Discover and read the best of Twitter Threads about #சனாதனதர்மம்

Most recents (8)

#மகாபெரியவா மகா பெரியவா காஞ்சி மடத்தில் அருளொளி துலங்க அமர்ந்திருந்தார். அப்போது ஓர் அடியவர் பெரியவாளிடம் உரிமையோடு கேட்டார். "சுவாமி வெளிநாட்டைச் சேர்ந்தவரான #பால்பிரண்டனுக்கு அவர் தங்கியிருந்த உணவகத்தில் நள்ளிரவில் காற்று வெளியில் தோன்றி நீங்கள் காட்சி கொடுத்தீர்களாமே! அது
பெரியவாளின் நிஜமான தோற்றம் தான், என் மனப் பிரமையல்ல என்று அவர் தன் புத்தகத்தில் அந்த சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார். அப்படியானால் இங்கிருந்து கொண்டே இன்னோர் இடத்தில் உங்களால் தோன்ற முடியுமா?”
இந்தக் கேள்விக்குப் பெரியவா என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எல்லாரும் ஆவலோடு
காத்திருந்தனர். அந்த பதில் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன், அந்தக் கேள்வியின் பின்னணியைத் தெரிந்து கொள்வோம். கே.எஸ். வெங்கடரமணி ஓர் எழுத்தாளர். ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியவர். முருகன் அல்லது உழவன், கந்தன் ஒரு தேச பக்தன் போன்ற நாவல்களால் தமிழ் இலக்கியத்தை
Read 21 tweets
#தூயபக்தி #ராமாயணம் #சனாதனதர்மம்
ராமன் தசரத சக்கரவர்த்தியின் கட்டளைப்படி காட்டுக்குச் செல்கிறார். அவர் கூட சீதையும் லக்ஷ்மணனும் அவர் கூட சென்றார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்லவேண்டும். அப்போது தான் முதன் முதலாக #குகன் ராமனை பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும்
அவனுக்கு தெரியும். நாட்டை இழந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த ராமனை காணமுடியாமல் கண்களில் கண்ணீர்த்திரை.
“என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா?”என பக்தியோடு கேட்கிறான்.
“கங்கையை கடந்து அக்கரை செல்ல வேண்டும் குஹா.”
அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டு விட்டு புறப்பட
தயாராகியது. கேவத் என்பவன் ஓடக்காரன். குகன் அவனை அணுகி '”கேவத் உன் படகை இங்கே கொண்டுவா” என, படகு நெருங்கி வந்தது.
“கேவத், இதோ நிற்கிறார்களே யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜா, ராமர், அது சீதாதேவி ராணி, அவர் மனைவி, அது லக்ஷ்மணன் அவரின் வீர சகோதரன். இவர்களை அக்கரை கொண்டு சேர்.”
Read 16 tweets
#சனாதனதர்மம் #யோகிகள் #யோகி_பரமஹம்ச_யோகானந்தா தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்தார். இந்திய தூதரக விருந்து நிகழ்ச்சியில் அவர்
பேசிக் கொண்டிருந்த போதே தன் உடலை நீத்தார். மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொருத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது. இதயமோ நுரைஈரலோ
வேறு எதோ ஒன்று கெட்டுப் போனால் உயிர் நீங்கும் என்பது விஞ்ஞானிகள் நம்பிக்கை. நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை. அது மட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, "33
Read 11 tweets
#சனாதனதர்மம் ராமர் காட்டில் இருக்கும் போது ஓர் ஆற்றங்கரையில் துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர். ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி. சிறிது நேரத்தில், ஹோமம் செய்வதற்கான சமித்துகளை எடுத்துக்
கொண்டு அமர்ந்தார். சரி இவர் வேள்வி தான் ஏதோ ஆரம்பிக்கப் போகிறார் என்று எண்ணி, ஓர் ஓரத்தில் அமர்ந்து அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான். துறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து, கோதுமை மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச்
சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார். பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண்திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார். அந்த நேரம், இரண்டு குரங்குகள் அவர் எதிரே வந்து அமர்ந்து அந்த ரொட்டிகளை எப்படி
Read 9 tweets
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.

என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
Read 11 tweets
இன்று #குருபூர்ணிமா #GuruPoornima
நம் இந்து மதம் இருளில் இருந்து ஒளிக்கு வழிகாட்டும் குருக்களுக்கு மிகுந்த முக்கியத்துவமும் மரியாதையும் அளிக்கின்றது.
1. ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி. இவர் பேசாமலேயே ஞானம் புகட்டியவர். "மவுனமா உரையாற்காட்டும் மாபிரம வஸ்து வாலன்."
2. ஸதாஶிவ ஸமாரம்பாம்
ஶங்கராசார்ய மத்யமாம் அஸ்மத் ஆசார்ய பர்யந்தம் வந்தே குரு பரம்பராம்
3. வஸுதேவ சுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.
4. ஸ்ரீ தத்தாத்ரேயர் பாகவதத்தில் 24 குருமார்களைப் பற்றிச் சொன்னார். அதில் பறவைகள் மிருகங்கள் எல்லாம் குருவாக வருகின்றன. நம்
தெய்வங்களான கிருஷ்ணனும் ராமனும் ஐயப்பனும் “குரு”க்கள்தான். ஐயப்பப ஸ்வாமி காண்பிப்பது சின் முத்திரையை. அதனால்தான் அவரை “குரு ஸ்வாமி” என்று கூறுகிறோம். இவர்களை நாம் குருவாக பார்ப்பதற்கு பதிலாக சரீரம் உள்ள தெய்வங்களாக பார்க்கிறோம். ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீசுகர் கலியுகத்தைப் பற்றி
Read 15 tweets
#சனாதனதர்மம் அனாதியானது. மற்ற மதங்களை போல் ஒரே மனிதரையோ, ஒரே புத்தகத்தையோ மட்டும் நம்பி விளங்குவதுஅல்ல. அது பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே வரும் வழிமுறை.மற்ற மதங்கள் அப்படி அல்ல. உதாரணமாக, பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று kapernicus கூறியதை மிரட்டி திரும்பபெறசெய்தது சர்ச் 1/5
ஆனால் இந்து தர்மத்தில் அறிவியலும் , கணிதமும் வளர தடை எதுவும் செய்யப்படவில்லை.
ஏனெனில் இந்து மதம், சமூக முன்னேற்றத்துக்கு எப்போதுமே வழிகாட்டியாகவே இருந்து வந்துள்ளது. அதற்காகவே, எப்போதும் தன்னை தயார் படுத்திக் கொண்டே வந்துள்ளது. 2/5
உதாரணமாக, ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண சட்டம். அது போல, இந்துக்களில் சாதி வேற்றுமை என்று கூவுகிறார்களே, ஆனால் இந்துக்கள் தான், சாதி விட்டு சாதி திருமணம் செய்யவும், ஏன் மதம் விட்டு மணம் செய்யவுமுண்டான சட்டத்தை அங்கீகரித்தனர். ஆனால் இஸ்லாமிய நாடுகளில், அப்படி முடியாது. 3/5
Read 6 tweets
சனாதன தர்மத்தின் அடிப்படையில் இங்கே ஒரு சமூக கட்டமைப்பு நிறுவப்பட்டுவிட்டது
Dr. தொல். #திருமாவளவன் #Thread
தனியா தான் இருப்பாங்க ஆனா ஒரே ஊருக்குள்ள இருப்பாங்க
இந்த Social Order எங்கிருந்து வந்தது?
Dr. தொல். #திருமாவளவன்
அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி நிறுவப்பட்டது இந்த Hindu social order
Dr. தொல். #திருமாவளவன்
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!