Discover and read the best of Twitter Threads about #திருமலை

Most recents (3)

#ஆனந்தநிலையம் #திருமலை திருமலையில் திருவேங்கடவன் கொலுவிருக்கும் கருவறையின் மேற்கூரையே ஆனந்த நிலையம் என அழைக்கப்படுகிறது. இது முழுதும் கல்லால் வேயப்பட்டு பொன்னால் போர்த்தப் பட்டதாகும். வாயு தேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே ஒரு பந்தயம் நடந்தது. அதில் வாயுதேவன், ஆதிசேஷனை கீழே விழும் Image
படிச் செய்தான். அவ்வாறு விழுந்த ஆதிசேஷன், சேஷாசலம் என ஏழுமலையில் ஒன்றாக ஆனார். சேஷாசலம் மீது ஆனந்தன் இருப்பதால் அந்த பிரதேசத்திற்கு ஆனந்த நிலையம் என்ற பெயர் வந்தது. அதன் காரணமாக ஸ்ரீனிவாசனான ஸ்ரீவேங்கடேஸ்வரன் உள்ள கர்ப்பாலயம் மீது நிர்மாணிக்கப்பட்ட விமானத்திற்கும் #ஆனந்தநிலையம் Image
என்று பெயர் வந்தது. மூன்று அடுக்கு விமானம், இரண்டு அடுக்கு வரையிலும் சதுரமாகவும் அதன் மீது உள்ள கழுத்து வட்டமாகவும் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. கற்கள், சுண்ணாம்பினால் கட்டப்பட்ட இந்த விமானம் மீது செப்புத் தகடுகளைக் கொண்டு வேய்ந்து அதன் மீது தங்க முலாம் பூசப்பட்டதால் ஆனந்த நிலையம்
Read 7 tweets
#புரட்டாசி_ஸ்பெஷல்
#ஸ்ரீநிவாசப்பெருமாள்
#ஶ்ரீராமானுஜர்
உடையவரை, சிஷ்யர்கள் தெண்டனிட்டு "தேவரீர் தீதில் நன்னெறி காட்டித் தேசமெங்கும் திக்விஜயம் செய்து அங்குள்ள திவ்யதேசங்களையும் மங்களாசாசனம் செய்யவேணும்" என்று விண்ணப்பித்தனர்.இதற்கு நம்பெருமாளும் இசைந்தருள, உடையவரும் சோழ மண்டலம்
தொடங்கி, பாண்டியநாட்டு திவ்ய தேதங்களை சேவித்து, அங்கிருந்து மலையாள நாட்டு திவ்யதேசங்கள் சென்று, வடநாட்டுக்கு எழுந்தருளி சாளக்ராமம், திருவதரி முதலான திவ்யதேசங்களையும் சேவித்தபடியே #திருமலை வந்தடைந்தார். அங்கே,
"தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும்
தோன்றுமால்-சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேலெந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாயிசைந்து”
என்று ஆழ்வார் அருளியபடி திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஜகத்காரணனான ஶ்ரீநிவாசனுக்கு லக்ஷணமாய் நீள்முடியும், சங்கு-சக்ர திவ்யாயுதங்களும், திருயஜ்ஞயோபவீதமும் கூடியிருக்க, அந்த ஜகத்காரணனை உபாஸனை
Read 7 tweets
#குலக்குறி வழிபாடு...!

பண்டைக்காலத்தில் ஒவ்வொரு குலத்திற்கும், ஒரு குறியீடு இருந்தது.

அக்குறியீடு அக்குலத்தின் அடையாளமாகவும், பெருமைக்காகவும் மதிப்புடன் அவ்வின மக்களால் போற்றப்பட்டு வந்தது.
ஆவி வழிபாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சி நிலையாக ஒரு குறிப்பிட்ட குலத்தின் வீரன் இறந்துபட்டால்,

அவனது நினைவுச்சின்னத்தில் அவன் குலத்தின் குறியீடான விலங்குகளையோ, மரங்களையோ சேர்த்து வைத்து வழிபடுவது பண்டு வழக்காயிருந்தது.

உடலில் இருந்து ஆவி எளிதில் பிரிந்து விடாது.
அதை வெளியேற்றுவதற்கு உடலைத் தீயிட்டு அழிக்கின்றனர். தீயிட்ட பின்னரும் எலும்புகளில் உயிர் தங்கியிருப்பதாக நினைக்கிறார்கள்.

அதனால் எலும்புகளையும் உடைத்துவிடுகிறார்கள். இறுதியாக ஆவி பிரிந்து விடுகின்றது. அது வானத்தில் மேகங்களுக்கும் மேல் சென்று நின்று விடுகிறது.
Read 22 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!