Discover and read the best of Twitter Threads about #மதுரை

Most recents (12)

#மதுரை_மீனாக்ஷி_அம்மன்_திருக்கோவில் #சிறுகுறிப்பு முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு. கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய ImageImage
நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், மதுரை சொக்கன் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. Image
2500 வருடங்கள் பழமையான மதுரை நகரானது, தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் முக்கியம் வாய்ந்தது. மதுரை நகர், திருவாலவாய், சிவராச தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில் Image
Read 8 tweets
*ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகள் ஆஞ்சநேய ஸ்வரூப லட்சணங்களைப்பற்றி வெகு அழகாகக் குறிப்பிடுகிறார்*.

அதாவது ''ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை;

1
வினயத்தில் உச்ச நிலை'' இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சநேயனே! என்கிறார்.

வாயுவின் அம்சத்தினால் அஞ்சனாதேவியிடம் அவதரித்தவர் ஆஞ்சநேயர். நித்திய பிரம்மச்சாரியான இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.

2
நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமானை வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டும்.

பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் ஆஞ்சநேயர்.

3
Read 100 tweets
3600 #ஆண்டுகளுக்கு #முன்பே..

#தமிழன் #படைத்த #அதிசயம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரகசியம்!

இது வழக்கமான சூரியன் மறையும் படம் தானே. ஆனால் இதில் என்ன விந்தை இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம்.

சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என்பது அனைவருக்கும் தெரியும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நான்கு திசைகளுக்கு நான்கு கோபுரங்கள் உள்ளதே அப்படியென்றால் சூரியன் மேற்கு கோபுரத்திற்கு நேராக தானே மறைய வேண்டும்?

இப்படி வட மேற்கில் மறைகிறதே?

உங்கள் அனைவருக்கும் தெரியும்,
உலகம் உருண்டையானது என கலிலீயோ 300 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டு பிடித்தார்.

பூமி 23.5° டிகிரி சாய்வாக சுற்றுகிறது என நூறாண்டுகளுக்கு முன்னர் தான் கண்டு பிடித்திருப்பர்.

ஆனால் நம் தமிழர்கள் 3600 ஆண்டுகளுக்கு முன்னரே மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட ஆரம்பித்து விட்டனர்.
Read 6 tweets
பெருவழிகளில் #சமணம்...!

தொல்லியல் ஆய்வில் மிக முக்கியமான சான்றுகளாக விளங்கும் #தமிழி எழுத்துப் பொறிப்புகளைக் கொண்ட 'சமணர் படுக்கைகள்' பெருவழிகளிலேயே அமைந்துள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

பண்டைய வணிகர்கள் பண்டு பெரும்பாலும் சமண சமயத்தைப் பின்பற்றியுள்ளனர். Image
சமண முனிவர்களும் வணிகர்களை நெறிப்படுத்தியுள்ளனர்.

அதன் நன்றி நிமித்தமாக வணிகர்கள் தாங்கள் வணிகத்திற்காக செல்லும் நகரங்களில் அமைந்த மலைப்பகுதி குகைத்தளங்களில்,

சமண முனிவர்களுக்கு படுக்கைகளை வெட்டிக் கொடுத்து அச்செய்திகளை கல்வெட்டுச் சான்றுகளாக்கியுள்ளனர். Image
'வெள்அறை நிகமதோர்' #மாங்குளம் சமணக்குகைக் கல்வெட்டில், #நிகமம் என்பது வணிகக் குழுவினைக் குறிக்கும் சொல்லாகும்.

சிலப்பதிகாரத்தில் காவிரிக்கரையோரமே ஒரு பெருவழி சென்று, #உறையூர் அடைந்து, சோழநாட்டு எல்லையில் மூன்று பிரிவாகப் பிரிந்து, #கொடும்பாளுர் வழியாக #மதுரை அடைந்துள்ளது.
Read 12 tweets
பெருவழிகள் உருவாக்கம்...!

பண்டைய நாளில் தென்னிந்தியாவில் பெருவழிகள் பல நிறைந்திருந்தன.

#பெருவழிகள் என்பது ஒரு நிலப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு ஊர்களை இணைக்கும், நீண்ட நெடிய அகன்ற சாலைகளைக் குறித்தனவே.

இவ்வழிகளைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வாணிகத்திற்காகவும், அரசு பயன்பாட்டிற்காகவும் உருவானவைகளே பெருவழிகளாகும்.

இப்பெருவழிகள் வாணிகம் மட்டுமின்றி, நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய செய்திகள், போர்ச் செய்திகள், ஓலைகள், பிறசெய்திகள் முதலியவற்றைக் கொண்டு செல்லும் வழியாகவும் செயல்பட்டன.
பண்டைக்காலத்தில் நிலவழிகள் கால்நடை மேய்ப்பர்களால் உருவாக்கம் பெற்றன.

மேய்ச்சலுக்காக நீர் நிலை தேடியும், புல்வெளி தேடியும் இடம்பெயரும் இனக்குழுக்கள்,

தங்கள் கால்நடைகளுடன் சென்று வந்த பாதைகளே பின்னாளில் தரைவழிகளாக இனங்காணப்பட்டன.
Read 20 tweets
#கிழார்....!

பண்டைத் தமிழகத்தில் குடித் தலைவர்களாக விளங்கிய கிழார்களின் ஆட்சியே முதலில் ஏற்பட்டது.

அக்கிழார்கள் ஊர்க்குடிகளால் தேர்ந்தெடுக்கப்பெற்ற வயது முதிர்ந்த தலைவர்களாவர்.

அவர்கள் இரத்த உறவின் அடிப்படையில் எழுச்சிபெற்ற குடித்தலைவர்கள்.
குடியாட்சித் தலைவர்கள் என்றும் கொள்ளலாம்.

அத்தலைவர்கள் வேளிரும், வேந்தரும் அரசியலில் உருவாவதற்கு முன், அரசியல் அதிகாரம் பெற்றிருந்தார்கள்.

வேளிர்களின் வீறார்ந்த பூசலினால் கிழார் ஆட்சி, #வேளிர் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பெற்றது.
கிழாரின் பழைய மக்களாட்சி தன்மை மாறி, வேளிர்களுக்குத் தங்கள் குடியிலிருந்து #திறை அல்லது #காணிக்கை வாங்கித் தரும் பேராளர்களாக மாறினர்.

வேளிரும், வேந்தரும் குடிகளிடமிருந்து #வரி வாங்குவதில் கடுமையாக இருந்தனர்.

#தொல்குடி வாழ்க்கையில் ஒவ்வொரு குடிக்கும் ஒரு #தலைவன்...
Read 18 tweets
இலக்கியங்களில் கொற்கையும், வணிகச் சிறப்பும்...!

#தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்தில் சங்க காலப் பாண்டியர்களின் இயற்கைத் துறைமுகம் #கொற்கை.

கொற்கைத் துறைமுகத்தில் முத்துக் குளித்தல் தொழிலும், முத்து ஏற்றுமதியும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. Image
செங்கடல் வழி நூலாசிரியர் இதை #கொல்சி என்று எழுதியுள்ளார்.

#கொற்கை தமிழகத்திலுள்ள #புகார், #மாமல்லபுரம், #தொண்டி, #உவரி, #முசிறி ஆகிய பிற துறைமுகங்களை விட மிக அழகு நிறைந்த துறைமுகமாகவும்;

கடற்கொள்ளையர்களால் தலைகாட்ட முடியாத நல்ல பாதுகாப்பான துறைமுகமாகவும்;
#உரோமர் நாட்டு மக்களை மிகவும் வசீகரித்த 'ஆணி முத்துக்களை' அளிக்கும் பட்டினமாகவும் இருந்தது.

மேலும் அயலவர்களை கொற்கை மக்களும், பாண்டிய பார்வேந்தர்களும் அன்புடன் வரவேற்றுப் போற்றி விருந்தோம்புபவர்களாக விளங்கினர் என்பர்.
Read 23 tweets
வைகைப் பெருவழி!

ஆற்றங்கரை வழியாகச்சென்ற வைகைப் பெருவழியை வைகைவெளியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், சமணத்தடயங்கள் மூலமாகக் கண்டுகொள்ள முயல்வோம்.

முசிறி, தொண்டி, கொற்கை, அழகன்குளம், பூம்புகார், அரிக்கமேடு, கோடிக்கரை முதலிய துறைமுகங்களிலிருந்து மதுரைக்குப் பெருவழிகள் சென்றுள்ளன.
வட இந்தியாவிலிருந்து மதுரை வழியாகக் கன்னியாகுமரி வரை வரும் தட்சிணப் பெருவழியும்,

பாலக்காட்டுக் கணவாயிலிருந்து கிழக்கு நோக்கி வந்து மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் பெருவழியும்,

கொங்கு நாட்டிலிருந்து அயிரை மலை, பழநி வழியாக மதுரைக்குச் செல்லும் கொங்குப் பெருவழியும்,
கொடைக்கானல் மலை நாட்டிலிருந்து மதுரைக்குச் செல்லும் மலைநாட்டுப் பெருவழியும்,

சோழ நாட்டிலிருந்து பொன்னமராவதி, திருமயம் வழியாகவும், கிழக்குக் கடற்கரையை ஒட்டி மணல்மேல்குடி வழியாகப் பாண்டிய நாட்டிற்குள் நுழையும் பெருவழியும்,
Read 7 tweets
அன்புடையீர், வணக்கம்.

"முறிகள்..."

தமிழகத்தில் சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு வரை #முறி என்ற சொல் அன்றாடப் பொருளாதார வாழ்வில் நிறைய வழங்கிய சொல்லாகும். இன்று அது வழக்கொழிந்து ஆய்வுக்குரியதாகிவிட்டது.

#பத்திரம் என்ற சொல் இன்று முறியின் இடத்தில் வழங்கி வருகின்றது!
சென்ற நூற்றாண்டு வரை ஒருவருக்கு ஒருவர் கொடுத்தல், வாங்குதல், விற்றல் போன்ற ஆவணப் பதிவுகளைச் செய்து அவற்றை #முறி என்றே அழைத்தனர்.

#முறி என்பதற்குக் கொழுந்தாக உள்ள இலை என்று பொருள் உண்டு.

#தொல்காப்பியம் இதனை ''இலையே, முறியே, தளிரே, தோடே'' என (தொல். பொருள் 642) உணர்த்துகின்றது!
#பனை ஓலையில் குருத்தாக உள்ளதையே ஏடுகளாகப் பயன்படுத்தி ஆவணங்கள் எழுதப்பட்டதால் கொழுந்து இலையில் எழுதிய அவற்றை #முறி என்றே அழைக்கும் மரபு உண்டாகியிருக்க வேண்டும்.
Read 20 tweets
#பொங்கல்_ஸ்பெஷல் !

#மதுரை #மீனாட்சி_அம்மன் கோவிலில் ஒவ்வொரு பொங்கல் அன்றும் கல் யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

மதுரையை தலைநகராகக் கொண்டு அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.

🇮🇳🙏1
ஒரு பொங்கல் திருநாள் அன்று அமைச்சர்கள், படைவீரர்கள் புடைசூழ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தான் அபிஷேகப் பாண்டியன். கோவிலுக்கு மன்னர் வருவதைக் கண்ட பக்தர்கள் அனைவரும் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கினர்; ஒருவரைத் தவிர. அதைக் கண்டு மன்னனுக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது.
🇮🇳🙏2
அதற்குள் பணியாள் ஒருவன், ‘மன்னா! இவர் ஒரு சித்தர். சித்து வேலைகள் பலவற்றை நிகழ்த்தி இருக்கிறாராம்’ என்றான்.

தன்னை அலட்சியப்படுத்தியவர் ஒரு சித்தர் என்று அறிந்ததும், அவர் அருகில் சென்று வணக்கம் தெரிவித்தான் மன்னன்.

🇮🇳🙏3
Read 17 tweets
தஞ்சாவூரில் சிந்தனை மேடை என்ற அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்று,

"கீழடி - தமிழர் வாழ்வும் வரலாறும்" என்ற தலைப்பில்,

திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்!

அவரின் உரை பின்வருமாறு...
கடந்த செப்டம்பர் மாதம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பழங்குடிகள் என்றும், கீழடியின் வயது கி.மு 600 என்றும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தன!

கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை!
இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும். அவை இன்னும் பின்னோக்கிச் செல்லும்!

அதற்குக் கீழடியில் முழுமையான அகழாய்வு செய்யப்பட வேண்டும். #கீழடி இன்னும் பல பொக்கிசங்களை கொண்டுள்ளது!

இதுபோன்று தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்கள் உள்ளன..
Read 19 tweets
சித்திரை திருவிழா முதல் நாள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா..
கற்பக விருட்சம் வாகனம்
சிம்ம வாகனத்தில்..
#சித்திரைத்திருவிழா2019
#மதுரை
Credits : ©Sira photography
சித்திரை திருவிழா முதல் நாள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா..
கற்பக விருட்சம் வாகனம்
சிம்ம வாகனத்தில்..
#சித்திரைத்திருவிழா2019
#மதுரை
Credits : ©GunaAmuthan
Read 31 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!