Discover and read the best of Twitter Threads about #கும்பகோணம்

Most recents (6)

#ஸ்ரீராமரின் #68_தலைமுறை முன்னோர்களை தெரிந்து கொள்வோம்..!!

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
Read 9 tweets
*ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகள் ஆஞ்சநேய ஸ்வரூப லட்சணங்களைப்பற்றி வெகு அழகாகக் குறிப்பிடுகிறார்*.

அதாவது ''ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை;

1
வினயத்தில் உச்ச நிலை'' இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சநேயனே! என்கிறார்.

வாயுவின் அம்சத்தினால் அஞ்சனாதேவியிடம் அவதரித்தவர் ஆஞ்சநேயர். நித்திய பிரம்மச்சாரியான இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.

2
நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமானை வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டும்.

பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் ஆஞ்சநேயர்.

3
Read 100 tweets
#கும்பகோணம் #திருக்குடப்தை கும்பகோணம், அதை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான (188) கோவிகள் அமைந்திருப்பதால் அது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. கரு முதல் 60ஆம் கல்யாணம் வரை நம் வாழ்க்கை மங்களமாக அமைய வேண்டிய வரும் தரும் கோவில்கள் இங்குள்ளது தனிச் சிறப்பு.
1. கரு உருவாக (புத்திர
பாக்கியம்) - கருவளர்ச்சேரி
2. கரு பாதுகாத்து சுக பிரசவம் பெற - திருக்கருகாவூர்
3. நோயற்ற வாழ்வு பெறுவதற்கு -
ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில்
4. ஞானம் பெற - சுவாமிமலை
5. கல்வி, கலைகள் வளர்ச்சிக்கு -
கூத்தனூர்
6. எடுத்த காரியம் வெற்றி பெற மன தைரியம் கிட்ட - பட்டீஸ்வரம்
7. உயர் பதவி
அடைய (வேலை வேண்டி) - கும்பகோணம் பிரம்மன் கோயில்
8. செல்வம், பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோயில்
9. கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்
10. இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி
11. பெண்கள் நற்சமயத்தில் ருது
ஆவதற்கும், ருது பிரச்சனைகள் தீர
Read 7 tweets
கல்வெட்டுகளில் முதியோர் பாதுகாப்பு!

முதியோர் பாதுகாப்பு என்ற பெயரில் அரசாங்கங்கள் இன்று பல்வேறு திட்டங்களை, அறிவிப்பதைக் காண்கிறோம். அவர்களுக்கான உதவிகளைப் பணமாகப் பெறவும், மருத்துவ சலுகைகள், பயணக் கட்டணத்தில் சலுகை, ஆலயத்தினுள் நடக்க முடியாதவர்களுக்கு மோட்டார் வாகனங்கள் என 1/n Image
இப்படி பல அம்சங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த விஷயம் பழங்காலத்தில் இருந்தே ஓர் அறமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வயதில் முதியவர்களாக இருப்பவர்களால் வெகு தொலைவு நடக்க இயலாது. அவர்களுக்கு திருக்கோயில்கள் உதவி செய்திருக்கின்றன. 2/n
இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே பண்டை நாளில் திருக்கோயில்களில் அறச்சாலைகள், மடங்கள், சத்திரங்கள் போன்றவை இருந்தன.

#கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயிலில் #அறச்சாலை இருந்ததாக சோழர் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது... 3/n Image
Read 15 tweets
"தனி ஒருவர்" - நம் தாத்தா!!

"தமிழ் தாத்தா #உவேசா".. இது ஒன்றை தவிர, தற்போதுள்ள இளைய தமிழருக்கு இந்த தாத்தாவை பற்றி வேற எதுவுமே தெரியாது.

கும்பகோணத்தில் பிறந்திருக்கிறார். இந்த தாத்தாவுக்கு, அவருடைய தாத்தாதான் தமிழ் சொல்லி தந்தாராம். அப்போதெல்லாம் பேப்பர் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதனால் வெறும் மணலில் மட்டுமே அரிச்சுவடி எழுதி பழகி.. அதற்கு பிறகு ஓலைச்சுவடியில் எழுதி எழுதி படித்திருக்கிறார்.

#கும்பகோணம் ஆர்ட்ஸ் காலேஜில் தமிழ் பேராசிரியராக வேலை பார்த்தார். இன்னின்ன பாடங்களை நடத்த வேண்டும் என்று அரசு தரப்பில் குறிப்பு வெளியிடுவார்கள்.
ஆனால், அந்த குறிப்பு பற்றி எங்குமே தொகுப்பு இருக்காது. அதனால், அது சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கெங்கே இருக்கின்றன என்று தேடி கண்டுபிடித்து, அதை வைத்து கொண்டு, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தருவார்.

இவர் பாடம் நடத்தினாலே காலேஜ் #பிரின்சிபல் முதல் பேராசிரியர்கள் வரை..
Read 13 tweets
"ஆதீண்டு குற்றி..."

மனிதனுக்குத் தினவு ஏற்பட்டால் கையால் சொறிந்து கொள்கிறான். ஆடு மாடுகளுக்குத் தினவு ஏற்பட்டால் அவற்றால் எப்படிச் சொரிந்து கொள்ள முடியும்? அவை நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தன் தினவை, அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றன.
இவ்வாறு மாடுகள் உராய்ந்து உராய்ந்து நிழல் தரும் மரங்கள் அழிந்து போகாமல் இருக்கவும், கால்நடைகளின் தேவையை உணர்ந்தும் இவ்வகையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆதி காலந்தொட்டு ஆடுமாடுகள் தினவு அடங்க உராய்வதற்கென்று பலகைக் கற்களையும், குத்துக் கற்களையும் நட்டுள்ளனர்!
இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைந்தன. மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலையை நாடிச் செல்கின்றன.

சேற்றை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு சேறு காயும் போது தினவு ஏற்படுகிறது. உடன் குற்றியை நோக்கிச் செல்கின்றன!
Read 21 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!