Discover and read the best of Twitter Threads about #சர்வம்_சிவமயம்

Most recents (3)

"காதில் பூ வைக்காதீங்க"

இதை கிண்டலாக சொல்லும் போது, நம் நெறியை இழிவுபடுத்துகிறோம் என்று தெரியாமலே சொல்கிறோம்.

அப்படி என்ன தவறு இந்த சொற்களில்.?

"பூ நாளும் தலை சுமப்ப"

-என்று திருஞானசம்பந்தர் பாடுகிறார்.

1/
நீ நாளும் நன்நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார்
சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்று ஏத்த பெறலாமே, நல்வினையே.!

என திருஞானசம்பந்தர் சுவாமிகள், திருச்சாய்க்காட்டு திருப்பதிகத்தில் பாடியுள்ளார்.

2/
எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று
அருச்சிப்பதை கூறுவதாக பொதுப் பொருளாக விளக்கம் எடுத்துக் கொள்ளக்கூடாது.

"எட்டுருவ மூர்த்தியாம் எண்தோளானாம், என் உச்சிமேலானாம் எம்பிரானாம்" என்று அப்பர் சுவாமிகள் அருளியுள்ளார்.

உச்சிமேலான் என்பது,

3/
Read 9 tweets
அட்டவீரட்டான திருத்தலங்கள்
பகுதி-1

எல்லாம் வல்ல சிவபெருமான், படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து தொழில்களைப் புரிகிறார்.

தமது திருவிளையாடல்கள் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காத்து அருள்கிறார். Image
பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே "அட்டவீரட்டான தலங்கள்".

திருத்தலம்-1

திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில்:

பிரம்மனின் சிரம் கொய்து, செருக்கை அழித்த திருத்தலம். Image
ஐந்து தலைகளுடன் படைப்புத் தொழிலைச் செய்து வந்த பிரம்மன், தானே உயர்ந்தவன் என்று கர்வம் கொண்டார்.

பிரம்மாவின் சிரத்தை தன் சூலத்தால் கண்டம் செய்தார். காரணத்தால், இந்தத் தலத்துக்கு `கண்டியூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. ImageImage
Read 43 tweets
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்:
(தரப்பாக்கம், சென்னை)

பெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

கிரகண நேரத்தில் அனைத்துக் கோயில்களின் நடை அடைக்கப்படும். இத்திருத்தலத்தில் நடைதிறந்து, கிரகண துவக்கத்திலும், முடிவிலும் விசேஷ அபிஷேகம் செய்கின்றனர். Image
முற்காலத்தில் இங்கு தங்கியிருந்த சித்தர்கள், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

காலப்போக்கில் வழிபாடு நின்று, லிங்கத் திருமேனி மண்ணில் புதைந்து போனது.

பிற்காலத்தில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமான், இங்கு லிங்கத் திருமேனி இருப்பதை உணர்த்தி அருளினார். Image
ஒரு சமயம் பெருமழை பெய்யவே, அருகிலுள்ள அடையாறில் வெள்ளம் பெருகி, ஊருக்குள் புகும் அபாயம் உண்டானது.

இவ்வேளையில் கரையில் இருந்த கோயில் தேர், ஆற்றின் குறுக்கே விழுந்தது. இதனால், வெள்ளத்தின் திசை மாறி, மக்கள் காப்பாற்றப் பட்டனர்.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!