Discover and read the best of Twitter Threads about #சைவ_சமயம்

Most recents (7)

#சைவ_சமயம்
#தேவாரம்_மனம்_எனும்_தோணி_பற்றி

நம் வாழ்க்கை என்பது நம் மனம் போன படி போகிறது. மனம் எங்கே இழுத்துக் கொண்டு போகிறதோ நாம் அங்கெல்லாம் போகிறோம். சில சமயம் மனம் செய்ய நினைப்பது தவறாக இருக்கலாம். அப்போது அதை அறிவு கொண்டு சற்றே வழி மாற்றுகிறோம்.
அறிவு எவ்வளவுதான் திசை மாற்ற நினைத்தாலும், மனம் போன படி தான் வாழ்க்கை பெரும்பாலும் நகரும். மனம் என்ற தோனியைப் பற்றி, அறிவு என்ற துடுப்பைக் கொண்டு வாழ்க்கையை இந்த சம்சார சாகரத்தில் செலுத்திக் கொண்டு இருக்கிறோம்.
அந்த தோணியில் என்ன சரக்கை ஏற்றுக் கொண்டு போகிறோம் தெரியுமா ? கோபம் என்ற சரக்கை ஏற்றிக் கொண்டு செல்கிறோம். அப்படி இந்த பிறவி என்ற பெரிய கடலில் நம் வாழ்க்கைப் படகு செல்லும்போது , காமம் என்ற பெரிய பாறையில் அந்த படகு முட்டி தலை கீழாக கவிழ்ந்து விடுகிறது.
Read 12 tweets
#ஓம்_நமசிவாய #சைவ_சமயம்
#கோலாகலமாக_தொடங்கிய_மாங்கனி_திருவிழா!

காரைக்கால்: மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பரமதத்தர் புனிதவதியார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடைபெற்றது. மாலை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவபெருமானின் 63 நாயன்மார்களில் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார். ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது.
இக்கோயிலில் அம்மையாரின் வரலாற்றை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா மிகவும் சிறப்புப் பெற்றதாகும். காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம்
Read 8 tweets
#வீதி_உலாவிற்கு_வெளியே_வராத_நடராஜர்
#சைவ_சமயம்
சோழவள நாட்டில் திருவிடைமருதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள கோனேரிராஜபுரம் என்ற ஊரில் பூமீஸ்வரர் கோயிலில் இருக்கும் நடராஜர் ஆறடி உயரத்தில், மிக அழகாகவும் கம்பீரமாகவும் காணப்படுகிறார்.
• இங்குள்ள நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம் மார்பில் மருவு உடலில் கொழுப்புக் கட்டி கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் நகம் போன்றவைகள் இருப்பது அதிசயமாகும்.

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக்கூத்தராகிய நடராஜப்
பெருமான் காண்போரை கவர்ந்திழுக்கும் சுந்தர நடராஜராகவும்,
உலகிலேயே மிகப்பெரிய நடராஜராகவும் விளங்குகிறார்.

ஒரு சமயம் சோழ மன்னர் ஒருவரது கனவில் பூமீஸ்வரர் தோன்றி கலைநுட்பத்துடன் கூடிய பெரிய பஞ்சலோக நடராஜர் சிலை ஒன்றை அமைக்கும்படி கூறினார்.

அதையடுத்து, நல்ல அழகிய நடராஜர் சிலை அமைத்திட மன்னன் தனது ஆஸ்தான கலைஞர்களிடம் கூறினான்.
Read 14 tweets
#துலாமை_நேர்_நிறுத்திய #அமர்நீதி_நாயனார்
#சைவ_சமயம்
அமர்நீதி நாயனார், சோழவள நாட்டில் பழையாறை என்ற பகுதியில் பிறந்தவர். வணிக குலத்தில் பிறந்தவர். சிவ பக்தியில் திளைத்தவர். பொன், நவரத்தினங்கள், சிறந்த பட்டு,
பருத்தி ஆடை போன்றவைகளை எந்த பகுதியில் சிறப்பாக விளையுமோ அந்தப் பகுதிகளுக்கே சென்று வாங்கி வந்து முறையான விலையில் விற்பனை செய்து வந்தார். அதில் கிடைக்கும் செல்வத்தில் இறைவனுக்கும், அவர்களின் அடியவர்களுக்கும் தொண்டுகள் புரிந்துவந்தார்.
சிவனடியார்களுக்கு துறவிகள் அரைஞாணுக்கு பதிலாக கட்டும் கீழாடை மற்றும் கோவணம் முதலானவற்றை வழங்கி வந்தார். சிவனடியாருக்குச் செய்யும் தொண்டு, சிவனுக்கு செய்யும் தொண்டு என தருமங்கள் செய்து வந்தார்.
Read 22 tweets
எங்கும் எதிலும் எதுவாகவும் கலந்திருந்து அறிவிக்கும் இறையை குருவாக கொண்டு !!

அது / இது நெறி ?? அப்படி / இப்படி மட்டுமே ?? என்ற மாயை களைந்து !!

எதையும் எப்போதும் திருவருளாக அனுபவித்து !!

நம்மை போன்ற சகவாழ்க்கை வாழ்பவர்கள் கூட இறையோடு சுவடு அற்று கலந்துவிடலாம் !!

#சைவ_சமயம்
என்று காட்டி !! உணர்வித்து !!

எப்போதும் நீ சொல்வதை கேட்க இறையே உண்டு என்று ..

அவன் அறிவித்ததை அவனைக்கொண்டே எழுதி நமக்கு உய்யும் வழியை காட்டிய !!

மாணிக்கவாசக பெருமான் மலரடி போற்றி ..

திருச்சிற்றம்பலம்
Read 3 tweets
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்... இறைவன் நமக்களித்த செல்வம்!
#சைவ_சமயம்

நம்முடைய பூமியில் பல விதமா தாவரங்கள் - உள்ளது என்று நாம் அறிவோம். இங்கே வில்வ மரத்தை ஏன் சிவனுக்கு தேர்வு செய்தார்கள். வில்வ மரத்தை பற்றி புரிந்தால் ரகசியம் புரியும். வில்வமரம் நெருப்பு அம்சம் இதில் உள்ள
ரசாயனம் உடலில் உள்ள நச்சு பொருளை அழிக்கும் தன்மைகளை உடையது. சிவ மந்திரம் சொல்லும்பொழுது உடல் சூடாகும் ஆன்மா விழித்து எழும்
இப்படி நடக்கும் பொழுது உடலை சீர் செய்ய வில்வம் இலை உதவி செய்யும். சிவ பெருமான் தொழிலே தவறான செயல் களை அழிப்பது தான்.

நடராஜ தத்துவமும் இதைத்தான் செய்கிறது
அவருடைய தியானம் அதற்கு சக்தி பெறும் செயல்.கருவறையில் சொல்ல படும் மந்திரத்தால் வெப்பம் மிகும். இதனால் உடல் சீர் நிலை மாறும் இதை சரி செய்ய வில்வ இலையால் முடியும்.

ஆம் வில்வத்தில் உள்ள வெப்பம் பனி மலையில் உள்ள வெப்பம்.

சக்தி தேவி முழுமையாக நெருப்பு சிவ பெருமான் மறைமுக நெருப்பு
Read 4 tweets
#சிவனின்_சப்தவிடங்கத்_தலங்கள்

சப்தவிடங்கத் தலங்கள் என்பவை சிவபெருமான் சுயம்பு விடங்க மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஏழு சிவாலயங்கள் ஆகும்.

சப்தம் என்றால் ‘ஏழு’; விடங்கம் என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’  என்று பொருள்; தலங்கள் என்றால் ‘கோவில்கள்’ ஆகும்.
அதாவது உளியால் செதுக்கப்படாமல் சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் விடங்க மூர்த்தியாக அருள் புரியும் கோவில்கள் என்பதாகும்.

இவ்விடங்களில் மூலவரோடு சிறிய லிங்க வடிவ விடங்க மூர்த்தியும் சிறப்பித்து வழிபடப்படுகின்றனர்.
திருவாரூர் திருகாரவாசல் நாகபட்டிணம் திருநள்ளாறு, திருகோளிலி திருமறைக்காடு திருவாய்மூர் ஆகியவையே சப்தவிடங்க தலங்களாகும்
இவ்வேழு தலங்களிலும் இறைவன் முறையே வீதிவிடங்கர் ஆதிவிடங்கர் சுந்தரவிடங்கர் நகவிடங்கர் அவனிவிடங்கர் புவனிவிடங்கர் நீலவிடங்கர் என்ற நாமங்களில் அழைக்கப்படுகின்றனர்
Read 48 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!