Discover and read the best of Twitter Threads about #ஜோதிடம்அறிவோம்

Most recents (9)

#திதி_தேவதைகள்

நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் இராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம்.

ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம்.
கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதியை வைத்து அதற்குண்டான திதி தேவதைகளை வழிபாடு செய்து வந்தால் நாம் நம் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க முடியும்.
இதைதான் விதி படி சிறப்பாக வாழ திதி தேவதை வழிபாடு அவசியம் என் நம் முன்னோர்கள் கூறி உள்ளார்கள்

உங்களுக்குண்டான பிறந்த திதியை வைத்து நீங்கள் செய்யும் முயற்சிகள் எல்லாவற்றிலும் நிச்சயம் பிரமாண்ட வெற்றிகள் கிடைக்கும்.
Read 9 tweets
#ஜோதிட_பரிகாரம்

ஒரே குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருந்தால் செய்ய வேண்டிய வழிபாடு.

ஒரு சில குடும்பங்களில் ஒரே ராசிக்காரர்கள் இருப்பார்கள் .

அதே போல் கணவன் மனைவி இருவருமே ஒரே ராசிக்காரர்களாகவும் இருப்பார்கள் .
கணவன் - மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால் தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் . 

சில சமயங்களில் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஒரே  ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது.
அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால்,

ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர்.
Read 7 tweets
#கடன்_நிவர்த்தி_பரிகாரம்

கடன் தொல்லையில் இருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்குரிய பரிகாரங்கள்

மேஷ ராசி

தயிரைக்கொண்டு ஏதேனும்  மஞ்சள் நிற இனிப்பு பண்டம் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவிற்கு கொடுத்துவர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.
ரிஷப ராசி

ஜவ்வரிசி கொண்டு  இனிப்பு தயாரித்து அதை வெள்ளிக் கிழமை பசுவுக்கு  மாலை வேளையில் கொடுத்துவர கடன்கள் அடைந்து நலம் பெறலாம்.

மிதுன ராசி

தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரகடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன் செய்துவரவும்
கடக ராசி

ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும். ஞாயிறு  அன்று அச்சு வெல்லக்கட்டியை குரங்குகளுக்கு கொடுத்து வரவும்.

சிம்ம ராசி

ஒவ்வொரு சனிக்கிழமையும் அரசமரத்தடியில்  மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றிவர கடன்கள் அடையும்.
Read 8 tweets
#அறிய_வேண்டிய_தகவல்

தலைச்சன் பையனுக்கும் தலைச்சன் பெண்ணுக்கும் திருமணம் செய்யலாமா?

வீட்டில் தலைச்சம் பிள்ளையாக இருந்தால், இருவருக்கும் பிறந்த, புகுந்த இடங்களில் பொறுப்பு அதிகமாக இருக்கும். Image
இருவருமே தலைச்சன்களாக இருப்பதால் இரண்டு குடும்பங்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு, அவர்களின் சுமையை அதிகரிக்கும் என்பதால்தான் அப்படி சொல்லியிருக்கின்றனர்.
உண்மையில் இந்த சொல்வழக்கிற்குப் பொருள் என்னவென்றால்

ஜேஷ்ட மாதத்தில் பிறந்த மூத்த குமாரனுக்கும் (ஜேஷ்ட குமாரன்),

அதே ஜேஷ்ட மாதத்தில்  பிறந்த மூத்த குமாரத்திக்கும் (ஜேஷ்ட குமாரத்தி),

ஜேஷ்ட மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது
Read 5 tweets
#நட்சத்திர_சாதக_தாரை

27 நட்சத்திரங்களுக்கு தனம் தரும் நட்சத்திரங்கள்!

ஒரு நட்சத்திரத்திக்கு தனம் தரும் நட்சத்திரங்கள்

சம்பத்து நட்சத்திரம் - ஜென்ம நட்சத்திரத்திற்கு 2,

11, 20 வது நட்சத்திரம்
பரம மித்தர நட்சத்திரம் -
ஜென்ம நட்சத்திரத்திற்கு
9, 18, 27 வது நட்சத்திரம்
சாதக நட்சத்திரம் -

இந்நாட்களில் காரியங்களை செய்ய பணம் பல வழியிலும் வரும்.

செல்வவளம் குறையாமல் பார்த்துக்கொள்ளும்.

மன நிறைவான வாழ்க்கையைத் தரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி குறையாமல் வைத்துக்கொள்ளும்.
நட்சத்திரங்களுக்கு உண்டான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை?

அதன் அதன் அதிதேவதை யார் என்பதை பார்ப்போம்.

அஸ்வினி :-
பரணி (துர்கை), பூரம் (பார்வதி), பூராடம் (வருணன், ஜம்புகேஸ்வரர்)

பரணி :- கார்த்திகை (அக்னி) உத்திரம் (சூரியன்), உத்திராடம்( கணபதி),
Read 12 tweets
கிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்

ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.
நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற்பலன்கள் பெற்றும் வாழலாம்.
மேலும், ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.
Read 8 tweets
ஒவ்வொரு ராசிக்கான பரிகார மந்திரங்கள்:

மேஷ ராசி:

மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்.

"ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத் மஜம்"
ரிஷப ராசி:

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை
கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

"ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ"
மிதுன ராசி:

மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு
சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54 முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

"ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம"
Read 12 tweets
சனி பகவான் யாரை பாதிப்பதில்லை?????

'சனி கொடுக்க எவர் தடுப்பார்'

1. நமச்சிவாய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.

2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்ப்தில்லை.
3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார்.

4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.
5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார்.

6. சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார்.
Read 13 tweets
ஜோதிட குறிப்புகள்

மொத்த நக்ஷத்திரங்கள் = 27
மொத்த ராசிகள் = 12

#ஜோதிடம் Image
Image
Image
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!