Discover and read the best of Twitter Threads about #கவியரசர்_கண்ணதாசன்

Most recents (3)

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..
#திருவிளையாடல் படப் பாடல் இது.
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ -
மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
பாடலின் இடையில் வரும் வரிகள் இவை.
பாடலை எழுதியவர் #கவியரசர்_கண்ணதாசன்.
இந்த ஓர் வரிக்குப் பின்னால் அரிய புராண நிகழ்வு உள்ளது. Image
காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் அரதன குப்தன் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மதுரையிலேயே வாழ்ந்து வந்தான். காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த அவன் தங்கைக்கும் அவள் கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனத்துக்குள் ஆசை.
எதிர்பாராமல் ஒரு நாள் அரதன குப்தனின் தங்கையும் அவள் கணவரும் இறந்துவிட்டதாக தகவல் வர
உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான்
Read 13 tweets
#மகாபெரியவா #கவியரசர்_கண்ணதாசன்

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பிற்காக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில்
இருந்தார். காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து
போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார். தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி
Read 17 tweets
#அர்த்தமுள்ளஇந்துமதம்
#கவியரசர்_கண்ணதாசன்
#அஷ்டமியும்_நவமியும்
அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா? பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள். நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. நம் முன்னோர்கள்
அஷ்டமி அன்றும் நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை? அதற்குக் என்ன காரணம்? அதில் தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது. கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது. ஸ்ரீ ராமன் நவமி அன்று
பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா? இல்லை. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம். அதே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம். நிலவு தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பூமியை
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!