Discover and read the best of Twitter Threads about #பைரவர்_வழிபாடு

Most recents (13)

*ஸ்ரீ மஹா சொர்ண பைரவி சமேத ஸ்ரீ மஹா மஹா சொர்ணாகர்ஷன பைரவர் சுவாமி :

உலகில் வேறு எங்கும் காணவியலாத அதிசய அதியற்புத திருவுரு அமைப்பு கொண்ட தெய்வம் ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர். Image
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானை வழிபட ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் விலகும்.

ஆயிரம் கோயில் சென்று வணங்கிய பலன் உடனே கிட்டும்.

நினைத்தது நடக்கும்.

கேட்டது கிடைக்கும்.

ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் இருக்கும் இடத்தில் சொர்ணம் செழித்துக் கொண்டே இருக்கும்.
*திருவாலய சிறப்பு:*

கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை ஸ்ரீமஹாமஹா சொர்ணாகர்ஷன பைரவர் எனும் ஸ்ரீ மஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் முப்பெரும் தேவ தேவியர் சொரூபம்.
Read 8 tweets
#பஞ்ச_பைரவர்_ஆலயம்

*பிதுர் தோஷத்தை நீக்கும் பசுபதீஸ்வரர் ஆலய பஞ்ச பைரவர்*!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆவூர் திருத்தலம்.

இங்கு பசுபதீஸ்வரர் எனும் சிவாலயம் இருக்கிறது.
இங்கு சிவபெருமான் பசுபதீஸ்வரர் என்ற திருநாமத்துடனும் அம்பாள் பங்கஜவல்லி என்று திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள்.

ஆவூர் பெயர் காரணம்:

வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனும் என்ற வானிலக பசு பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடம் இந்த திருத்தலம் ஆகும்.
எனவேதான் இத்தலம் ஆவூர் என்றானது.

‘ஆ’ என்பது பசுவை குறிக்கும்.

இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் பஞ்ச பைரவ மூர்த்திகள் இங்கு ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள்.

இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும்.
Read 6 tweets
#பைரவர்_அஷ்டோத்ர_சதநாமாவளி

1. ஓம் பைரவாய நம
2. ஓம் பூத நாதாய நம
3. ஓம் பூதாத்மனே நம
4.ஓம் பூத பாவநாய நம
5.ஓம் க்ஷேத்ரதாய நம
6. ஓம் க்ஷேத்ர பாலாய நம
7.ஓம் க்ஷேத்ர ரக்ஞாய நம
8. ஓம் க்ஷத்ரியாய நம
9. ஓம் வீராஜே நம
10. ஓம் ஸ்மசானவாஸிநே நம
11.ஓம் மாம்ஸாசினே நம
12. ஓம் ஸர்ப்பராசயே நம
13. ஓம் ஸ்மராந்தக் ருதே நம
14. ஓம் ரக்தபாய நம
15. ஓம் பானபாய நம
16. ஓம் ஸித்தாய நம
17. ஓம் ஸித்தி தாய நம
18. ஓம் ஸித்த ஸேவிதாய நம
19. ஓம் கங்காளாய நம
20. ஓம் காலசமனாய நம
21. ஓம் கலாய நம
22. ஓம் காஷ்டாய நம
23. ஓம் தனவே நம
24. ஓம் கவயே நம
25. ஓம் த்ரிநேத்ரே நம
26. ஓம் பஹு நேத்ரே நம
27. ஓம் பிங்கள லோசனாய நம
28. ஓம் ஓம் சூல பாணயே நம
29. ஓம் கட்க பாணயே நம
30. ஓம் கங்காளிநே நம
Read 11 tweets
#காசி_ஸ்ரீ_கால_பைரவர்

#பைரவாஷ்டமி_சிறப்பு

#அஷ்ட_பைரவர்_யாத்திரை

பலருக்கும் தெரியாத தகவல் :

காசி க்ஷேத்திரத்தின் சிவாலயங்களில் சிவபெருமானின் தலைமை காவலர் காலபைரவர்.

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வடக்கில், பைரவநாத் என்னும் இடத்தில் அமைந்துள்ளது, காலபைரவரின் திருக்கோயில்.
இவரின் மேனியில் செந்தூரம் பூசி, அதற்கு மேல் பட்டு சரிகை வஸ்திரம் அணிவித்திருப்பதுடன், முகக் கவசமும் அணிவித்துள்ளனர்.

காசியில் யம பயம் கிடையாது. காலபைரவரின் சந்நிதியில், `கால பைரவ அஷ்டகம்’ படிக்கப்படுவதால் பக்தர்களை நெருங்குவதற்கு காலதேவன் அஞ்சுவான் என்பது நம்பிக்கை.
காசி காலபைரவர் ஆலயத்தில் வழங்கப்படும் மந்திரிக்கப்பட்ட காப்புக் கயிறு மிகுந்த சக்தி வாய்ந்தது.

இந்த கயிறைக் கட்டிக்கொள்வதால் பயம், பகைகள் விலகி நன்மை நடக்கும்.

காசிக்குச் சென்று பைரவரை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும்.
Read 7 tweets
#பைரவர்_வழிபாடு

சிவ வடிவங்களில் ஒன்று பைரவ வடிவம்.

பைரவர் என்றால் அச்சம் தருபவர் என்று பொருள்.

அதாவது, பகைவர்களுக்கு பயத்தையும் அடியவர்களுக்கு அருளையும் அளிக்கும் தெய்வம் இவர்.

ஸ்ரீ பைரவ அவதாரம் குறித்து புராணங்களில் மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கின்றன. Image
சிவபெருமானால் படைக்கப்பெற்ற பிரம்மன், சிவனாரைப் போலவே ஐந்து முகங்களும் எட்டுத் தோள்களுமாக விளங்கினார்.

எனவே இவரை, சிவபெருமானுக்கு இணையாக அனைவரும் போற்றினர்.

இதனால் ஆணவம் கொண்டார் பிரம்மன்; மதிமயங்கி சிவநிந்தனை செய்தார்.
அப்போது பைரவரைத் தோற்றுவித்த சிவனார், பிரம்மதேவனின் ஐந்தாவது தலையை வெட்டி, அதனை கபாலமாக்கிக் கொண்டார்.
Read 17 tweets
#வைரவேச்சுரம்

காஞ்சீபுரம் வைரவேச்சுரம் :

கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிபுரத்தில் உள்ளது.
இதற்கு அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது.

இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ளார்.
காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் பிரம்மதேவர் வழிபட்ட பைரவர் கோவில் அமைந்துள்ளது.

இங்கு பிரம்மன் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளிய பைரவருக்கும் தனி சந்நிதி அமைத்து வழிபாடு செய்தான்.
Read 4 tweets
#நட்சத்திர_பைரவர்_மந்திரம்

அசுவினி, மகம்,மூலம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க வேண்டிய மந்திரம்

" ஓம் ஹ்ரீம் பம் பீஷன பைரவாய நமஹா"
பரணி, பூரம், பூராடம் நட்சததிரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை வேண்டிய மந்திரம்

"ஓம் ஹ்ரீம் பம் ருரு பைரவாய நமஹா"

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க வேண்டிய மந்திரம்

"ஓம் ஹ்ரீம் பம் ஶ்ரீ் ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவாய நமஹா"
ரோகிணி,அஸ்தம், திருவோணம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க வேண்டிய மந்திரம்

"ஓம் ஹ்ரீம் பம் கபால பைரவாய நமஹா"

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க வேண்டிய மந்திரம்

"ஓம் ஹ்ரீம் பம் சண்ட பைரவாய நமஹா"
Read 7 tweets
*64 வகை அபிஷேகம் நடைபெறும் கால பைரவர் ஆலயம்!!!*

இந்தியாவில் அமைந்துள்ள 2 கால பைரவர் கோவிலில் இரண்டாவதாக உள்ள கோவில் தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற தட்சணகாசி கால பைரவர் கோவில் சிறப்பு பற்றி காண்போம்..
இந்தியாவில் இரண்டு இடங்களில் உள்ளது கால பைரவர் கோவில்.

காசியில் அமைந்துள்ள தட்சண கால பைரவர் கோவில் முதல் இடத்தில் உள்ளது.

அடுத்ததாக தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தட்சணகாசி கால பைரவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

ஆதியும் அந்தமும் இவரே என்று மக்களால் போற்றப்படுகிறது.

மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர்.

இந்த  64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்  ஆவார்.
Read 10 tweets
#பைரவர்_வழிபாடு

#27_நட்சத்திர_பைரவர்_வழிபாடு

27 நட்சத்திரக்குரிய பைரவ தலங்கள்.

மனதார பைரவரை வழிபாடு செய்தால் நமது அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும்.

27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர்களும், தலங்களும் :-
1.அஸ்வினி: ஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைவருக்கு நாய் வாகனம் இல்லை.

2.பரணி: ஸ்ரீமகா பைரவர்- திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.

3.கார்த்திகை: ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை.
4.ரோகிணி: ஸ்ரீகால பைரவர்-பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்- கண்டியூர், தஞ்சாவூர்.

5.மிருகசீரிஷம்: ஸ்ரீ சேத்திரபால பைரவர்- சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)

6.திருவாதிரை: ஸ்ரீவடுக பைரவர்-ஆண்டாள் கோவில் (பாண்டிச்சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி.மீ.)
Read 10 tweets
*சிவலிங்க வடிவில் அருளும் ஸ்ரீ காலபைரவர்!*

தமிழகத்தில் கிருஷ்ணகிரிக்கு அருகில் மிக ரம்யமான சூழலில் அமைந்திருக்கிறது ஸ்ரீகாலபைரவர் கோயில்.
கிருஷ்ணகிரி நகரின் பழைய பேட்டையிலிருந்து குப்பம் செல்லும் சாலையில், சையத் பாஷா எனும் மலைக்கு வலப்புறமாக ஆஞ்சநேயர் மலைக்குச் செல்லும் பாதையில், சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால் பைரவர் கோயிலை அடையலாம்.
கோயிலை நெருங்குவதற்கு முன்பாக மலையின் அடிவாரத்தில் ஓர் அரசமரத்தின் அடியில் பெரிய பாறையைக் குடைந்து வடிக்கப்பட்ட ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். அங்கிருந்து சிறிது தூரத்திலேயே காலபைரவர் கோயில் அமைந்துள்ளது.
Read 18 tweets
ஸ்ரீ பைரவர் அஷ்டோத்ர சதநாமாவளி :

1. ஓம் பைரவாய நம
2. ஓம் பூத நாதாய நம
3. ஓம் பூதாத்மனே நம
4.ஓம் பூத பாவநாய நம
5.ஓம் க்ஷேத்ரதாய நம
6. ஓம் க்ஷேத்ர பாலாய நம
7.ஓம் க்ஷேத்ர ரக்ஞாய நம
8. ஓம் க்ஷத்ரியாய நம
9. ஓம் வீராஜே நம
10. ஓம் ஸ்மசானவாஸிநே நம
11.ஓம் மாம்ஸாசினே நம
12. ஓம் ஸர்ப்பராசயே நம
13. ஓம் ஸ்மராந்தக் ருதே நம
14. ஓம் ரக்தபாய நம
15. ஓம் பானபாய நம
16. ஓம் ஸித்தாய நம
17. ஓம் ஸித்தி தாய நம
18. ஓம் ஸித்த ஸேவிதாய நம
19. ஓம் கங்காளாய நம
20. ஓம் காலசமனாய நம
21. ஓம் கலாய நம
22. ஓம் காஷ்டாய நம
23. ஓம் தனவே நம
24. ஓம் கவயே நம
25. ஓம் த்ரிநேத்ரே நம
26. ஓம் பஹு நேத்ரே நம
27. ஓம் பிங்கள லோசனாய நம
28. ஓம் ஓம் சூல பாணயே நம
29. ஓம் கட்க பாணயே நம
30. ஓம் கங்காளிநே நம
Read 12 tweets
#பைரவர்_வழிபாடு

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்குத்தான்.

ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார்.
பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள்.

எல்லா சிவ தலங்களிலும், ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீல மேனியாக அருள் தருபவர் பைரவர்.
பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிக உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது.

பைரவரை, தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மகத்துவங்களை தந்தருளும்.
Read 11 tweets
#பைரவர்_வழிபாடு

#ஜோதிட_பரிகாரம்

உங்கள் இராசிக்கு பைரவரை வணங்கும் முறை

கடுமையான கிரக தோஷம் உள்ளவர்கள் பைரவ வழிபாடு செய்தால், கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

எவராலும் தீர்க்க முடியாத பிரச்சனைகளை பைரவர் தீர்த்து வைப்பார்.
பைரவரை ஒவ்வொரு இராசியினரும் எப்படி வழிபட வேண்டும்? என்பதற்கு வழிமுறை உள்ளது.

இவ்வாறாக இராசிக்கு ஏற்ப பைரவரை வணங்கினால் தோஷங்கள் தீர்ந்து, நல்வாழ்வு பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு இராசியினரும், ஒவ்வொரு அம்சங்களை பார்த்து வழிபடுவது மிகவும் நல்லது.
மேஷ இராசிக்காரர்கள் பைரவருடைய உடலில் சிரசு எனப்படும் தலைப்பகுதியை பார்த்து வணங்குவது தோஷத்தை போக்கும்.

ரிஷப இராசிக்காரர்கள் கழுத்து பகுதியையும்,

மிதுன இராசிக்காரர்கள் தோல் பகுதியையும்,

கடக இராசிக்காரர்கள் மார்பையும்,

சிம்ம இராசிக்காரர்கள் வயிற்றுப் பகுதியையும்,
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!