Discover and read the best of Twitter Threads about #நற்றுணையாவது_நமச்சிவாயவே

Most recents (11)

1/ @HinduismToday அமெரிக்காவில் ஹவாய் மாநிலத்தில் உள்ள Kauai ஊரில் சிவபெருமானுக்கு கல்லால் கோவில் கட்டப்பட்டுள்ளது .இக்கோவிலை Kauai's Hindu Monastery துறவிகள் கட்டி உள்ளனர்.
இக்கோவிலின் பெயர் "இறைவன் கோவில்".

himalayanacademy.com
@HinduismToday 2/ இத்திருப்பணி சுமார் 33 ஆண்டுகள் நடைபெற்று வருகிற ஞாயிற்றுக் கிழமை மார்ச் 26 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இக்கோவிலுக்கு ஆன கல் மண்டபங்கள் , தூண்கள் , சிற்பங்கள் பெங்களூர் சிற்ப சாலையில் செய்யப்பட்டு அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டது .

@HinduismToday 3/ ஹவாய் தீவு சுனாமி மற்றும் எரிமலை பாதிப்பு உள்ள பகுதி என்பதால் இக்கோவிலை கல்லால் கட்டி உள்ளனர்.

சற்குரு சிவாய சுப்பிரமணிய ஸ்வாமிகள் Kauai's Hindu Monastery என்கிற ஹிந்து மத ஸ்தாபனத்தை Kauai தீவில் நிறுவினார்.
Read 9 tweets
1/ மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது

திருச்சிற்றம்பலம் #நற்றுணையாவது_நமச்சிவாயவே #சைவசமயம் #சைவம்
2/
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக்கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்
3/
i. அஞ்சிலே ஒன்று பெற்றான் --> பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று தன்மையான வாயு தேவரின் மைந்தன் அனுமன்
ii. அஞ்சிலே ஒன்றைத் தாவி --> பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் தன்மையான பெருங்கடலை தாண்டினார் அனுமன்
Read 5 tweets
“கோயில் விளங்கக் குடி விளங்கும்”

எங்கள் நெறி சொன்னது.
இதை உணர்ந்து எங்கள் முன்னோர்கள் கட்டிய கோயில்களை, அவர்களது பெருமைகளை அழிக்கத் துடிக்கும் ஈனர்கள்.

நமக்கு கிடைக்கப் பெற்ற தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள், மற்றும் உள்ள ஏனைய கோயில்களில் உள்ளவர்கள் இந்து தெய்வங்கள் தானே.!
👇🏼
சனாதனமே வாழ்வியல் நெறி.!

நம் சனாதன தர்மத்தைப் பற்றியும் அதிலும் குறிப்பாக சைவநெறி பற்றியும் அடிப்படை அறிவு கூட இல்லாத திரு.தெரு, திராவிட விசங்கள், பகுத்தறிவு வியாதிகள் எல்லாம் உருட்டும் பிரட்டுகளை சகிக்காமல், எழும் கேள்விகள் சில.

கேள்விகளுக்கு முன் திருமுறைகள் பாடல்கள் சில.
👇🏼
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி!
மருகிய கருணை மலையே போற்றி!
-மாணிக்கவாசகர் சுவாமிகள்.

திருவழி ஆவது சிற்றம் பலத்தே
குருவடிவு உள்ளாக் குனிக்கும் உருவே
உருஅரு ஆவதும் உற்றுஉணர்ந் தோர்க்கு
அருள்வழி ஆவதும் அவ்வழி தானே.!
-திருமூலர்
👇🏼
Read 12 tweets
"காதில் பூ வைக்காதீங்க"

இதை கிண்டலாக சொல்லும் போது, நம் நெறியை இழிவுபடுத்துகிறோம் என்று தெரியாமலே சொல்கிறோம்.

அப்படி என்ன தவறு இந்த சொற்களில்.?

"பூ நாளும் தலை சுமப்ப"

-என்று திருஞானசம்பந்தர் பாடுகிறார்.

1/
நீ நாளும் நன்நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார்
சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்று ஏத்த பெறலாமே, நல்வினையே.!

என திருஞானசம்பந்தர் சுவாமிகள், திருச்சாய்க்காட்டு திருப்பதிகத்தில் பாடியுள்ளார்.

2/
எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று
அருச்சிப்பதை கூறுவதாக பொதுப் பொருளாக விளக்கம் எடுத்துக் கொள்ளக்கூடாது.

"எட்டுருவ மூர்த்தியாம் எண்தோளானாம், என் உச்சிமேலானாம் எம்பிரானாம்" என்று அப்பர் சுவாமிகள் அருளியுள்ளார்.

உச்சிமேலான் என்பது,

3/
Read 9 tweets
அட்டவீரட்டான திருத்தலங்கள்
பகுதி-1

எல்லாம் வல்ல சிவபெருமான், படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து தொழில்களைப் புரிகிறார்.

தமது திருவிளையாடல்கள் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காத்து அருள்கிறார். Image
பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே "அட்டவீரட்டான தலங்கள்".

திருத்தலம்-1

திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில்:

பிரம்மனின் சிரம் கொய்து, செருக்கை அழித்த திருத்தலம். Image
ஐந்து தலைகளுடன் படைப்புத் தொழிலைச் செய்து வந்த பிரம்மன், தானே உயர்ந்தவன் என்று கர்வம் கொண்டார்.

பிரம்மாவின் சிரத்தை தன் சூலத்தால் கண்டம் செய்தார். காரணத்தால், இந்தத் தலத்துக்கு `கண்டியூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. ImageImage
Read 43 tweets
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்:
(தரப்பாக்கம், சென்னை)

பெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

கிரகண நேரத்தில் அனைத்துக் கோயில்களின் நடை அடைக்கப்படும். இத்திருத்தலத்தில் நடைதிறந்து, கிரகண துவக்கத்திலும், முடிவிலும் விசேஷ அபிஷேகம் செய்கின்றனர். Image
முற்காலத்தில் இங்கு தங்கியிருந்த சித்தர்கள், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

காலப்போக்கில் வழிபாடு நின்று, லிங்கத் திருமேனி மண்ணில் புதைந்து போனது.

பிற்காலத்தில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமான், இங்கு லிங்கத் திருமேனி இருப்பதை உணர்த்தி அருளினார். Image
ஒரு சமயம் பெருமழை பெய்யவே, அருகிலுள்ள அடையாறில் வெள்ளம் பெருகி, ஊருக்குள் புகும் அபாயம் உண்டானது.

இவ்வேளையில் கரையில் இருந்த கோயில் தேர், ஆற்றின் குறுக்கே விழுந்தது. இதனால், வெள்ளத்தின் திசை மாறி, மக்கள் காப்பாற்றப் பட்டனர்.
Read 4 tweets
@VadhavooranT @MSivaRajan7 @Dharmicking @kgkicha @Somuthesanatani @amgeminigirl @Mkumaran21 @TruthAlone2 @ShanmuSundarS @Ramsamri கந்தபுராணம் சொற்பொழிவு பாகம்-2
மிக்க நன்றி @VadhavooranT
"முருகன் திரு அவதாரம் நிகழ்ச்சி"
drive.google.com/file/d/17BL4T1…
திருச்சிற்றம்பலம் #நற்றுணையாவது_நமச்சிவாயவே #சைவசமயம் #கந்தபுராணம்
@Ramsamri @MSivaRajan7 @kgkicha @ShanmuSundarS @TruthAlone2 @amgeminigirl @Somuthesanatani Image
கந்தபுராணம் சொற்பொழிவு பாகம்-3
மிக்க நன்றி @VadhavooranT
drive.google.com/file/d/1Fzbw4C…
திருச்சிற்றம்பலம் #நற்றுணையாவது_நமச்சிவாயவே #சைவசமயம் #கந்தபுராணம்
Read 9 tweets
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவார கோயில்கள் - 127
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்:

திருமால் சக்கரம் வேண்டி இறைவனைப் பூசை செய்யும் போது ஒரு நாள் ஒருமலர் குறையத் தம் கண்ணையே இடந்து சாத்தி சக்கரத்தைப் பெற்ற தலம்.
ஞானசம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு தந்தருளி அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம். அவ்வாறு படிக்காசு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும், மேற்கிலும் உள்ளன.

திருஞானசம்பந்தர், அப்பர் பெருமானோரின் மடங்களை வடக்கு வீதியில் தரிசிக்கலாம்.
இறைவன், ஞானசம்பந்தருக்குத் தாம் சீகாழியில் இருக்கும் திருக்கோலத்தை இங்குள்ள விண்ணிழி விமானத்தில் காட்டியருளினார்.

சுவாமி உள்ள இடம் விண்ணிழி விமானம் என்று சொல்லப்படுகிறது. பதினாறு சிங்கங்கள் தாங்கும் சிறப்புடைய இவ்விமானம் திருமால் கொணர்ந்தது, என்பதனை சம்பந்தரின் வாக்கு.
Read 5 tweets
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(71)
பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்:

மூலவர்: பஞ்சவர்ணேஸ்வரர் (ஐவண்ணப்பெருமான்), திருமூக்கிச்சுரத்தடிகள்
அம்மன்: காந்திமதியம்மை
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சிவதீர்த்தம், நாக தீர்த்தம்
புராண பெயர்: முக்கீச்சுரம்
ஊர்: உறையூர், திருச்சி
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் "திருமூக்கீச்சுரம்" என்று பெயர் ஏற்பட்டது.

புகழ்ச்சோழ நாயனார் அவதரித்து ஆட்சி செய்தபதி.

இறைவன் சுயம்புவாக, 5 நிறங்களை பிரம்மனுக்கு காட்டினார்.
ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம்.

பொன்மை நிறம் - மண் (காஞ்சிபுரம்)
வெண்மை நிறம் - நீர் (திருவானைக்காவல்)
செம்மை நிறம் - தீ (திருவண்ணாமலை)
கருமை நிறம் - காற்று (காளஹஸ்தி)
புகை நிறம் - ஆகாயம் (சிதம்பரம்)
Read 12 tweets
“தமிழன்” என்பவன் இந்து-கடவுள் உணர்வாளன். அவன் அழிக்கப்படும் போது இறை நம்பிக்கை மட்டும் அழிக்கப்படுவதில்லை, தமிழனின் தொன்மையும் அழிக்கப் படுகிறது.

பிறர் அழிக்க தலைப்படும் நம் சைவப் பாரம்பரியங்களில் ஒன்று “திருக்கயிலாய வாத்தியம்”.

எல்லையற்ற பரம்பொருளாகிய சிவபெருமானுக்காக,
சிவனடியார்களால் இசைக்கப் பெறுவது “திருக்கயிலாய வாத்தியம்”. அனைத்து சிவன் கோவில்களிலும் தொன்று தொட்டு இசைக்கப்பட்டு வந்தது.

திருஉடல், பிரம்மதாளம், திருச்சின்னம், எக்காளம், தாரை, நெடுந்தாரை, சங்கு, கொம்பு, கொக்கரை ஆகிய பண்டைய இசைக் கருவிகளைக் கொண்டு
வாசிக்கும் இதை, “பஞ்ச வாத்தியம்” என்றும் கூறுவர்.

இவற்றில் மிகவும் பழமையானது கொக்கரை, சங்கு. “சங்கநாதம்” மங்களகரமானது. தமிழகத்தில் அதை பற்றி, எப்படியோ வேறு பார்வை ஏற்பட்டு விட்டது. திருஞானசம்பந்தர் செல்லும் இடங்களெல்லாம், சங்கநாதம் முழங்கியதாக, பெரியபுராணத்தில் குறிப்பு உள்ளது.
Read 8 tweets
அறிவோம் சைவநெறி:
பகுதி-4

யார் சிவன்?

சிவபெருமான் அந்தம், ஆதி இல்லா அனாதியானவன்.
ஆனந்த கூத்தாடி, எல்லையில்லா அருள் ஞானமாக திகழ்பவன்.
அனைத்து உயிர்கட்டும் தாயானவன், தந்தையானவன், தலைவனாவன்.
பேரண்டத்துக்கும் எல்லா தெய்வங்களுக்கும் தலைவன்.
அருட்பெரும் சோதிப்பிளம்பாக நிற்பவர்.
உயிர்களின் உள்ளிருந்து உணர்த்துபவர்.

பிறவி அறுத்து, ஞான முக்தி தர வல்லவன் சிவன் ஒருவனே.

அடியவர்கள் உள்ளத்தில் உறைந்து, அன்பைப் பெற்று அருளைக் கொடுப்பவன், கேட்ட வரத்தைக் கொடுக்கும் பித்தன்.
சிவத்தின் எட்டு குணங்கள்:

1.தன்வயத்தன் ஆதல்
2.தூய உடம்பினன் ஆதல்
3.இயற்கை உணர்வினன் ஆதல்
4.முற்றும் உணர்தல்
5.இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்
6.பேரருள் உடைமை
7.முடிவிலா ஆற்றல் உடைமை
8.வரம்பிலா இன்பம் உடைமை
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!