Discover and read the best of Twitter Threads about #திருச்செந்தூர்

Most recents (7)

#ஸ்ரீமுருகப்பெருமானின்_ஆறுபடைவீட்டுச்_சிறப்புகள்
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய 6 தீப்பொறிகள் ஒன்றிணைந்து ஆறுமுகனாய் உருவானதை புராணம் சொல்கிறது. உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப் பட்ட அவதாரமே ஆறுமுகப் பெருமான். கருணையே வடிவான 6 திருமுகங்களை, Image
12 கரங்களை தாங்கி அருள் பாலித்து அடியவர்களை காக்கும் கலியுகக் கடவுள் அவர். #முருகு எனும் சொல் அழகு, இளமை, தெய்வ நலம், மணம் ஆகிய பொருள்களைக் குறிக்கும். முருகு என்னும் திருப்பெயரோடு அன் விகுதி சேர்த்து #முருகன் என்னும் திருப்பெயர் சூட்டிப் போற்றி வழிபடுகிறோம். சூரபத்மன் என்னும்
அசுரன் பலகாலம் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவமிருந்தான். தவத்தின் வலிமையால் சிவபெருமானிடம் 108 யுகங்கள் வாழும் ஆயுளும், 1008 அண்டங்களை ஆளும் அதிகாரத்தையும், சிங்க வாகனமும், இந்திர ஞானத்தேரும், அழியாத வஜ்ஜிர தேகமும், சிவனது சக்தியினாலன்றி வேறு எந்தச் சக்தியினாலும் அழிக்க முடியாத
Read 16 tweets
#ஆறுபடை_வீடு 

முருகனுக்கு அரோகரா 🙏

சித்தர்கள் ஞானிகளின் குருவான முருகனுக்கு ஆறுபடை வீடு நம் முன்னோர்கள் அமைத்ததன் ரகசியம் என்ன தெரியுமா?

1 Image
மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், அபயம் (பாதுகாப்பு) ஆளுமை, ஞானம் ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் சக்தியுள்ள இடங்களில் ஆறுமுகன் ஆலயங்கள் அறுபடை வீடாக எழுப்பப்பட்டன.

2
ஆரோக்கியத்திற்கு சுவாமிமலை, உறவுக்கு திருப்பரங்குன்றம், பொருளாதார வசதிக்கு சோலைமலை, பாதுகாப்புக்கு திருச்செந்தூர், ஆளுமை திறனுக்கு திருத்தணி, ஞானம் பெற பழநி ஆகிய தலங்களை தரிசிக்கலாம்.

3
Read 23 tweets
#காயல்பட்டினம் - ஓர் இசுலாமிய வணிகத்தலம்...!

#தூத்துக்குடி மாவட்டம், #திருச்செந்தூர் அருகில் #தாமிரபரணி கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது #காயல்பட்டினம் என்னும் பேரூர்.

இவ்வூரின் பழைய பெயர் #காயல் என்பதாகும். #பழையகாயல், #புன்னைக்காயல், #காயல்பட்டினம் என மூன்று பகுதிகளாக..
இன்று அறியப்படும் இவ்வூர் முன்பு ஒரே நகரமாக விளங்கியது.

இவ்வூரைப்பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள் எதுவும் இல்லை.

ஏனெனில், சங்க காலத்தில் இப்பகுதியில் #கொற்கை துறைமுகமே செல்வாக்குப் பெற்றிருந்தது.

#கொற்கை துறைமுகமிருந்த இடத்தில் கடல் பின்வாங்கி நிலம் உருவான பின்னர்...
#காயல் ஒரு துறைமுகமாக
வளர்ந்தது. கொற்கைக்குத் தெற்கில் #காயல்பட்டினம் அமைந்துள்ளது.

காயலுக்கு தெற்கில் #வீரபாண்டியபட்டினம் அமைந்துள்ளது. இவ்வூர் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் பெயரால் (பொ.பி 946-966) அமைந்ததாகும்.

ஏற்கெனவே, காயல்பட்டினம் குறித்த சில ஆய்வுகள் ஆய்வாளர்களால்...
Read 29 tweets
#நோய்கள்_தீர்க்கும்_சில_திருத்தலங்கள்

#வைத்தீஸ்வரன்கோவில் இந்த ஆலயத்தில் உள்ள வைத்தியநாதரை வணங்கி வழிபட, தீராத நோய் தீரும். இத்தலம் செவ்வாய் பகவானின் தோல் நோய் தீர்த்த தலமாகும். இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டை பிரசாதம் பல நோய்களை குணமாக்கும்.

#சங்கரன்கோவில் ராஜபாளையம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது சங்கரன்கோவில். இங்கு தரப்படும் புற்றுமண் பிரசாதம் சகல சரும நோய்களையும் குணமாக்கும். நாகதோஷத்தால் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நல்ல முன்னேற்றம் ஏற்படுவது கண்கூடு.

#திருச்செந்தூர் ஆதிசங்கரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம். இங்கு பன்னீர்
இலையில் தரப்படும் திருநீற்றை நெற்றியில் பூசியும் வாயில் இட்டு கொள்வதும் நோயை தீர்க்கும்.

#ஸ்ரீமுஷ்ணம் விருத்தாச்சலத்தில் அருகில் உள்ளது இங்குள்ள பூவராகசுவாமி கோவிலில் கொடுக்கப்படும் முஷ்தாபி சூரணம் தீராத நோய் தீர்க்கும் அருமருந்தாகும்.

#பழனி இவ்வாலயத்தில் அதிகாலையில் தரப்படும்
Read 8 tweets
குமரனின்அறுபடைவீடுகள்

#திருப்பரங்குன்றம் :

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். 🙏🇮🇳1
முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் "திருப்பரங்குன்றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

🙏🇮🇳2
#திருச்செந்தூர் :

முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். 🙏🇮🇳3
Read 14 tweets
"சட்டிச்சோறு..."

கல்வெட்டுக்களில் #சட்டிச்சோறு #எச்சோறு #புள்ளிச்சோறு #திங்கட்சோறு #வரிச்சோறு #வெட்டிச்சோறு என்று பல சொற்றொடர்கள் வருகின்றன. இதில் #எச்சோறு என்பது ஒரு வகை வரியாகும்.

#சட்டிச்சோறு எவ்வாறு கொடுக்கப்பட்டது என்பதை பின்வரும் கல்வெட்டுகள் விரிவாக எடுத்துரைக்கின்றது!
#சட்டிச்சோறு என்பதற்கு கோயில் வேலைக்காரர்களுக்கு கொடுக்கப்படும் "உரிமை பிரசாதம்"என திரு T. N சுப்ரமணியம் அவர்கள், "தென்னிந்திய கோயிற் சாசனங்கள்" நூலில் விளக்கம் கூறுகிறார்.

இது திருவிழாவிற்கு வரும் அடியார்களுக்கு, யாத்திரிகர்களுக்கு அளிக்கப்பட்டதாக பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன!
க) திருவண்ணாமலைக் கல்வெட்டு:

முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் திருவண்ணாமலைக் கோயிலில் பல பணிகள் நடைபெற்றிருக்கின்றன.

இவனுடைய பணி மகன் ஒருவன் “பாண்டிய உதய திவாகரன்” என்பவன் சோழமண்டலத்து அருமொழித்தேவ வளநாட்டு ஓர்வலக் கூற்றத்து ராஜராஜ நல்லூரைச் சேர்ந்தவன்.
Read 18 tweets
பழந்தமிழர்களின் நீர் மேலாண்மை!

தமிழர் வாழ்வியலில் பின்னிப் பிணைந்த மிகப் பெரிய நீர் சமூகம் ஒன்று இருந்தது. இவர்கள்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்தவர்கள். நதியில் ஓடும் நீரை ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்த்து, அதை சேமித்து வைத்து, விளைநிலங்கள் வரை கொண்டு சேர்ப்பதுதான் இவர்களது வேலை!
பெருக்கெடுத்து ஓடும் நதியின் நீரை கால்வாய் வழியாக ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பது சாதாரண காரியமில்லை!

அதற்கு நிறைய தொழில்நுட்பம் தேவை. அது இவர்களிடம் மண்டிக்கிடந்தது. ஆற்றில் நீர் குறைவாக போகும் போதும் அந்த நீரை ஏரிக்கு கொண்டு வருவது எப்படி? என்ற நுணுக்கம் கற்றிருந்தார்கள்!
ஆற்று நீரை முழுவதுமாக தடுத்து தமது ஏரியை மட்டும் நிரப்பிக்கொள்ளாமல் தமக்கு அடுத்ததடுத்து இருக்கும் நீர்நிலைகளுக்கு ஆற்றுநீரை எப்படி பங்கிட்டுக்கொடுக்க வேண்டும்? என்ற கணக்கெல்லாம் தெரிந்து வைத்திருந்தவர்கள் இவர்கள். இந்த நீர் சமூகத்தின் அந்த பிரிவினருக்கு #நீராணிக்கர்கள் என பெயர்!
Read 95 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!