Discover and read the best of Twitter Threads about #சீவகசிந்தாமணி

Most recents (3)

#சித்திரையில்_தான்_தமிழ்ப்புத்தாண்டு
இக்கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. உண்மையில், தையோ சித்திரையோ,
சங்க
காலத்தில் புத்தாண்டு என்று ஒரு பண்டிகை கொண்டாடப் பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை! ஆனால் சிறுபொழுது, பெரும்பொழுது எனக் காலத்தைக் கணித்த முன்னோர்கள், குறிப்பிட்ட மாதத்திலிருந்து தான் 12 மாதக் கணக்கைக் ஆரம்பித்திருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை. அம்மாதம் எது? சங்க இலக்கியங்களில் தை
நீராடல் எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப் படுகிறது. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்பு படுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது
Read 29 tweets
"தனி ஒருவர்" - நம் தாத்தா!!

"தமிழ் தாத்தா #உவேசா".. இது ஒன்றை தவிர, தற்போதுள்ள இளைய தமிழருக்கு இந்த தாத்தாவை பற்றி வேற எதுவுமே தெரியாது.

கும்பகோணத்தில் பிறந்திருக்கிறார். இந்த தாத்தாவுக்கு, அவருடைய தாத்தாதான் தமிழ் சொல்லி தந்தாராம். அப்போதெல்லாம் பேப்பர் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதனால் வெறும் மணலில் மட்டுமே அரிச்சுவடி எழுதி பழகி.. அதற்கு பிறகு ஓலைச்சுவடியில் எழுதி எழுதி படித்திருக்கிறார்.

#கும்பகோணம் ஆர்ட்ஸ் காலேஜில் தமிழ் பேராசிரியராக வேலை பார்த்தார். இன்னின்ன பாடங்களை நடத்த வேண்டும் என்று அரசு தரப்பில் குறிப்பு வெளியிடுவார்கள்.
ஆனால், அந்த குறிப்பு பற்றி எங்குமே தொகுப்பு இருக்காது. அதனால், அது சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கெங்கே இருக்கின்றன என்று தேடி கண்டுபிடித்து, அதை வைத்து கொண்டு, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தருவார்.

இவர் பாடம் நடத்தினாலே காலேஜ் #பிரின்சிபல் முதல் பேராசிரியர்கள் வரை..
Read 13 tweets
"ஆதீண்டு குற்றி..."

மனிதனுக்குத் தினவு ஏற்பட்டால் கையால் சொறிந்து கொள்கிறான். ஆடு மாடுகளுக்குத் தினவு ஏற்பட்டால் அவற்றால் எப்படிச் சொரிந்து கொள்ள முடியும்? அவை நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தன் தினவை, அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றன.
இவ்வாறு மாடுகள் உராய்ந்து உராய்ந்து நிழல் தரும் மரங்கள் அழிந்து போகாமல் இருக்கவும், கால்நடைகளின் தேவையை உணர்ந்தும் இவ்வகையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆதி காலந்தொட்டு ஆடுமாடுகள் தினவு அடங்க உராய்வதற்கென்று பலகைக் கற்களையும், குத்துக் கற்களையும் நட்டுள்ளனர்!
இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைந்தன. மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலையை நாடிச் செல்கின்றன.

சேற்றை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு சேறு காயும் போது தினவு ஏற்படுகிறது. உடன் குற்றியை நோக்கிச் செல்கின்றன!
Read 21 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!