Discover and read the best of Twitter Threads about #மயிலாடுதுறை

Most recents (3)

*ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகள் ஆஞ்சநேய ஸ்வரூப லட்சணங்களைப்பற்றி வெகு அழகாகக் குறிப்பிடுகிறார்*.

அதாவது ''ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை;

1
வினயத்தில் உச்ச நிலை'' இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சநேயனே! என்கிறார்.

வாயுவின் அம்சத்தினால் அஞ்சனாதேவியிடம் அவதரித்தவர் ஆஞ்சநேயர். நித்திய பிரம்மச்சாரியான இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.

2
நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமானை வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டும்.

பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் ஆஞ்சநேயர்.

3
Read 100 tweets
#மாயவரம் ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது ஆன்றோர் வாக்கு. சப்த காசி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது மயிலாடுதுறை.
காசியில் ஒரு விஸ்வநாதர் விசாலாட்சி. இங்கோ ஏழு விஸ்வநாதர் விசாலாட்சி. அந்த சப்த காசி தலம், #மயிலாடுதுறை என்னும் மாயவரம் என்னும் #மாயூரம்.
1. துலாகட்டத்திற்கு லாகடம்
தெற்கே கிழக்கே பார்த்து கடைத் தெரு விஸ்வநாதர்
2.காவிரிப் பாலத்திற்கு தெற்கே பாலக்கரை விஸ்வநாதர்
3. வட கரையில் வள்ளலார் தீர்த்த மண்டபத்திற்கு கிழக்கே வள்ளலார் விஸ்வநாதர்
4. திம்மப்ப நாயக்கர் படித்துறையில் படித்துறை விஸ்வநாதர்
5. வடக்கு வீதிக்கும் பெரிய கோயில் வடக்கு மதிலுக்கும்
நடுவே உள் விஸ்வநாதர்
இந்த ஐவரும் கண்வர், கௌதமர் , அகத்தியர், பரத்வாஜர், இந்திரன் ஆகியோர் சிவலிங்கம் நிறுவி வழி பட்ட கோயில்கள்.
6. இது தவிர லாகடம் மார்க்கெட்டுக்குள் கொஞ்சம் பாழடைந்து திருப்பணி எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஸ்வநாதர்
7. கொரநாடு விஸ்வநாதர் ஆக மொத்தம் ஏழு காசி
Read 18 tweets
"சட்டிச்சோறு..."

கல்வெட்டுக்களில் #சட்டிச்சோறு #எச்சோறு #புள்ளிச்சோறு #திங்கட்சோறு #வரிச்சோறு #வெட்டிச்சோறு என்று பல சொற்றொடர்கள் வருகின்றன. இதில் #எச்சோறு என்பது ஒரு வகை வரியாகும்.

#சட்டிச்சோறு எவ்வாறு கொடுக்கப்பட்டது என்பதை பின்வரும் கல்வெட்டுகள் விரிவாக எடுத்துரைக்கின்றது!
#சட்டிச்சோறு என்பதற்கு கோயில் வேலைக்காரர்களுக்கு கொடுக்கப்படும் "உரிமை பிரசாதம்"என திரு T. N சுப்ரமணியம் அவர்கள், "தென்னிந்திய கோயிற் சாசனங்கள்" நூலில் விளக்கம் கூறுகிறார்.

இது திருவிழாவிற்கு வரும் அடியார்களுக்கு, யாத்திரிகர்களுக்கு அளிக்கப்பட்டதாக பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன!
க) திருவண்ணாமலைக் கல்வெட்டு:

முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் திருவண்ணாமலைக் கோயிலில் பல பணிகள் நடைபெற்றிருக்கின்றன.

இவனுடைய பணி மகன் ஒருவன் “பாண்டிய உதய திவாகரன்” என்பவன் சோழமண்டலத்து அருமொழித்தேவ வளநாட்டு ஓர்வலக் கூற்றத்து ராஜராஜ நல்லூரைச் சேர்ந்தவன்.
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!