Discover and read the best of Twitter Threads about #நெய்தல்

Most recents (4)

#கிழார்....!

பண்டைத் தமிழகத்தில் குடித் தலைவர்களாக விளங்கிய கிழார்களின் ஆட்சியே முதலில் ஏற்பட்டது.

அக்கிழார்கள் ஊர்க்குடிகளால் தேர்ந்தெடுக்கப்பெற்ற வயது முதிர்ந்த தலைவர்களாவர்.

அவர்கள் இரத்த உறவின் அடிப்படையில் எழுச்சிபெற்ற குடித்தலைவர்கள்.
குடியாட்சித் தலைவர்கள் என்றும் கொள்ளலாம்.

அத்தலைவர்கள் வேளிரும், வேந்தரும் அரசியலில் உருவாவதற்கு முன், அரசியல் அதிகாரம் பெற்றிருந்தார்கள்.

வேளிர்களின் வீறார்ந்த பூசலினால் கிழார் ஆட்சி, #வேளிர் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பெற்றது.
கிழாரின் பழைய மக்களாட்சி தன்மை மாறி, வேளிர்களுக்குத் தங்கள் குடியிலிருந்து #திறை அல்லது #காணிக்கை வாங்கித் தரும் பேராளர்களாக மாறினர்.

வேளிரும், வேந்தரும் குடிகளிடமிருந்து #வரி வாங்குவதில் கடுமையாக இருந்தனர்.

#தொல்குடி வாழ்க்கையில் ஒவ்வொரு குடிக்கும் ஒரு #தலைவன்...
Read 18 tweets
இலக்கியங்களில் கொற்கையும், வணிகச் சிறப்பும்...!

#தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்தில் சங்க காலப் பாண்டியர்களின் இயற்கைத் துறைமுகம் #கொற்கை.

கொற்கைத் துறைமுகத்தில் முத்துக் குளித்தல் தொழிலும், முத்து ஏற்றுமதியும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. Image
செங்கடல் வழி நூலாசிரியர் இதை #கொல்சி என்று எழுதியுள்ளார்.

#கொற்கை தமிழகத்திலுள்ள #புகார், #மாமல்லபுரம், #தொண்டி, #உவரி, #முசிறி ஆகிய பிற துறைமுகங்களை விட மிக அழகு நிறைந்த துறைமுகமாகவும்;

கடற்கொள்ளையர்களால் தலைகாட்ட முடியாத நல்ல பாதுகாப்பான துறைமுகமாகவும்;
#உரோமர் நாட்டு மக்களை மிகவும் வசீகரித்த 'ஆணி முத்துக்களை' அளிக்கும் பட்டினமாகவும் இருந்தது.

மேலும் அயலவர்களை கொற்கை மக்களும், பாண்டிய பார்வேந்தர்களும் அன்புடன் வரவேற்றுப் போற்றி விருந்தோம்புபவர்களாக விளங்கினர் என்பர்.
Read 23 tweets
சங்க கால #நெய்தல் திணை மக்களின் பன்மைத் தொழில் நுட்பங்கள்!

சங்க கால மீனவர்களின் தொழில்நுட்பம் பன்மைத் தன்மை வாய்ந்தது.

#பரதவர்கள் நள்ளிரவிலும் மீன் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.

தீப்பந்தங்களைக் கொளுத்திக் கொண்டு திண்ணிய திமிலில் அலைகடல் நடுவே சென்றுள்ளனர்.
விளக்கொளியைக் கண்ட சிறுமீன்கள் திரண்டெழும்; அவற்றைத் தின்ன வெஞ்சுறாக்கள் விரைந்து வரும்.

அவற்றைப் பரதவர்கள் பிடித்துத் திமிலில் ஏற்றி வந்தனர் - நற்.67:6-9

இரவில் மீன் வேட்டம் செய்வோர், கடலில் வெளிச்சம் வார் போடுவதற்குத் தாம் பிடித்த மீன்களின் கொழுப்பைச் சேகரித்து அதனை...
எண்ணெய்யாகப் பயன்படுத்தியுள்ளனர் என
பின்வரும் பாடலடிகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

இரவில் மீன் வேட்டத்திற்குச் செல்லும்போது, சுறா மீன்கள் கட்டுக் கடங்காமல் விரைந்து திரிவதுண்டு.

அவற்றைக் கனன்று எரியும் தீப்பந்தம் மூலம் கூர்ந்து நோக்கி, வலுவான கயிற்றில்... Image
Read 20 tweets
#நீள்பதிவு!

வங்காள விரிகுடா என்ற பெயர் தவறானது... சோழ மண்டல கடல் என்பதே சரியானது! - அமெரிக்க சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர்கள்!
உலகில் உள்ள கடல்களில் தனிச்சிறப்புடைய இயற்கை தகவமைப்பினை கொண்டது இந்தியப் பெருங்கடல் மட்டும்தான்.

பல சிறு கடல்களின் பெயர்களை ஒருங்கிணைத்தே பெருங்கடல் என சொல்கிறோம். அதன்படி அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய கடல்களும் இந்தியப் பெருங்கடலில்தான் அடங்கும்!
இந்தியப் பெருங்கடல் என்பது #குமரி கடலையே குறிக்கிறது. கடல் பற்றிய பெரும் அறிவு கொண்டவர்கள், தமிழ் மக்கள் தான்.

#கடல் என்ற சொல்லாட்சி சங்க இலக்கியத்தில் நூற்றுக்கணக்கில் பரவி கிடக்கிறது. #ஆழி என்ற கடல் குறித்த சொல் சங்க இலக்கியத்தில் 43 இடங்களில் வருகிறது!
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!