Discover and read the best of Twitter Threads about #சிவாயநம

Most recents (4)

சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு  போதும் அழிக்க முடியாது.
ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும்  அழித்து விடும்.
கோ சாபம்: பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.

இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
Read 16 tweets
சிவபுராணம் தினமும் ஓத வேண்டும் !திங்கட்கிழமைகளில் கண்டிப்பாக பாட வேண்டும் ! ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் அவசியம் அனைவரும் படித்து இறைவன் அருளை பெற உதவும் அற்புத பதிகம்
#சிவாயநம
#திருச்சிற்றம்பலம்

#சிவபுராணம்
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
Read 20 tweets
வேண்டுதல்களை நிறைவேற்றும் விநாயகர் அகவல்.

எந்தக் கிழமைகளில் விநாயகரை வழிபட மறந்தாலும்,வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி நாட்களில் மறக்காமல் வணங்க வேண்டும்.அவ்வாறு,விநாயகரை வணங்கும் போது நமது நினைவிற்கு வரவேண்டிய மற்றொருவர் ஒளவையார்.
அவர்‘சீதக்களப செந்தாமரைப்பூம்..’என்று தொடங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை பாடியருளியவர்.
#அகவல்_பிறந்த_கதை

திருமாக் கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர்,சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய நண்பர்.

ஒரு நாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து,கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார்.
Read 13 tweets
“தமிழன்” என்பவன் இந்து-கடவுள் உணர்வாளன். அவன் அழிக்கப்படும் போது இறை நம்பிக்கை மட்டும் அழிக்கப்படுவதில்லை, தமிழனின் தொன்மையும் அழிக்கப் படுகிறது.

பிறர் அழிக்க தலைப்படும் நம் சைவப் பாரம்பரியங்களில் ஒன்று “திருக்கயிலாய வாத்தியம்”.

எல்லையற்ற பரம்பொருளாகிய சிவபெருமானுக்காக,
சிவனடியார்களால் இசைக்கப் பெறுவது “திருக்கயிலாய வாத்தியம்”. அனைத்து சிவன் கோவில்களிலும் தொன்று தொட்டு இசைக்கப்பட்டு வந்தது.

திருஉடல், பிரம்மதாளம், திருச்சின்னம், எக்காளம், தாரை, நெடுந்தாரை, சங்கு, கொம்பு, கொக்கரை ஆகிய பண்டைய இசைக் கருவிகளைக் கொண்டு
வாசிக்கும் இதை, “பஞ்ச வாத்தியம்” என்றும் கூறுவர்.

இவற்றில் மிகவும் பழமையானது கொக்கரை, சங்கு. “சங்கநாதம்” மங்களகரமானது. தமிழகத்தில் அதை பற்றி, எப்படியோ வேறு பார்வை ஏற்பட்டு விட்டது. திருஞானசம்பந்தர் செல்லும் இடங்களெல்லாம், சங்கநாதம் முழங்கியதாக, பெரியபுராணத்தில் குறிப்பு உள்ளது.
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!