாடலில் சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய
Read 10 tweets
#மகாபெரியவா #தெய்வத்தின்குரல் #கனகதாரா_ஸ்தோத்திரம் #ஆதிசங்கரபகவத்பாதாள் “ஆசாரியாள் மஹாலக்ஷ்மியைத் துதிக்கிறபோது ஆகாசத்திலிருந்து அசரீரி கேட்டது. ‘இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனை தான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில்
இவர்களுக்குச் சம்பத்தைத் தருவதற்கில்லை’ என்றது அசரீரி. உடனே ஆசாரியாள், ‘இவர்கள் ஜன்மாந்தரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதைவிடக்கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே பக்ஷ்யமான நெல்லிக் கனியையும் எனக்கு இவள் போட்டிருக்கிறாளே. இந்த அன்பும்
தியாகமும் எத்தனை புண்ணியமானவை! சாப்பாட்டுக்கே இல்லாத இவள் எனக்குப் பிக்ஷை போட்ட பலன் எத்தனை பாவத்தையும் சாப்பிட்டு விடுமே!’ என்றார். ‘அம்மா, மஹாலக்ஷ்மி! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் நிறைய அன்பு இருக்கிறதே! அதனால் ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி
Read 11 tweets
#கனகதாரா_ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் மேல் #ஸ்ரீஆதிசங்கரர் அருளியது இந்த ஸ்லோகம். அவர் பாலகனாக பிக்ஷை எடுக்க சென்றபோது ஒரு வீட்டில் மிகவும் எழ்மையான நிலையில் இருந்த பெண்மணியிடம் பிக்ஷை இட ஒரு நெல் மணி கூட இல்லை. வந்து நிற்கும் குழந்தைக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என்று வீட்டில் தேடி Image
பார்க்க, ஓர் அழுகிய நெல்லிக்கனி மட்டுமே கிடைத்தது. அதை அவருக்கு பிக்ஷை இடுகிறார். அவள் நிலை கண்டு மிக மனம் வருந்திய சங்கரர் மகாலக்ஷ்மியின் மேல் மனமுருகி பாடுகிறார். அவர் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து, அப்பெண்மணியின் பாவங்களை மன்னித்து தங்க நெல்லிக்கனிகளாக வீட்டின் கூரையின் மேல் Image
பொழிகிறார் கருணையே வடிவான தாயார். ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திர ஸ்லோகங்களும் அதன் பொருளும்
1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்|
அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கல ததவதாயா:|l

'முகுலாபரணம் தமாலம்' - பச்சை வர்ணத்தில் இருக்கும் தமால Image
Read 33 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!