Discover and read the best of Twitter Threads about #துர்க்கை_அம்மன்_வழிபாடு

Most recents (3)

#வன_துர்க்கை

தினமும் காசிக்குப் போகும் கதிராமங்கலம் வன துர்க்கை!

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு.

இங்கு தான் தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள்,

ஸ்ரீ வன துர்கா பரமேஸ்வரி.
இந்த அம்பிகை அனுதினமும் காசிக்குச் சென்று வருவதாக ஐதீகம்.

அதற்குக் காரணம் ஒரு முனிவர்!

வேதங்களே விருட்சங்களாக வளர்ந்து நின்று இறைவழிபாடு செய்த புண்ணியம்பதியாம் வேதாரண்யம் திருத்தலத்தைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார் அந்த முனிவர்.
அவர் செல்லும் வழியில், அசுரன் ஒருவன் மலை உருவில் நெடிதுயர்ந்து வளர்ந்து நின்று அவரை வழிமறித்தான்.

அவனை அழிக்கும் சக்தி வேண்டும் என்று துர்கா தேவியைப் பிரார்த்தித்து தவம் செய்தார் முனிவர்.

அவருடைய தவத்தால் மகிழ்ந்த துர்கை, முனிவருக்குக் காட்சி தந்தாள்.
Read 28 tweets
#துர்க்காஷ்டமி சிறப்பு பதிவு :

மஹிஷாசுரனை பராசக்தி வதம் செய்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.

அந்த அசுரன் வீழ்த்தப்பட்ட இடத்திற்கு 'மஹாபல கிரி' என்று பெயர்.

விக்ரமாதித்த மஹாராஜா ஒரு சிறந்த காளி உபாசகர்.

இவர் மஹிஷன் சம்ஹரிக்கப்பட்ட அதே இடத்தில், Image
பராசக்திக்கு ஒரு கோயில் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டு அவ்வண்ணமே செய்தார். அதுதான் இன்று நாம் தரிசிக்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில்.

துர்க்கம் என்றால் கோட்டை என்று அர்த்தம்.

தன் பக்தர்களை துன்பங்கள் அணுகாமல் காவல் கோட்டையாக இருந்து காப்பாற்றும் கடவுளை துர்க்கை என்கிறார்கள்.
துர்க்கமன் என்ற அசுரனை அழித்தாள் மகாசக்தி.

எனவே அவளை துர்க்கை என்கிறார்கள்.

துர்க்கை மகிஷாசுரனை அழிக்கும் முன் ஒன்பது நாட்கள் தவமிருந்தாளாம்.

விஜய தசமி
அன்று மகிஷனை அழித்து வெற்றி பெற்றாளாம். நவராத்திரி என்ற சொல்லில் உள்ள 'ராத்திரி' என்ற சொல்லுக்கு துர்க்கை என்ற பொருள்.
Read 16 tweets
குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய துர்க்கை :

நம்முடைய குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குகிறோம்.
குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிகாட்டும் அருள்சக்தியாகக் கருதப்படுகிறது. 

பெரும்பாலான சிலருக்கு தங்கள் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கும்.

இதனால் அவர்களுக்கு பல சோதனைகள் ஏற்படுவதாகச் சொல்வதுண்டு.
இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபாடு செய்வதற்கென்றே அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவில்  கும்பகோணம் அருகிலுள்ள குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ., தூரத்திலுள்ள கதிராமங்கலத்தில் உள்ளது. 

கதிர் வேய்ந்த மங்கலம் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இவ்வூரைக் குறிப்பிடுகிறார்.
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!