Discover and read the best of Twitter Threads about #நாம்_தமிழர்_கட்சி

Most recents (24)

#நாம்_தமிழர்_கட்சி 💪💪💪 - 1/3
#நாம்_தமிழர்_கட்சி 💪💪💪 - 2/3
#நாம்_தமிழர்_கட்சி 💪💪💪 - 3/3
Read 4 tweets
புரிய வேண்டிய புரிதல்கள்..

⚫⚫⚫

வர்ணாசிரமக் கோட்பாட்டை வலியுறுத்தும் வைதீக இந்து மதம் என அழைக்கப்படுகின்ற ஆரிய மதத்திற்கு எதிரான கலகக் குரல் தான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்கிற முழக்கம்.

இது இக்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட முழக்கம் அல்ல. காலம் காலமாக - 1/23
தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதை தங்கள் மீது திணிக்கப்பட்ட இந்துத்துவ அடையாளத்திற்கு எதிராக முழங்கி இருக்கிறார்கள். வரலாற்றில் நமக்குக் கிடைக்கக்கூடிய தொன்ம இலக்கிய சான்றுகளான சங்கப்பாடல்கள் தொடங்கி, சித்தர் பாடல்கள் தொடங்கி, வள்ளலார் வழி வைகுண்டர் வழி என பல கொள்கை- 2/23
வழிகள் பார்ப்பனிய ஆரிய மதமான இந்து மதத்திற்கு எதிரான கலகக் குரல்கள் மட்டுமல்ல, மாற்று பண்பாட்டு வழி தீர்வுகள்.

கடந்த 2009 இன அழிவிற்கு பிறகான தமிழ்த் தேசிய அரசியல் உருவான காலகட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பார்ப்பனிய ஆரிய இந்து மதத்தின் ஆதிக்க நிலை உச்சத்தில் - 3/23
Read 24 tweets
*ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி - தேர்தல் களப்பணி* ( 03.10.2021 )

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி முன்னெடுப்பாக அம்மாபேட்டை ஒன்றிய 5-வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் திரு.மாரிமுத்து அவர்களை ஆதரித்து அம்மாபேட்டை ஒன்றியத்தில் தேர்தல் வாகன பரப்புரை - 1/5
மற்றும் துண்டறிக்கை கொடுத்தல் களப்பணி நடைபெற்றது.

பெருந்துறை ஒன்றியத்தில் வார்டு எண் 10 ற்கான ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வேட்பாளர் திரு க.கவுதம் அவர்களை ஆதரித்து குள்ளம்பாளையம், பொன்முடி ஊராட்சி பகுதிகளிலும், கருக்குப்பாளையம் ஊராட்சி தலைவர் வேட்பாளர் திருமதி.ருக்குமணி - 2/5
அவர்களை ஆதரித்து
கருக்குப்பாளையம் ஊராட்சி பகுதிகளில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

ஈரோடு ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 4 ற்கான ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வேட்பாளர் திரு.ராஜேந்திரன் அவர்களை ஆதரித்து பெருமாபாளையம், லட்சுமிநகர் பகுதிகளில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது - 3/5
Read 6 tweets
அறிக்கை : - முருகேசன் - கண்ணகி வழக்கின் தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது! ஆணவப்படுகொலையை ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும்!
#சீமான்_வலியுறுத்தல்
#நாம்_தமிழர்_கட்சி



கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த - 1/5
முருகேசன் - கண்ணகி இணையரை ஆணவப் படுகொலை செய்திட்ட வழக்கில் 13 பேரைக் குற்றவாளிகளென அறிவித்து, தண்டனை வழங்கியிருக்கும் கடலூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உளமாற வரவேற்கிறேன். மனிதத்தைக் கொன்று சாதியத்தை நிலைநாட்ட, படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளர்களைத் - 2/5
தண்டித்திருக்கும் இத்தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது!

‘கண்ணகி மதுரையை எரித்து நீதிகேட்டது போல, முருகேசன் - கண்ணகி வழக்கின் மூலம் நிலைநாட்டப்பட்டிருக்கும் நீதி ஆணவப்படுகொலையை எரிக்கட்டும்’ என அறச்சீற்றத்தோடு தீர்ப்புரை எழுதிய நீதியரசரது நீதிநெறி போற்றும் மாண்பைப் - 3/5
Read 6 tweets
அறிவிப்பு: செப்.19, பன்னாட்டு அரிமா சங்கக் கூட்டமைப்பின் நல்லாசிரியர் விருது விழா - சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

வருகின்ற 19-09-2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 09:30 மணியளவில், சென்னை, மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கின்ற - 1/3
பன்னாட்டு அரிமா சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருக்கிறார்.

வாய்ப்புள்ள நாம் தமிழர் உறவுகள் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - 2/3
Read 4 tweets
அறிவிப்பு : - செப். 18, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 76 ஆம் ஆண்டு நினைவேந்தல் - தலைமையகம் (சென்னை)
#நாம்_தமிழர்_கட்சி



சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி - 1/3
18-09-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது - 2/3
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#தலைமை_அலுவலகச்_செய்திக்குறிப்பு
#நாம்_தமிழர்_கட்சி - 3/3
Read 4 tweets
அறிவிப்பு : - செப். 11, பாட்டன் பாரதியார், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவைப்போற்றும் நிகழ்வு - தலைமையகம் (சென்னை)
#நாம்_தமிழர்_கட்சி

பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 100ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் - 1/3
அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவுநாளுமான 11-09-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் - 2/3
பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#தலைமை_அலுவலகச்_செய்திக்குறிப்பு
#நாம்_தமிழர்_கட்சி - 3/3
Read 4 tweets
அறிவிப்பு : -

செப். 05, பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு - தலைமையகம் (சென்னை)
#நாம்_தமிழர்_கட்சி

தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் - 1/3
அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 05-09-2021 ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் - 2/3
அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#தலைமை_அலுவலகச்_செய்திக்குறிப்பு
#நாம்_தமிழர்_கட்சி - 3/3
Read 4 tweets
செய்திக்குறிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் தலைமையில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் கலந்தாய்வு
#நாம்_தமிழர்_கட்சி

எதிர்வரவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை - 1/4
ஒருங்கிணைப்பாளர் - 1/சீமான் அவர்களின் தலைமையில் இன்று 03-09-2021 கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து மாவட்ட மற்றும் தொகுதித் தலைவர்-செயலாளர்களும் பங்கேற்றனர். மாநிலக் - 2/4
கட்டமைப்புக் குழுவினர் முன்னிலை வகித்தனர். இக்கலந்தாய்வில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு அணியமாவது குறித்தும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட தேர்தல் களப்பணிகள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது.

இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கான கலந்தாய்வு நாளையும் - 3/4
Read 5 tweets
நிலத்தின் பெயரையே மாற்றுவது அதைவிடப் பன்மடங்கு பேராபத்தாகும்.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதற்கான சான்றுகள் சங்கத்தமிழ் இலக்கியங்கள் முழுதும் விரவி கிடக்கிறது. ஆனால், திராவிடம், திராவிடம் என்பதற்கான சான்றுகள் எதுவும் சங்கத்தமிழ் இலக்கியங்களிலோ, காப்பியங்களிலோ - 25/34
இல்லை என்பது மறுக்கவியலா பேருண்மையாகும். திராவிடத்திற்கான மூலச்சான்றுகள் கற்பனைத் திணிப்புகளாகவும், தமிழர்களல்லாத அந்நியர்களின் கூற்றுகளாகவும், சமஸ்கிருத மொழி இலக்கியங்களாகவும் உள்ளன. தமிழ் மொழிக்கென்று தனித்த இலக்கியங்கள் உள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளுக்கும் - 26/34
கூட இலக்கியங்கள் உள்ளன. ஆனால் திராவிட மொழிக்கென்று இலக்கியம் எங்கே உள்ளது ? முதலில் திராவிடம் என்பது ஒரு இனத்தின் பெயரா? மொழியின் பெயரா? நிலத்தின் பெயரா? திசையின் பெயரா? நிறத்தின் பெயரா? அல்லது தத்துவத்தின் பெயரா? திராவிடம், திராவிடர் எனும் சொல்லாடல்களுக்கு முதலில் - 27/34
Read 11 tweets
அறிக்கை : - சங்கத்தமிழ் இலக்கியங்கள் உட்பட எந்தவொரு தமிழ் நூல்களின் தொகுப்பிற்கும், #திராவிடக்_களஞ்சியம் எனப் பெயரிட முனைந்தால் கடும் போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும்!
#சீமான்_கண்டனம்
#நாம்_தமிழர்_கட்சி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் - 1/34
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை ‘திராவிடக்களஞ்சியம்’என அடையாளப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பெருமைமிக்கத் தொல்தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வயப்படுத்தும் திராவிடத்திரிபுவாதிகள் தற்போது தமிழ் - 2/34
நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழர்களை திராவிடர்கள் என்பது, தமிழ்நாட்டைத் திராவிட நாடு என்பது, தமிழ் இலக்கணத்தைத் திராவிட இலக்கணம் என்பது, தமிழர் திருநாளான பொங்கலை திராவிடர் திருநாள் என்பது, தமிழ் மாமன்னன் கரிகால் பெருவளவனைத் - 3/34
Read 25 tweets
#நாவடக்கம்_தேவை_ஜோதிமணி



பெண்மை வாழ்க வென்று கூத்திடுவோமடா என்று பாரதி ஏட்டில் பதித்த வரிகளை நிலத்தில் சாத்தியமாக்கியவர் அண்ணன் சீமான் ஆணுக்குப் பெண் சமம் அல்ல ஆணும் பெண்ணும் சமம் என்பதை காட்டுவதற்கு வேட்பாளர்களில் 50% இட ஒதுக்கீடு பெண்களுக்கு அளித்த முதல் அரசியல் கட்சி- 1/16
#நாம்_தமிழர்_கட்சி.

கே டி ராகவன் விஷயத்தை விட நாட்டில் பாஜக அரசால் நடந்து கொண்டிருக்கின்ற சீர்கேடுகளைப் பற்றி சிந்தியுங்கள். பாஜக அரசின் அக்கிரமங்களுக்கு எதிராக அணி திரளுங்கள் என்பதுதான் அண்ணன் சீமான் அவர்கள் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விடுக்கிற செய்தி - 2/16
ஒரு கேள்விக்கு பதிலாக தொடக்கத்தில் வெறும் 20 நொடிகளில் பேசியவற்றை மட்டும் வைத்துக்கொண்டு ஊடகங்கள் பாஜக அரசுக்கு எதிராக அண்ணன் சீமான் பேசிய ஏறக்குறைய இரண்டரை நிமிட கண்டனங்களை, எதிர்ப்பை பதிவு செய்யாமல் திசை திருப்புகிற வேலையை திறமையாக செய்தனர்.

ஜோதிமணியும் பாஜகவை பற்றி - 3/16
Read 17 tweets
😭😭😭😭😭😭😭😭😭😭😭
#ஓய்வில்லா_உழைப்பு!
#ஓய்வெடுத்து_விட்டது!
😭😭😭😭😭😭😭😭😭😭😭

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐயா கரு.சாயல்ராம் அவர்களின் தகப்பனார் இளஞ்சியமங்களம்

ஓட்டு வீட்டு... அ.கருப்பையா அவர்கள் - 1/4
இன்று 02.09.2021 வியாழக்கிழமை காலை இயற்கை எய்திவிட்டார்கள் என்பதனையும்,
அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை 03.09.2021 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒன்றியம், பாகனூர் ஊராட்சியிலுள்ள இளஞ்சியமங்களம் கிராமத்தில் நடைபெறும் என்பதை - 2/4
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஐயா அவர்களை இழந்த வாடும் குடும்பத்தினர் மற்றும் நாம்தமிழர் உறவுகளின் துயரத்தில் சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் உறவுகள் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

😭 #கண்ணீருடன்...😭
#சிவகங்கை_மாவட்ட_நிர்வாகம் - 3/4
Read 5 tweets
#அறிவிப்பு

செப். 01, பாட்டன் பூலித்தேவன், பொன்பரப்பி தமிழரசன்,
தங்கை அனிதா நினைவேந்தல் நிகழ்வு #தலைமையகம் (சென்னை) |
#நாம்_தமிழர்_கட்சி

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306ஆம் ஆண்டு நினைவுநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 34ஆம் ஆண்டு - 1/4
நினைவுநாளும்,
சமூக நீதிக்கு எதிரான வகையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுமுறையை ஒழிக்க சட்டரீதியாகப் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவுநாளுமான 01-09-2021 புதன்கிழமையன்று, காலை சரியாக 9 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் - 2/4
#தலைமை_ஒருங்கிணைப்பாளர்_சீமான் அவர்களின் தலைமையில் மூவர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - 3/4
Read 5 tweets
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர், தம்பி தங்கவேலு மாரியப்பன் அவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். கடந்த ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, மீண்டும் தற்போது வெள்ளியை வென்று - 1/2
தன்னம்பிக்கைக்கும், தனித்திறனுக்கும் சான்றாக உயர்ந்து நிற்கும் தம்பிக்கு எனது பாராட்டுகளையும், உளம்கனிந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மென்மேலும் வளர்ந்து, வெற்றிகளை வாரிக்குவித்து, தமிழ் மண்ணிற்குப் பெருமை தேடித்தர வேண்டுமெனும் பேராவலைத் தெரிவிக்கின்றேன் - 2/3
Read 4 tweets
யரில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்த கல்வி, மருத்துவம், வணிகம் உள்ளிட்டப் பல்வேறு துறைகளின் அதிகாரங்களைத் தனதாக்கி தேசிய இனங்களின் பிறப்புரிமையான மாநிலத்தன்னாட்சியை அழித்தொழித்த ஒன்றிய அரசு, தற்போது அவற்றைச் சரிவர நிர்வகிக்க முடியாமல் இழப்பை ஏற்படுத்தி, பின், அதனையே - 25/28
காரணம்காட்டி தனியாருக்குக் கொடுப்பது கூட்டாட்சித்தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கும் வன்செயலாகும்.

ஆகவே, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதென்பது நாட்டின் வளங்களையும், நாட்டு மக்களின் பாதுகாப்பையும், இந்நாட்டின் இறையாண்மையையும் முற்றுமுழுதாகத் தனிப்பெரு - 26/28
முதலாளிகளிடமும், பன்னாட்டுக்கூட்டிணைவு நிறுவனங்களிடமும் அடகு வைக்கக்கூடியப் பேராபத்தாகும். இதனை உடனடியாகக் கைவிட வேண்டுமென ஒன்றியத்தை ஆண்டு வரும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன். மக்களின் எதிர்ப்பையும் மீறி இதனைச் செயல்படுத்தும்பட்சத்தில், இந்திய நாடு மீண்டும் காலனி நாடாக - 27/28
Read 5 tweets
அறிக்கை : - பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! 
#சீமான்_கண்டனம்
#நாம்_தமிழர்_கட்சி



பல கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வியர்வையையும், இரத்தத்தையும் - 1/28
வரிப்பணமாக பெற்று உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை மொத்தமாகத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தவறான பொருளாதாரக்கொள்கைகளாலும், பிழையானப்பொருளாதார முடிவுகளாலும், கூட்டிணைவு நிறுவனங்களுக்குத் தாராளமாக வழங்கப்பட்ட - 2/28
வரிச்சலுகைகளினாலும் நாட்டின் பொருளாதாரத்தை முற்றாகச் சீர்குலைத்துவிட்டு, இப்போது அதனைச் சமப்படுத்த பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்குவிட்டு வருவாய் ஈட்ட எண்ணுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

நாட்டில் நிலவும் அதிகப்படியான பொருளாதார - 3/28
Read 25 tweets
அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் - 1/4
மகளிர் பாசறை சார்பாக 28-08-2021 சனிக்கிழமை, காலை 10 மணியளவில் தலைமை அலுவலகத்தில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், மகளிர் பாசறை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் - 2/4
உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்புக்கான தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல், தொற்றுநீக்கி திரவம் பயன்படுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிகழ்வில் பங்கேற்கும் உறவுகள் அனைவரும் முழுமையாகப் கடைப்பிடிக்க - 3/4
Read 5 tweets
#புலம்பெயர்_நாடுகளில்

#அனைத்துலகத்_தமிழர்_கல்வி_மேம்பாட்டுப்_பேரவை’ எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு யாவும் முற்றிலும் தவறாகக் திரிக்கப்பட்டு, பதிவு செய்துவிடக்கூடாது என்ற நோக்கில் தவறுகளைச் - 1/3
சுட்டிக்காட்டிக் கருத்துத் தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில், அப்பாடப்புத்தகங்களின் திருத்தப்பட்ட பக்கங்களை என் பார்வைக்கு அனுப்பியிருந்தனர். உண்மையான வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் இடம்பெறச்செய்ய அவ்வமைப்புச் செயல்பட்டிருப்பது கண்டு மகிழ்வுற்றேன். இதற்காக உழைத்திட்ட - 2/3
அறிஞர் குழுவிற்கும், உலகத்தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் எனது வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!



#செந்தமிழன்_சீமான்
##தலைமை_ஒருங்கிணைப்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி - 3/3
Read 4 tweets
அறிக்கை : - தமிழர்களை வதைத்திட ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா?

#சீமான்_சீற்றம்
#நாம்_தமிழர்_கட்சி



திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி - 1/15
பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வந்த தம்பிகளில் நிரூபன், முகுந்தன் ஆகிய இருவரும் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வரும் செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப்போனேன். தமிழர்களின் தாய்நிலமான தமிழகத்திலேயே தொப்புள்கொடி உறவான ஈழச்சொந்தங்களுக்கு - 2/15
நேர்கிற இத்தகைய இழிநிலையும், கொடுந்துயரமும் பெரும் மனவேதனையைத் தருகிறது. ஈழத்தமிழர் எனும் ஒற்றைக்காரணத்துக்காகவே அவர்களைச் சந்தேக வளையத்திற்குள் வைத்துக் கண்காணித்து, அவர்களது சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மறுத்து, மனித உரிமை மீறலை அரங்கேற்றி வரும் ஆளும் அரசதிகாரத்தின் - 3/15
Read 16 tweets
அரசதிகாரத்தின் எதேச்சதிகாரப்போக்குகளால் ஒடுக்குமுறைக்குள்ளான எளிய மக்களின் ஆழ்மனக்குரலாய் ஒலித்து, அடித்தட்டு விளிம்புநிலை மனிதர்களுக்கும் நீதியை நிலைநாட்டி, அறநெறி வழுவாத் தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர் பெருமதிப்பிற்குரிய ஐயா கிருபாகரன் அவர்கள் ஓய்வுபெறுகிற செய்தியறிந்தேன் - 1/3
சமூக உணர்வையும், சாமானியர்களின் சனநாயகப் போராட்டங்களையும் மதித்து, அவர் வழங்கிய தீர்ப்புகள் யாவும் எக்காலத்திற்கும் முன்னுதாரணமாகத் திகழக்கூடிய வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தவையாகும். அவை யாவற்றையும் நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!

- 2/3
Read 4 tweets
அறிக்கை: *வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாய் திட்டப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க ஏதுவாக, முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்!

#சீமான்_வலியுறுத்தல்
#நாம்_தமிழர்_கட்சி

உசிலம்பட்டி - 1/15
தொகுதிக்குட்பட்டப் பகுதிகளிலிருக்கும் வேளாண் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் நிறைவேற்றப்பட்ட உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டப்பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததால் அக்கால்வாய்த்திட்டத்தின் பயன்பாடுகள் விவசாயிகளைச் சென்று சேருவதில்லை எனும் - 2/15
செய்திப் பெருங்கவலையைத் தருகிறது.

‘உசிலம்பட்டி 58 கிராமப்பாசனக்கால்வாய்’ எனும் திட்டமானது கடந்த 1996ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள 30 கண்மாய்கள் மற்றும் 5 கசிவுநீர் குட்டைகளைத் தண்ணீர்த் தேக்கப்பகுதிகளாகக் கொண்டு, வைகை அணையிலிருந்து அவற்றிற்குத் - 3/15
Read 16 tweets
#இலக்கு_ஒன்றுதான்_இனத்தின்_விடுதலை.

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩 தாய் தமிழ் உறவுகளுக்கு புரட்சி வணக்கம். தூத்துக்குடி கிழக்கு ஒன்றியத்தில் இன்று

இடம் தூ.சவேரியார்புரம் - 1/7
தேதி இன்று : - 15/08/2021 ஞாயிற்றுக்கிழமை நேரம் காலை 08:00 மணிக்கு

நமது தூத்துக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட தூ.சவேரியார் புரம் பகுதியில் மரகன்றுகள் நடப்பட்டது இதில் கலந்து கொண்டு கலப்பணியாற்றிய உறவுகள் அணைவருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻 - 2/7
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 #நாம்_தமிழர்_கட்சி தூத்துக்குடிகிழக்கஒன்றியம் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைவர் செல்லப்பா - 3/7
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!