Discover and read the best of Twitter Threads about #பூரி

Most recents (3)

#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீஜயதேவர், கி.பி. 12 ம் நூற்றாண்டில் #பூரி க்ஷேத்திரத்தின் அருகில் பில்வகாம் என்கிற ஊரில் வசித்து வந்த நாராயண சாஸ்திரியார் - கமலாம்பாள் என்கிற திவ்ய தம்பதிகளுக்கு திருக்குமாரராக அவதரித்தவர். இவர்களுக்கு நெடுநாட்களாக புத்திர பாக்யம் இல்லாமல் பூரி ஜெகந்நாதரை
இடைவிடாது வழிபட, திருமால் அருள்கூர்ந்து, வேத வியாசரின் வடிவாக ஜயதேவர் அவதரித்தார். ஜெயதேவருக்கு பத்மாவதி என்கிற பெண்ணை மணமுடித்தார்கள். அதிதிகளுக்கு தான தருமம் செய்து வந்தார். ஜயதேவர் கண்ணனின் லீலா விநோதங்களைப் பாடலாகப் பாட, அதற்கு பத்மாவதி அபிநயம் செய்து ஆடுவாள். அப்பகுதியை
ஆட்சி செய்து வந்த மன்னன் கவி பாடும் திறன் கொண்டவன். அவனும் ஜகன்னாதர் மேல் பல கவிகள் பாடி இருந்தான். ஜயதேவரின் பாடல்கள் மட்டும் வேதமாக கருதி மக்கள் பாடி வருவதைக் கண்டு வெகுண்டான். உடனே, மக்களே என் அரசாட்சியில் என் பாடல்களை மட்டுமே நீங்கள் பாட வேண்டும் என்று ஆணையிட்டான். ஆயினும்
Read 10 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் டில்லியில் பரமேஸ்டி என்ற தையற்காரர் வசித்துவந்தார். அவர் உடலழகு இல்லாத கூன்முதுகர். ஆயினும் அவர் எல்லா நற்பண்புகளும் பெற்ற சிறந்த விஷ்ணு பக்தராக திகழ்ந்தார். தையற் தொழிலில் கைதேர்ந்த பரமேஸ்டி, டில்லி பாட்ஷாவிற்கு துணி தைத்து தருமளவிற்கு கீர்த்தி பெற்றவராக
இருந்தார். ஒரு சமயம் பாட்ஷா தங்க ஜரிகையும், முத்து மற்றும் வைரமும் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த துணியொன்றை, இரண்டு தலையணைகளை தைப்பதற்காக பரமேஸ்டிக்கு அனுப்பிவைத்தார். அழகான துணியைப் பார்த்ததும் இது பிரபு ஜெகந்நாதரின் தலையணைக்கு மட்டுமே பொருத்தமானது. என்று பரமேஸ்டி மனத்திற்குள்
எண்ணினார். பரமேஸ்டி பாட்ஷாவிடமிருந்து துணியைப் பெற்றுக் கொண்ட சமயம் ரத யாத்ரை காலமாகும். #ஜெகந்நாதர் ரதத்திலேறி பஹண்டி விஜயம் செய்யும் சமயம். பரமேஸ்டி தலையணைகளைத் தைக்கத் தொடங்கினார். தைத்து முடித்த பிறகு நேர்தியாகவும் அழகாகவும் வடிவமைக்கபட்டிருந்த தலையணைகளை கண்டு, திருப்தியுடன்
Read 22 tweets
#பூரி #ஜகந்நாதருக்கு ஜுரம் வருமா? அதுவும் #க்ரோனா மாதிரி ஜுரம் வருமா? இறைவனை ஏதோ கோவிலில் இருக்கும் ஒரு விக்கிரஹம் என்று எண்ணாமல் நம்முள் ஒருவராக எண்ணுவதே நம் இந்து மதத்தின் தனிச்சிறப்பு. அவரை ஜீவனுள்ள, சைதன்யமுள்ள ஒரு நபராகக் கண்டு மகிழ்கிறோம். சொந்த கிராமத்திலிருக்கும்
குலதெய்வங்களிலிருந்து நகரங்களில் மகா க்ஷேத்திரங்களில் கோலோச்சும் தெய்வங்கள் வரை இதுதான் நம் வழக்கம். சிதம்பரத்தில் இருக்கக்கூடிய தீட்சிதர்கள் நடராஜரை தங்கள் கூட்டத்தில் ஒருவராக எண்ணுகிறார்கள் மதுரையில் இருக்கும் அத்தனை பேரும் மீனாட்சியை தங்கள் வீட்டுப் பெண் என்று உரிமை
கொண்டாடுகிறார்கள். அதே போல புரி நகர மக்கள் ஜகந்நாதரையும், பலதேவரையும், சுபத்ரையையும் தங்கள் வீட்டுக் குழந்தைகளாகவே எண்ணுகிறார்கள். நாம் கோகுலாஷ்டமிக்கு மட்டுமே குழந்தையாக க்ருஷ்ணனை பூஜித்து பலகாரங்கள் செய்வோம்.
ஜகன்னாதபுரியிலோ என்றுமே தங்கள் குழந்தையாகவே அவரைக் கருதுவதால் தான்,
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!