Discover and read the best of Twitter Threads about #பொய்கையாழ்வார்

Most recents (5)

#கீழப்பாவூர்_நரசிம்மர்_கோவில்
இந்தியாவில் உள்ள நரசிம்மர்
கோவில்களில் அபூர்வமானதும்,
வேறெங்கும் காண இயலாத பல்வேறு
சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில். நரசிம்மருக்குத் தன் பக்தர்கள் மீது பிரியம் அதிகம். நம்மை அறியாமலே, அவர் நாமத்தை சொன்னாலே போதும், ஓடோடிவந்து Image
காப்பான் என்று எம்பெருமானின் ஈகைக் குணத்தை எடுத்துக் கூறுகிறார் #பொய்கையாழ்வார். முதன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் திருத்தலத்தில். மீண்டும் அவதாரம் எடுத்த தலம் கீழப்பாவூர். அகோபிலத்தில் இருந்து வைகுண்டம் திரும்பி விட்டாலும் நரசிம்மரின் மனம் முழுவதும் பக்தர்களைச் Image
சுற்றிச் சுற்றியே வந்ததாம். கலியுகத்தில் கலி புருஷனின் மாயையில் சிக்கி, பக்தர்கள் அல்லலுறுவார்களே, அவர்களை மாயையில் இருந்து விடுவித்துக்
காக்க வேண்டுமெனத் தவித்தார் திருமால். அகோபிலத்தில் வெறும் இரண்டு நாழிகைகள் நீடித்திருந்து பணியை முடித்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்பிவிட்டார் Image
Read 14 tweets
#ஆழ்வார்_அருளிச்செய்தது #நாலாயிர_திவ்யபிரபந்தம் #ஸ்ரீவைஷ்ணவம் #ஸ்ரீராமானுஜர்

#திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டுவிட்டனர். சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில்/காட்டுமன்னார்குடியில் #ஸ்ரீநாதமுனிகள்
என்னும் வைணவர் அவதரித்தார். அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு அப்பெருமாள் கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தார். அவர் ஓரு நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப்பெருமாள் கோவில் சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக் கொண்டிருந்த
பொழுது, தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள்
ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.
எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை
Read 38 tweets
#பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் ஜெயந்தி இன்று.

இவரே பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் என்ற சிறப்பினைப் பெறுகின்றார்.

இவர் காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்னுமிடத்தில் உள்ள பொய்கையில் தோன்றியவர்.

பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் என்று அழைக்கப்படுகிறார்.
இவரே திருமாலின் பத்து அவதாரங்களையும் முதலில் சிறப்பித்துப் பாடியவர் ஆவார்.

இவர் திருமாலின் கையிலுள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் அம்சமாகத் தோன்றியவர் என்று கருதப்படுகிறார்.

இவர் கவிஞர் தலைவன் என்று வைணவர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.
இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப் போற்றப்படுகிறது.

ஹரியும் சிவனும் ஒன்றுதான்.

ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம்.

சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம். இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும்
Read 11 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஸ்ரீரங்கத்து சித்திரை வீதியில் பல வருடங்களுக்கு முன் ஒரு பக்தர் மதன் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு மிகவும் அதிகமான கிருஷ்ண பக்தி! அவரது இல்லத்தில் ஒரு சிறிய கிருஷ்ண விக்ரகம் இருந்தது. அதற்கு மிகவும் ஈடுபாட்டோடு அவர் தினமும் திருமஞ்சனம், அலங்காரம் செய்வது
மலர்களைக் கொண்டு பூஜிப்பது, முதலியன செய்து மகிழ்வார். அந்த குட்டி கிருஷ்ணனுக்கு #சதங்கைஅழகர் என்று பெயரிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது, “இன்று சதங்கை அழகருக்கு மல்லிகை மாலை அணிவித்தோம், ரோஜா மாலை அணிவித்தோம், பாலபிஷேகம் செய்தோம், தேனபிஷேகம் செய்தோம்” என்று பக்தி
மேலிட கூறி மகிழ்வார் மதன். ஒருமுறை அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்த ஒரு வீட்டிற்கு, ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் நன்கு உறங்கி கொண்டிருக்கும் போது, அவரது கனவில் ஒரு அழகான குழந்தை, தெய்வீக களையுடன் தோன்றியது! அவரை பார்த்து அழகாக சிரித்தது
Read 7 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காசிபர்-கத்ரு தம்பதியரின் மகன் பாற்கடலிலும் வைகுண்டத்திலும் வீற்றிருக்கும் பெருமாளுக்கு படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன். ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், திருப்பதி திருத்தலம் சேஷாசலம் எனப்படுவதும் உண்டு. ஸ்ரீராமர் காலத்தில்
லக்ஷ்மணராக பிறந்து அவருடனே இருந்து உதவி புரிந்தவர். ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் பலராமனாக பிறந்து கிருஷ்ணருக்கு உதவி புரிந்தார். இக்கலிகாலத்தில் ராமானுஜராகப் பிறந்து பெருமாளுக்கு தொண்டு செய்தார். ராமன் குழந்தையாக இருந்தபோது, என்ன காரணமென்று புரியாமல் வீல் வீலென்று அழுதார். தாயும்
சேடிகளும் என்னென்னவோ செய்தும் அழுகை நிற்கவில்லை. குலகுரு வசிஷ்டர் தான் தம்பி லக்ஷ்மணனை உடன் உறங்க வையுங்கள் என்று ஆலோசனை கூறினார். குழந்தை ராமன் தனது அணையான லக்ஷ்மணனின் உடல் ஸ்பரிசத்தைப் பெற்றதும் அழுகையை நிறுத்திவிட்டார்.

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!