Discover and read the best of Twitter Threads about #திருவாய்மொழி

Most recents (7)

#ஸ்ரீவைஷ்ணவம் #ஆழ்வார்_பெருமை ஒரு முறை நம்மாழ்வாருக்கும் பகவானுக்கும் யார் பெரியவன் என்ற விவாதம் நடக்கிறது. நம்மாழ்வார், பகவானே உன்னை விட நான் தான் பெரியவன். காரணம், நீ இரண்டு உலகங்களையும் (விண், மண்) உன்னிடம் வைத்திருக்கிறாய். அப்படி வைத்திருக்கும் உன்னையே நான் என்னுள் வைத்து Image
இருப்பதால் நானே பெரியவன் என்பதை ஒப்புக்கொள் என்று விவாதம் வைத்து இறைவனின் கருணையைப் பெறுகிறார் நம்மாழ்வார். பெருமானை விட நம்மாழ்வார் பெரியவர் என்றால், அவரை தன் உள்ளத்தில் வைத்திருக்கும் #மதுரகவியாழ்வார் பெரியவருக்கு பெரியவரல்லவா. இதைத் தான் இராமானுஜ நூற்றந்தாதியில் பாடுகிறார். Image
பெருமாள் கோயில்களில் நம் சிரசில் வைத்து அருளப்படும் #சடாரி என்பது பெருமாளின் திருவடி நிலைகளாகும். நம்மாழ்வாரே பெருமாளின் திருவடிகளில் இருப்பதால் அவரது பெயரான #சடகோபன் என்பதே சடாரி என்று மருவியது. “மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே”என்று பாடிய மதுரகவிகள் நம்மாழ்வாரின் திருவடிகளாக Image
Read 7 tweets
#ஆழ்வார்_அருளிச்செய்தது #நாலாயிர_திவ்யபிரபந்தம் #ஸ்ரீவைஷ்ணவம் #ஸ்ரீராமானுஜர்

#திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டுவிட்டனர். சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில்/காட்டுமன்னார்குடியில் #ஸ்ரீநாதமுனிகள்
என்னும் வைணவர் அவதரித்தார். அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு அப்பெருமாள் கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தார். அவர் ஓரு நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப்பெருமாள் கோவில் சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக் கொண்டிருந்த
பொழுது, தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள்
ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.
எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை
Read 38 tweets
#விசிஷ்டாத்வைதம் #ஸ்ரீவைஷ்ணவம் #த்வயம் என்பது
ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே
ஸ்ரீமதே நாராயணாய நமஹ
திருமால் ஸ்ரீவைகுண்டத்தில் பிராட்டிக்கு இந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார். இதன் பொருள் லக்ஷ்மிநாதனான எம்பெருமானின் திருவடியே உபாயமாகப் பற்றி அவனுக்கு பிராட்டியின்
சேர்த்தியிலே கைங்கர்யம் புரிய வேண்டும் என்பதே ஆகும். எம்பெருமானின் இரு அவதாரங்களில் நாராயண ரிஷி நர ரிஷிக்கு பத்ரிகாஸ்ரமத்தில் உபதேசித்தது. பகவானின் உடைமையான ஜீவாத்மா அவரின் உகப்புக்காகவே இருத்தல் வேண்டும். எல்லார்க்கும் தலைவனான நாராயணனுக்கே கைங்கர்யம் செய்தல் வேண்டும் என்பது இதன்
எளிய பொருள்.
#திருவாய்மொழி த்வயத்தின் பொருளை விளக்க ஆழ்வார்களின் தலைவரான #நம்மாழ்வார் நமக்கு அருளியது. ஆறாம் பத்தில் இறுதியில் நம்மாழ்வார் திருவேங்கடமுடையானிடம் சரணாகதி அனுஷ்டிக்கிறார். ரகஸ்ய த்ரயத்திலே வீரு கொண்டு விளக்கும் மகா மந்திரம் முன் வாக்கியத்தாலே சரணாகதி அனுஷ்டிப்பதையும
Read 10 tweets
It is #fascinating to read #Hultzsch books on South Indian Inscriptions published by the #ASI in 1899. In volume III, he has written in detail about many temples.

/1
In chapter one, he has recorded most inscriptions in the #Ukkal #Vishnu #temple called Pūvaṇimāṇikka-Viṣṇugraham, i.e., the temple of ‘Bhuvanamāṇikya’. This word means, 'the ruby of the world'.

/2
The deity of the temple is #Tiruvāymoḻi #Dēvar. This is the name of that portion of #Nālāyiradivyaprabandham which was composed by Śaṭagopa alias Nammāḻvar.

#உக்கல், #திருவாய்மொழி, #நம்மாழ்வார், #சடகோபன்

/3
Read 4 tweets
#திருமங்கையாழ்வார் அவரின் திருவவதார நன்னாள் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம். அன்று ஒரு பௌர்ணமி நன்னாள். அந்த நன்னாளில் ஆழ்வார் அரங்கன் சந்நிதியில் நின்று கொண்டு இருக்கிறார். #ஸ்ரீவைஷ்ணவ பக்தகோடிகள் எழுந்தருள அப்போதுதான் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடந்து
அவர்கள் குளிர்ந்திருந்த நேரம். தன் திருநட்சத்திரமான அந்நன்னாளில் நம்பெருமாளுக்கு ஏதேனும் பெரிய அளவில் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்தது ஆழ்வாருக்கு. நாராயணன் அருள் பரிபூர்ணமாகக் கிடைத்தவர் அன்றோ அவர். அதன் மூலம் அயர்வற மதிநலம் படைத்தவர்! கண்கள் மூடி பகவானையே மனதில்
நினைத்து அவர் சந்நிதியில் நின்று கொண்டிருக்கையில் எம்பெருமானைப் புகழ்ந்து அவரிடம் இருந்து பாசுர வரிகள் மடை திறந்த வெள்ளமென கொட்டின. அன்று அந்த பகவத் சந்நிதியில் ஒரு புது பிரபந்தம் உருவாயிற்று. அந்த பாசுர வரிகள் தான் பின்னர் #திருநெடுந்தாண்டகம் என்ற பெயரில் நாலாயிரத்தில் ஒரு
Read 9 tweets
#நம்மாழ்வார் #திருவாய்மொழி
திருவாய்மொழி சாம வேதத்தின் பொருள். திருவாய்மொழிக்கு அழகு பொருந்திய வாய்மை ஆகிய மொழி என்று பொருள். இது வேதத்துக்கு நேர். எனவே சத்யம் ஆனது. பராங்குச நாயகியாக நாயிகா பாவத்தில் நம்மாழ்வார் அனுபவித்த பாசுரங்களும், எம்பெருமானை அடைய அவன் அர்ச்சை நிலையில்
பல்வேறு திவ்ய தேசங்களில் குடி கொண்டுள்ள எம்பெருமான் மீது பக்தியுடன் பாடியதே திருவாய்மொழி. கிருஷ்ணாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டதால் பராசர பட்டர் நம்மாழ்வாரை கிருஷ்ண கிருஷ்ணா தத்வம் என்று போற்றுகிறார். ராமானுஜர் திருவாய்மொழியை அடிப்படையாகக் கொண்டே தமது காலக்ஷேபங்களை செய்து
வந்ததும் விசிஷ்டாத்துவைதத்தை ஏற்படுத்தியதும் இந்த உயரிய நூலின் சிறப்பம்சமாகும். 1102 பாசுரங்களைக் கொண்ட நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு ஸ்ரீராமானுஜர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருக்குருகைப் பிள்ளைப் பிரான் என்பவர் ஆறாயிரப்படி (ஆறாயிரம் கிரந்தங்கள் - ஒரு க்ரந்தம் என்பது 32
Read 9 tweets
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் அவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டெனும் யானே என்னும்
கடல் ஞாலம் முண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன்வந் தேறக் கொலோ?
கடல் ஞா லத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
கடல் ஞா லத்தென் மகள்கற் கின்றனவே?
பொருள்:
கடலோடு கூடிய ஜகத்தை வேறு எந்த உதவிகள் தேவையின்றி ஸ்ருஷ்டித்தவன் நானே
ஸ்ருஷ்டித்தப்பிறகு அவைகளில் அநுப்பிரவேசித்து அதன் ஆத்மாவாக நிற்பவனும் நானே
மஹாபலியிடமிருந்து தேவை என்று இரந்து அளந்து கொண்டேனும் நானே

#திருவாய்மொழி #பராங்குசநாயகி #படித்ததை_பகிர்கிறேன் #எவ்வுள்கிடந்தான்
பிரளய காலத்தில் வராஹ அவதாரம் எடுத்து இந்த ஜகத்தை கீண்டு எடுத்தேனும் நானே
மஹாப்ரளயத்தில் இந்த லோகத்தை அழித்தவனும் (உண்டேனும்) நானே
இப்படி ஸர்வநியமிப்பவனான ஸர்வேஸ்வரன் வந்து இவளை ஆவேசிப்பது நடக்கூடியதா?
இதே உலகத்தில் வசிக்கும் என் மகள் இவ்வாறு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிற
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!