Discover and read the best of Twitter Threads about #பாசிசகோமாளி_எம்ஜிஆர்

Most recents (5)

#பாசிசகோமாளி_எம்ஜிஆர்
சார்பட்டா படத்தில் இந்த சீன் மறைக்கப்பட்ட வரலாற்றின் பல உண்மைகளை சொல்லியது.
மருதூர் கோபால ராமச்சந்திர மேனன் (மகோரா) திரையில் வில்லன்களை பந்தாடியது போல் அட்டகத்தியை வைத்துக்கொண்டு அரசியலில் பந்தாட முடியாமல்
கண்டவர் காலில் விழுந்து கிடந்த வரலாறு தான் அது
திமுக வளர்வது, வருங்காலத்தில் தெற்கில் தனது ஆளுமைக்கு சவாலாகும் என இந்திரா காந்திக்கு சங்கரமடம் வெங்கட்ராமன் மூலம் ஓதி விட்டது. திமுகவை ஒடுக்க சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் கிடந்த மகோரா தூண்டப்பட்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக் கட்சி ஆரம்பித்தார்
1975 இல் எமர்ஜென்சியை கொண்டு வந்து இந்திராவை கலைஞர் கடுமையாக எதிர்த்தார் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது ஸ்டாலின் மிசா சட்டத்தில். ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா அப்போது லக்ஸ் சோப்பு விளம்பரத்தில் நடித்து தமிழ்நாட்டு இளவட்டங்களுக்கு கிளுகிளுப்பு கூட்டிக் கொண்டிருந்தார்
Read 13 tweets
#பாசிசகோமாளி_எம்ஜிஆர்
எம்ஜிஆர் என்ன சாதனை செய்தார் என்று கேட்டால் அடிமைகள் எழுத்துச் சீர்திருத்தம் என்பார்கள்
பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழ்நாட்டு மக்களின் மீது தினித்தவர் மகோர. அதைப் பெருவாரியான மக்களோ ஊடகங்களோ ஏற்கவில்லை. பாடநூல்களில் புது எழுத்துகளைப் புகுத்தினார்
அரசாணைகள் புதிய எழுத்துகளில் இருக்க வேண்டும் என்றார் ம.கோ.ரா. ஆனால், கலைஞரின் முரசொலி கூட புதிய எழுத்துக்கு மாறாமல் தவிர்த்தது. இவர்களைத் தன் வழியில் கொண்டுவர மகோரா புதிய ஆணையைப் பிறப்பித்தார். சீர்திருத்த எழுத்துகளைப் பயன்படுத்தாத இதழ்களுக்கு அரசின் விளம்பரங்கள் கொடுக்கப்படாது
என்றார். எதிர்க்கட்சி நாளேடாக இருந்தாலும் முரசொலிக்கும் அரசு விளம்பரங்களைப் புறக்கணிக்க முடியாத இக்கட்டு. அப்படிப்பட்ட நிலையில்தான் முரசொலி மட்டுமல்ல தமிழ்நாட்டின் எல்லா ஊடகங்களும் பெரியார் - மகோரா சீர்திருத்த எழுத்துகளுக்கு வலிந்து மாற்றப்பட்டன. இந்த எழுத்துகளைத் தமிழர்கள்
Read 6 tweets
#பாசிசகோமாளி_எம்ஜிஆர்
#4_அவதூறு_வழக்கு

காவல்துறை,கண்ணீர்ப் புகை,லத்தி சார்ஜ்,துப்பாக்கிச் சூடு, இவை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் மிரட்டல் ஆயுதங்களாக அறியப்படுகின்றன. இந்த ஆயுதங்களின் வரிசைப் பட்டியலில் ‘அவதூறு வழக்கு’ என்றொரு நூதன ஆயுதத்தையும் சேர்த்தவர் எம்ஜிஆர்
கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பாரம்பரியம் வழக்கத்தில் இருந்தாலும், ஜெயலலிதா ஆட்சியில் தீவிரம் பெற்றதுபோல், வேறு எந்த ஆட்சியிலும் அவதூறு வழக்குத் தாக்குதல் தீவிரமாக இருந்ததில்லை.
2011 - 2016 வரையிலான 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் 213 வழக்குகள் போடப்பட்டன.
#யார்மீது_எத்தனைவழக்குகள்

கலைஞர் & தி.மு.க மீது 85
விஜயகாந்த் & தே.மு.தி.க-வினர் மீது 48 ; 'ஆனந்த விகடன்' & பத்திரிகைகள் மீது 55 ;
பா.ம.க மீது 9 ;
காங்கிரஸ் கட்சியினர் மீது 7 ; சுப்பிரமணியன் சுவாமி மீது 5 ; ம.தி.மு.க., சி.பி.எம்., விசிக மீது 4 என மொத்தம் 213 வழக்குகள்
Read 11 tweets
#பாசிசகோமாளி_எம்ஜிஆர்
#2_புரட்டல்தலைவர்

காங்கிரசுக்காரராக அரசியலுக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர்., தி.மு.கழகக்காரராகப் பிரபலமானார். ஒரு மாநிலக் கட்சியாக அ.தி.மு.க-வைத் தொடங்கினாலும் ஜனதாக் கட்சிப் பிரதமர் மெரார்ஜி தேசாய்-யின் மிரட்டலுக்குப் பயந்து, அகில இந்திய அ.தி.மு.க-வாக மாற்றிக்
கொண்டு அண்ணாயிசமே அதன் கொள்கை என்று அறிவித்தார். அண்ணாவின் கொள்கைகளும் கம்யூனிசமும், சோசலிசமும் கலந்ததுதான் அண்ணாயிசம் என்று விளக்கமும் அளித்தார் ‘புர்ரட்சித் தலைவர்’!

அண்ணாயிசம் போன்று பலப்பல அரசியல், சித்தாந்தக் கண்டுபிடிப்புகளை வகுத்தளித்தஎம்.ஜி.ஆரின் சாவு அவரது பாசிசப்
படுகொலைகளை, குரூர இன்பங்காணும் நடவடிக்கைகளை, கொடூரமான கோமாளித்தனங்களை மறைத்துவிட முடியாது. எம்.ஜி.ஆர். உடலோடு சேர்த்து மெரினாவில் புதைத்துவிட முடியாது. அங்கு தான் எம்.ஜி.ஆரின் போலீசு வெறிநாய்கள் தேவாரத்தின் தலைமையில் மீனவர்களைக் கடித்துக் குதறின; மீனவர் குப்பங்களைச் சூறையாடின.
Read 14 tweets
#பாசிசகோமாளி_எம்ஜிஆர்
1987-ல் இறந்தபோது “இடி அமீன்: எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற திரைப்படம் சென்னையில் வெற்றிகரமாக ஓடியது. ‘எம்.ஜி.ஆர்: தமிழகத்தின் இடி அமீன்’, ஒரு ‘சேடிஸ்ட்’ – குரூர இன்பம் காண்பவர், ‘துக்ளக்’கைப் போல திடீர் திடீரென்று முடிவுகளை மாற்றிக்கொள்ளும் கோமாளி என்று Image
பத்தாண்டுகளாக கலைஞர் முரசொலி பத்திரிக்கையில் எழுதி வந்து கொண்டிருந்தார்.
ஒருவர் இறந்தபின் அவரை தூற்றுவது நாகரீகம் இல்லை என எம்ஜிஆர் மறைவிற்கு பின் நிறுத்திக் கொண்டார்.
திமுகவும் கலைஞரும் அந்த கோமாளியை அன்று வெளிப்படுத்த தவறியதன் விளைவை இன்று தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது
எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி வந்தவுடனே, கலைஞர் மட்டுமல்ல, எம்.ஜி.ஆரிடம் அடிவாங்கிய கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லாக்கட்சிகளும், அந்தக் கோமாளியை ஆகா ஓகோ என சித்தரிக்கத் தொடங்கிவிட்டனர்.
எம்.ஜி.ஆர். தமிழகத்தைப் பத்தாண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார்.
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!