Discover and read the best of Twitter Threads about #தினம்_ஒரு_தகவல்

Most recents (23)

Jun 23rd 2022
#தினம்_ஒரு_தகவல்-100
#SingamTweets

கேவியட் மனு என்றால் என்ன?

எந்தவொரு விஷயத்திலும் தொடர்புடைய நீதிமன்றத்தில் அவர் மீது வேறு சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஒரு பெரிய பயம் அல்லது பதட்டம் கொண்ட ஒரு நபர் எடுக்கும் முன்னெச்சரிக்கை
#ஒன்றியஉயிரினங்கள்
நடவடிக்கையாக கேவியட் மனு வரையறுக்கப்படுகிறது
சட்ட நடவடிக்கை நடவடிக்கைகளுக்கு முன் தகவல்களைப் பெற மனு
சட்டத்தில், இது ஒரு உத்தியோகபூர்வ அறிவிப்பாகும், அதில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அந்த நபருக்கு எப்போதும் தெரிவிக்கப்படும். இதைச் செய்வதன் மூலம்,
அவர் / அவள் மீது கொண்டுவரப்பட்ட எந்தவொரு வழக்கிலும் முடிவெடுப்பதற்கு முன்னர் நீதிமன்றம் நியாயமான விசாரணையை நடத்தும் என்பதை உறுதிசெய்வது.
சட்ட உடல் கடமைகள்
எச்சரிக்கை மனு கிடைத்த பிறகு, வழக்குகள் பதிவு செய்யப்படும்போது நீதிமன்றம் கேவியேட்டருக்கு அறிவிக்கும். சட்டத்தின் படி,
Read 11 tweets
Jun 22nd 2022
#தினம்_ஒரு_தகவல்-99
#SingamTweets

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள்

His rights if a person is arrested

உரிமைகள்

நபரின் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
பிடிப்பாணையின் (Warrant) பேரில் நபர்

#ஒன்றியஉயிரினங்கள் Image
கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டு
நபரின் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை நபருக்கு உண்டு
24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நபரை கொண்டு செல்லப்பட வேண்டும்
பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோஅல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட
Read 10 tweets
Jun 15th 2022
#தினம்_ஒரு_தகவல் - 93
#SingamTweets

உயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை

சொத்தை பங்கீடு செய்வதற்கு நடைமுறையில் இருக்கும் ஆவணங்களில் உயிலுக்கும் இடம் உண்டு. தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய சொத்து தான் விருப்பப்பட்டவர்களுக்கு
#ஒன்றியஉயிரினங்கள் Image
சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் உயில் எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாக ஒருவருடைய சொத்து அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய வாரிசுகளுக்கு போய் சேரும்.

சுயசம்பாத்திய சொத்து
ஆனால் உயில் அப்படிப்பட்டதல்ல. தன்னுடைய வாரிசுகளுக்கும் எழுதி வைக்கலாம்.
மற்றவர்களுக்கும் எழுதி வைக்கலாம். வாரிசு இருந்தும், அவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு எழுதி வைத்தால் வாரிசுகள் அதை எதிர்க்க முடியாது. ஆதலால் பிரியமானவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் உயிலை எழுதி வைக்கலாம்.

எனினும் உயில் எழுதுவதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்
Read 13 tweets
Dec 31st 2021
#தினம்_ஒரு_தகவல் -65

#தமிழ்நாடு -7

தமிழ்நாட்டின் ஊராட்சி நிர்வாகம்

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (Local government bodies in Tamil Nadu) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப்

#ஒன்றியஉயிரினங்கள்
பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV ல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன்படி கிராம ஊராட்சி,
ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு கொண்ட பஞ்சாயத்து ராஜ் என்ற ஊராட்சி முறை அறிமுகமானது. இடஒதுக்கீடு மற்றும் பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள், நகர்புற உள்ளாட்சிகள் என்றும்
Read 20 tweets
Dec 30th 2021
#தினம்_ஒரு_தகவல் -64

#தமிழ்நாடு -6

தமிழ்நாட்டின் நகராட்சிகள்

தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.

#ஒன்றியஉயிரினங்கள்
இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன.
தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக,
அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர்
Read 9 tweets
Dec 29th 2021
#தினம்_ஒரு_தகவல் -63

#தமிழ்நாடு -5

தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்

தமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப

#ஒன்றியஉயிரினங்கள்
மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள இருபத்தி ஒன்று மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் மதுரை மாநகராட்சியும் சேலம்
மாநகராட்சியும் உள்ளது . இந்த ஐந்து மாநகராட்சிகள் மட்டுமே தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகள் ஆகும். பிற மாநகராட்சிகள் , திருப்பூர்,திருநெல்வேலி உட்பட சில மாநகராட்சிகள் அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகிறது. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும்,
Read 11 tweets
Dec 28th 2021
#தினம்_ஒரு_தகவல் -62

#தமிழ்நாடு -4

நிர்வாக அலுவலர் ஆணையர்

ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒரு நிர்வாக அலுவலர் உள்ளார். அவர் ஆணையர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் மாநிலப் பணித்துறையைச் சேர்ந்தவர். அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார்.

#ஒன்றியஉயிரினங்கள்
ஆணையர் எத்தருணத்திலும் இடப்பெயர்வு செய்யப்படலாம். பல்வேறு நகராட்சிகளிலும் பெருமளவிற்கு ஆணையர்களின் அதிகாரங்களும் பணிகளும் ஒத்திருப்பவையாக உள்ளன. சுருக்கமாகக் கூறின் மன்றத்தின் தீர்மானங்களையும் முடிவுகளையும் நகராட்சி ஆணையர் செயலாக்கம் செய்கின்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
தீர்மானங்களின் நகல்களை அவர் அனுப்பி வைக்கின்றார். அவர் ஒப்பந்தங்களைச் செய்கின்றார். சில அறிவிக்கைகள், உரிமங்கள், அனுமதிகள் போன்றவற்றைப் பிறப்பித்து நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பில் தலைவருக்கு துணைபுரிகிறார். அவர் நகராட்சியின் நிலை அறிக்கையை தயார்செய்து செயலாக்கம் செய்கிறார்.
Read 11 tweets
Dec 27th 2021
#தினம்_ஒரு_தகவல் -61

#தமிழ்நாடு -3

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்
விருப்பப் பணிகள்.
1.நகரப் பகுதிகளை வகுத்து அமைத்தல்.
2.பெண்டிர் காப்பு இல்லங்கள், அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகளின் இல்லங்கள், ஓய்விடங்கள், நூலகங்கள், பொது பூங்காக்கள், தோட்டங்கள்
#ஒன்றியஉயிரினங்கள்
முதலானவற்றை நிறுவி பராமரித்தல்.
3.சாலையோரங்களில் மரங்களை நடுதல்.
4.நில அளவைகளை மேற்கொள்ளுதல்.
5.நலிவுற்ற பிரிவினருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல்.
6.நகராட்சிப் பணியாளரின் பொது நலத்தைப் பேணிக்காத்தல்.
7.நகராட்சிப் பகுதிக்குள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி மக்களுக்கு
கலாச்சாரம் மற்றும்பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல். வருவாய் ஆதாரங்கள்
நகராட்சியின் முக்கிய வருவாய் ஆதரங்களாவன.
1.சொத்து வரி.
2.தொழில் வரி.
3.பொருள்கள் மீதான வரிகள் - சுங்க வரிகள்.
4.கால்நடை மற்றும் வாகன வரி.
5.கேளிக்கை வரி.
6.குடிநீர் மற்றும் விளக்கு வரி.
Read 14 tweets
Dec 26th 2021
#தினம்_ஒரு_தகவல் -60

#தமிழ்நாடு -2

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்

மேயர் மற்றும் துணை மேயர்
மேயர் மாநகராட்சியின் அரசியல் ரீதியிலான தலைவர் ஆவார். அவர் நகரத்தின் முதற்குடிமகன் மற்றும் தந்தை என அழைக்கப்படுகின்றார். மேயரை மக்களே நேரடியாகத் தேர்நதெடுக்கின்றனர்
#ஒன்றியஉயிரினங்கள்
கவுன்சிலர்கள் தமக்குள்ளிலிருந்து ஒருவரை துணை மேயராக தேர்ந்தெடுக்கின்றனர் அவர்களுடைய பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். மாநகராட்சியின் மேயர் மாநகராட்சி சட்டதிட்டங்களுக்கு முரணாக செயல்பட நேரிட்டால், மாநகராட்சியின் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பகுதியினர் எழுத்துமூலமாக
மாநகராட்சி ஆணையருக்குத் தெரிவித்து, அதன் மீது ஐந்தில் நான்கு பகுதியினர் மேயருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்படவேண்டும். மேற்படி தீர்மானத்தை அரசு பரிசீலித்து மேயரின்விளக்கத்தினைப் பெற வேண்டும். மேயரின் விளக்கம் அரசுக்கு ஏற்புடையதாக இல்லை எனில், அரசு மேயரை
Read 20 tweets
Dec 25th 2021
#தினம்_ஒரு_தகவல் -59

#தமிழ்நாடு -1

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்

உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் ரிப்பன் பிரபுவால் அறிமுகம் செய்யப்பட்ட கிராமப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அரசாங்கங்கள் பின்வரும் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன.

#ஒன்றியஉயிரினங்கள் Image
1.உள்ளாட்சி அரசாங்கம் நன்றாக வரையறை செய்யப்பட்டுள்ள ஓர் அதிகார எல்லையைப் பெற்றுள்ளது. அது கிராமம் அல்லது மாவட்டம் போன்ற உறுதியானதோர் நிலைவரையைப் பெற்றுள்ளது. அதனுடைய குறிக்கோள், அந்த நிலப்பகுதிக்குள் அல்லது எல்லைக்குள் நிலவும் தனிப்பட்ட தன்மை வாய்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதாகும
2.உள்ளாட்சி அரசாங்கம், அவ்வட்டாரத்திற்குள் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் ஆட்சி செய்யப்படுகின்றது. அவர்கள் வட்டாரத்து வாக்காளர்களுக்குப் பொறுப்பானவர்கள். மைய மாநில அரசாங்கங்களின் தேவையற்ற தலையீடின்றி வட்டாரத்து அலுவல்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்
Read 14 tweets
Dec 15th 2021
#தினம்_ஒரு_தகவல் -57

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 28

இந்து சமய அறநிலையத் துறை

அமைச்சர்
திரு. பி.கே. சேகர்பாபு
044-25670374

Secretary to Government
திரு.B. சந்திர மோகன்
25670820
#ஒன்றியஉயிரினங்கள்
இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு 1 சனவரி 1960 முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது.
மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
Read 12 tweets
Dec 14th 2021
#தினம்_ஒரு_தகவல் -56

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 27

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

அமைச்சர்
திரு. சு. முத்துசாமி
வீட்டுவசதி

அமைச்சர்
திரு. தா.மோ. அன்பரசன்
குடிசைத்தொழில்கள்
044-25674020

Secretary to Government
திரு.ஹிதேஷ் குமார் S
25670516
#ஒன்றியஉயிரினங்கள்
இந்திய மொத்த மக்கள் தொகையில் 27.82 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். இயற்கையான மக்கள் தொகை பெருக்கத்தினாலும், கிராமப்பகுதிகளிலிருந்து நகரப்பகுதிகளுக்கு மக்கள் இடம் பெயர்ந்து வருவதாலும், கடந்த புத்தாண்டுகளில் நகர்ப்புற மக்கள்
தொகை வளர்ச்சியானது 27.16 சதவிகிமாக வளர்ந்தும், அதே நேரத்தில் கிராமப்புற மக்கள் தொகையானது 6.49 சதவிகித வளர்ச்சியுமாக மட்டுமே உள்ளது.

2011-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 7.2 கோடி மக்கள் தொகையில் 3.5 கோடி அதாவது 48.45 சதவிகிதம் மக்கள்
Read 16 tweets
Dec 13th 2021
#தினம்_ஒரு_தகவல் -55

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 26

மனித வள மேலாண்மைத் துறை

அமைச்சர்
திரு.பழனிவேல் தியாக ராஜன்
044-25679136

Secretary to Government
மைதிலி கே. ராஜேந்திரன்
25672740
parsec(at)tn.gov.in

#ஒன்றியஉயிரினங்கள்
அரசுப் பணியாளர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் உயர்த்துவதில் மட்டுமல்லாது நிருவாக நடைமுறைகளைக் காலத்திற்கேற்றவாறு மேற்கொள்வதிலும், மனித வள மேம்பாடு தவிர்க்க முடியாதது ஆகும். இதன் முக்கியத்துவம் தமிழக அரசால் வெகுகாலத்திற்கு முன்பே உணரப்பட்டதன் விளைவாகவே,
திரு.டி.ஏ. வர்கீஸ், ஐ.சி.எஸ அவர்கள் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட மாநில நிருவாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, 1976-ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் நாளில், பொதுத்துறையிலிருந்து பிரிக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட்டது.
Read 11 tweets
Dec 12th 2021
#தினம்_ஒரு_தகவல் -54

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 25

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

அமைச்சர்
திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
044-25670203

Secretary to Government
திரு.குமார் ஜெயந்த்
25671556 PABX 5664
revsec@tn.gov.in

#ஒன்றியஉயிரினங்கள்
வருவாய்த் துறை, தமிழ்நாடு அரசின் தொன்மையான துறைகளில் ஒன்றாகும். இத்துறை முதலில் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் கி.பி. 1786-இல் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் 1781-இல் வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது.
3. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நிலங்களைப் பாதுகாத்து, முறையாக நில ஆவணங்கள் பராமரித்தல்

4.நிலச்சீர்த்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேவையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நிலம் வழங்குதல்
Read 9 tweets
Dec 11th 2021
#தினம்_ஒரு_தகவல் -53

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 24

தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அமைச்சர்
திரு. சி.வி. கணேசன்
044-25673034

Secretary to Government
R. கிர்லோஷ் குமார்
25670472,PABX-5683
labsec@tn.gov.in

#ஒன்றியஉயிரினங்கள்
தொழிலாளர் துறையின் வரலாறு 1920 ஆம் ஆண்டில் துவங்கியது. ஆரம்ப காலத்தில் தொழில்முறைசாரா தொழிலாளர்களின் நலன்களை காப்பதையே முதன்மைப் பணியாக இத்துறை கவனித்து வந்தது. துரிதமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்லாது அமைப்புசாரா தொழிலாளர்களது
நலனையும் பேணும் வகையில் இத்துறையின் பணி விரிவடைந்துள்ளது.

அரசின் தாராளமயமாக்கல் கொள்கை, மாநிலத்தின் துரித பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தது. நாட்டில், பெருமளவு தொழில்மயமான மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்றாகும். மேலும், இம்மாநிலம் பல தொழில்களில் நேரடி அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது
Read 11 tweets
Dec 10th 2021
#தினம்_ஒரு_தகவல் -52

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 23

தகவல் தொழில் நுட்பவியல் துறை

திரு. த. மனோ தங்கராஜ்
044-25671512

Secretary to Government
நீரஜ் மிட்டல்
25670783
secyit.tn@nic.in

#ஒன்றியஉயிரினங்கள்
தகவல் தொழில்நுட்பத் தொழில் முதலீட்டிற்கு இன்றியமையாத தேவைகளான அறிவியல் மற்றும் சமூகக் கட்டமைப்புயும், மனித ஆற்றலையும் தமிழகம் தன்னகத்தே கொண்டுள்ளது. இதை முழுமையாகப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யவும், மக்களுக்கு அரசின் முழு பயன்களையும்
பெற்றுத்தந்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பத்தை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்திடவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆற்றல்மிக்க சீரிய தலைமையின்கீழ் இந்தியாவிலேயே, தமிழகத்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்புயர்வற்ற முதன்மை மாநிலமாக
Read 11 tweets
Dec 9th 2021
#தினம்_ஒரு_தகவல் -51

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 22

இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை

திரு. சிவ. வீ. மெய்யநாதன்
044-25675099

Secretary to Government
அபூர்வா
25671233
மின்னஞ்சல் ywssec@tn.gov.in

#ஒன்றியஉயிரினங்கள் Image
மனிதவள மேம்பாட்டின் முக்கிய அங்கமாக திகழும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, இளைஞர்களிடையே சுகாதாரம், தோழமை, நட்புடன் கூடிய போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்து, அவர்களது ஆளுமைத் திறனை மேம்படுத்த தெளிவான தாக்கத்தை உண்டாக்கும். அனைத்து தரப்பு இளைஞர்களிடையே நல்ல குடிமகனாக Image
விளங்குவதற்கான தகுதிகள், சமுதாய பனிக்காக தங்களை அர்ப்பணித்தல் போன்ற பண்புகளை வளர்ப்பதே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிக்கோளாகும். தனிநபர் பண்புகளை வளர்த்தல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் குறிக்கோளுக்காக பொறுப்பேற்கும் எண்ணத்தை உருவாக்குதல் Image
Read 10 tweets
Dec 6th 2021
#தினம்_ஒரு_தகவல் -48

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 19

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை

அமைச்சர்
திருமதி. பி. கீதாஜீவன்
044-25673209

Secretary to Government
ஷம்பு கல்லோலிகர்
25671545(O)
swsec@tn.gov.in

#ஒன்றியஉயிரினங்கள்
தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, பெண்கள், குழந்தைகள், நலிவுற்றோர், ஏழைகள், மூத்தகுடிமக்கள், திருநங்கைகள் போன்றோரின் நல்வாழ்வை உறுதி செய்து வந்துள்ளது. பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மூலம்,
குடும்ப நலம், ஊட்டச்சத்து நிலை, கல்வி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கு பல வாய்ப்புகளும் வசதிகளும் அளித்து, கண்ணியமான வாழ்க்கை வாழவும் வழிவகுத்துள்ளதுதமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றார் போல்
Read 20 tweets
Dec 5th 2021
#தினம்_ஒரு_தகவல் -47

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 18

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை

அமைச்சர்
திரு. எ.வ. வேலு
044-25671129

Secretary to Government
திரு.தீரஜ் குமார்
25670959
hwaysec@tn.gov.in

#ஒன்றியஉயிரினங்கள்
தமிழ்நாடு, பாரம்பரியமாக வலிமையான தொழில் அடித்தளம் பெற்று விளங்குவதால் நாட்டின் தொழில் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அங்கங்களான தொழில்துறை, தொழில்நுட்பம், வேளாண்மை போன்றவற்றின் வளர்ச்சிக்கு சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தமிழ் நாட்டில் சாலை கட்டமைப்பு மற்றும் சிறு துறைமுகங்களை நிர்வகித்து வருகிறது.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை பராமரிப்பதும், மேம்பாடு செய்வதும் மற்றும் கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலை அமைப்பதும் இத்துறையின் முக்கிய நோக்கங்களாகும்
Read 9 tweets
Dec 4th 2021
#தினம்_ஒரு_தகவல் -46

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 17

தமிழ் வளர்ச்சித் துறை

திரு. தங்கம்தென்னரசு
அமைச்சர்
044-25671696

திரு. மு. பெ. சாமிநாதன்
அமைச்சர்
044-25673130

Secretary to Government
திரு. மகேசன் காசிராஜன்
25672887
tdinfosec@tn.gov.in
#ஒன்றியஉயிரினங்கள்
தமிழ் வளர்ச்சித் துறை வரலாறு
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது.
ஆட்சிமொழிக் குழுவின் தலைவராகத் திரு.என்.வெங்கடேசன் அவர்கள் பொறுப்பேற்றார்.
இக்குழு தமிழகம் முழுவதிலுமுள்ள அலுவலகங்களை ஆய்வு செய்து தமிழில் அலுவல்களை நடத்த அறிவுரையும், ஆட்சிமொழித் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைக் களைய அறிவுரையும்,
Read 14 tweets
Dec 3rd 2021
#தினம்_ஒரு_தகவல் -45

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 16

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

அமைச்சர்
திரு. கேஆர். பெரியகருப்பன்

044-25671184

Secretary to Government
P. அமுதா
25670769
ruralsec@tn.gov.in

#ஒன்றியஉயிரினங்கள்
மக்கள் நலத்தைப் பேணுகின்ற மாநிலமான தமிழகத்தில், அரசின் முயற்சிகள் அனைத்தும் ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின், சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சமூக, பொருளாதார வளர்ச்சியே ஊரக வளர்ச்சியின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும், தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
Read 15 tweets
Dec 2nd 2021
#தினம்_ஒரு_தகவல் -44

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 15

கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை

அமைச்சர்
திரு. ஆர். காந்தி
044-25674234

Secretary to Government

தர்மேந்திர பிரதாப் யாதவ்
25671623
மின்னஞ்சல் htksec@tn.gov.in

#ஒன்றியஉயிரினங்கள் Image
கைத்தறி நெசவுத் தொழிலானது 65 இலட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உள்ளடக்கிய, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொழிலாகும். பாரம்பரியம் மற்றும் நேர்த்தியான கைவினை, நெசவு ஆகியவைகளின் அடிப்படையில் தமிழ்நாடானது கைத்தறி தொழிலில் இந்தியாவிலேயே முன்னினை மாநிலமாக உள்ளது. Image
பண்டைக் காலந்தொட்டே நேர்த்தியான நெசவுக்கு புகழ்பெற்றது கைத்தறி நெசவாகும். தமிழகத்தை பொறுத்தமட்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றுவதுடன் 3.19 இலட்சம் நெசவாளர்கள் உள்ளடக்கிய 1.89 இலட்சம் நெசவாளர் குடும்பங்கள் கொண்டது கைத்தறி தொழிலாகும். Image
Read 13 tweets
Dec 1st 2021
#தினம்_ஒரு_தகவல் -44

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 15

மின்சாரத்துறை

அமைச்சர்
திரு. வி. செந்தில்பாலாஜி @V_Senthilbalaji
044-25673037

Secretary to Government
ரமேஷ் சந்த் மீனா
25671496,PABX-5975

#ஒன்றியஉயிரினங்கள் Image
தமிழ்நாடு மின்சார வாரியம் 1957-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1-ஆம் தேதி மின்சாரம் (வழங்கல்) சட்டம் 1948 பிரிவு 54-இன் கீழ் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் பகிர்மானப் பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நிறுவனமாக இயங்கி வந்தது.
தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு மின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம், தநாமிவா நிறுவனம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும்
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!