Discover and read the best of Twitter Threads about #சிவலிங்க_பூஜை

Most recents (4)

#சிவலிங்கம்

சிவ வழிபாட்டில் லிங்க வழிபாடு தான் முக்கியத்துவமானது.

இது இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவியுள்ளது.

ஏன் உலக நாடு முழுவதுமே லிங்கவழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது?

லிங்கம் இல்லாமல் உள்ள சிவன் கோவில்கள் கிடையாது.

லிங்கம் என்பது அடையாளம்.
சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம் ஆகும்.

வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை வழிபடுகின்றனர்.

இவற்றுள் சிவலிங்கம் அருவுருவ நிலையாகும்.
*சிவ லிங்கத்தின் மகிமை :*

அமைதியின் உருவமே சிவ லிங்கம்.

அனைவரின் துயர் தீர்ப்பதும் சிவ லிங்கமே.

சிவலிங்க வழிபாடு ஜீவனை நல்வழிப்படுத்தி முக்தி அளிக்கும்.

கலியுக அழிவுகளிலிருந்து லிங்கத்தின் மகிமை அறிந்தவன் விடுவிக்கப்படுவான்.
Read 6 tweets
#சிவ_பூஜை

*சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள் !*

1. சிவலிங்கத்தை பூஜை செய்பவன் சித்தம் சுத்தமாகும் .

சித்த ரிஷிகளாகவே மாறுகிறான்

2. சிவலிங்க பூஜை செய்பவன் முடிவில் சிவமாகவே ஆகிவிடுகிறான்.
3. சிவலிங்கத்தின் பிம்ப தரிசனம் கொலை செய்தவனின் பாபத்தையும் கூட போக்கும்.

4. சிவலிங்கத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல பாபங்கள் கழன்று ஓடும் .
5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு.

6.சிவபூஜை செய்பவனுக்கு
எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம் , வேள்விகள் செய்து இப்பூஜையினை செய்பவர்கள்
சிவலோகத்தில் அனந்தகாலம் வாழ்வார்கள்.
Read 10 tweets
#சிவ_பூஜை

சிவலிங்கத்தை இன்னார் இன்னார் பூசித்து இன்ன இன்ன பயன் பெற்றார் என்றமை.

விஷ்ணு காசி க்ஷேத்திரத்தின்கண்ணே பதினாயிரம் வருஷம் தவஞ்செய்து சிவலிங்க பூஜை செய்து தமது உத்தமமான பதவியையும்,

சமஸ்த உலகங்களை ரக்ஷிக்கும் உரிமையையும் அடையுமாறு பட்டாபிஷேகஞ் செய்யப்பட்டார்.
பிரமா காஞ்சிபுரத்திற் சென்று சிவலிங்கப்பெருமானைப் பூசித்துச் சிருஷ்டிக்கும் அதிகாரத்தையும்,

சரசுவதிக்கு நாயகராயிருக்கும் தன்மையையும் அன்னவாகன முதலியவற்றையும் பெற்றார்.

இங்ஙனம் இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானர் என்னும், அஷ்டதிக்பாலர்களும் முறையே
ஸ்ரீ சைலத்தினும், திருவண்ணாமலையினும், கேதாரத்தினும், கோகர்ணத்தினும், ஜம்புகேசுவரத்தினும், திருக்காளத்தியினும், சித்தவடத்தினும்,
திரு வாரூரினும்

சிவலிங்கப் பெருமானைப் பூசித்துத் தத்தம் திசையின் ஆதிபத்தியத்தையும், வாகனங்களையும், ஆயுதங்களையும்
Read 8 tweets
#சிவலிங்கம்

சிவபெருமானை ஏன் லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்❓

சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்?

என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சிவபூஜை செய்பவர்கள் சாதாரணமாக அவரை லிங்க உருவில்தான் பூஜை செய்வார்கள்.
ஆலயங்களில் கூட சிவ லிங்கத்தையே சிவபெருமானாக பாவித்து பூஜை செய்வார்கள்.

சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்?

சிவனும் சக்தியும் இணைந்ததே சிவலிங்க உருவம் ஆகும்.

சிவன் இன்றி சக்தி இல்லை, அது போலவே தான் சக்தி இல்லாமல் சிவனும் இல்லை.
ஆகவே பிரபஞ்சத்தைப் படைத்த சிவபெருமான் எனும் பரப்பிரும்மன் என்பது சிவனும் சக்தியும் இணைந்துள்ள சிவசக்தி ரூபமே என்பதினால் சிவனை தனியான உருவிலே பூஜிக்காமல் சிவசக்தியான லிங்க உருவிலே பூஜிக்கிறார்கள்.
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!