Discover and read the best of Twitter Threads about #மஹாபெரியவா

Most recents (10)

#மஹாபெரியவா அருள்வாக்கு
எமன் ஒரு நொடி நேரத்தைக் கூட வீணாகக் கழிப்பதில்லை. ஒவ்வொரு வினாடியும் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். எப்போது நம்மை பிடித்துக் கொள்வானோ தெரியாது. அதனால், அவன் வருவதற்குள் கடவுளின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் நமக்குப் பயமில்லை. கோபம் கொண்டவனோடு Image
பழகினால் நமக்கும் கோபம் வந்து விடுகிறது. தீயவனோடு பழகினால் நாமும் கெட்ட எண்ணம் கொண்டவனாக மாறி விடுகிறோம். யாரோடு பழகுகிறோமோ அவர்களுடைய குணங்கள் நம்முள் உண்டாகி விடுகின்றன. அதனால் நல்லவர்களுடன் மட்டும் பழக்கம் கொள்வது அவசியமானதாகும். நமக்கு உண்டாகும் கஷ்டங்களைக் கண்டவர்களிடமும்
சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கேட்பவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்களோ என்று சிந்தித்து மேலும் கஷ்டப்படாதீர்கள். கஷ்டத்தை பிறரிடம் சொல்வது என்று முடிவெடுத்தால், அதை கடவுளிடம் மட்டும் சொல்லுங்கள். நிச்சயம் வழி பிறக்கும். மனிதன் மிருக நிலையில் இருக்கிறான். முதலில் மிருக
Read 4 tweets
#மஹாபெரியவா
சங்கீத இரட்டையர்கள் பி.வி. ராமன் மற்றும் பி.வி. லட்சுமணன் இருவரும் பிரபலமானவர்கள். டைகர் வரதாச்சாரியாரிடம் பாடம் பயின்றவர்கள். மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவை காஞ்சிப்பெரியவரின் உத்தரவின் பேரில் தொடங்கியவர்கள். இந்தச் சகோதரர்களை அடிக்கடி காஞ்சி
மடத்திற்கு அழைத்து பாடச் சொல்வது வழக்கம். ஒரு முறை, நவராத்திரி பூஜை மூன்றாம்நாள் விழாவுக்கு காஞ்சி மடத்தில் பாடுவதாக அவர்கள் ஒப்புக் கொண்டு இருந்தார்கள். அதே நாளில், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலிலும் நவராத்திரி நிகழ்ச்சியில் சகோதரர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. ஆனால்,
காஞ்சி மடத்தில் பாட வேண்டி இருப்பதை குறிப்பிட்டு பதில் கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால், நவராத்திரி விழா துவங்குவதற்கு 20 நாளைக்கு முன் திருவனந்தபுரம் அரண்மனையில் இருந்து சகோதரர்களுக்கு மீண்டும் அழைப்புக் கடிதம் வந்தது. அதில் நவராத்திரி கலை விழாவில் முதல் நாள் பாடவேண்டிய பாலக்காடு
Read 9 tweets
இன்று #ஸ்ரீசேஷாத்ரி_ஸ்வாமிகள் ஆராதனை தினம். ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஒரு பெரிய சித்த புருஷர். அவர் காஞ்சீபுரத்தில் பிறந்தவர். அவருக்கு சிவபெருமானே ஸ்ரீ பாலாஜி ஸ்வாமிகள் என்ற பேரில் நாலு சிஷ்யர்களோடு வந்து தக்ஷிணாமூர்த்தியாக தரிசனம் தந்து சன்யாசம் தந்தார். அவரின் அப்பா அம்மா அவர்
சின்ன வயதில் இருக்கும் போதே காலமாகி விடுகிறார்கள். “அவர் மூக பஞ்சசதியை சொல்லிக் கொண்டு இரவு முழுவதும் காமாக்ஷி கோயிலை ப்ரதக்ஷிணம் செய்வார்”, என்று ஸ்ரீ #மஹாபெரியவா கோவிந்த தாமோதர சுவாமிகளிடம் சொல்லி இருக்கிறார். அப்பேற்பட்ட மகான். அவருக்கு ஞானமும் ஏற்பட்டு விடுகிறது. அவரை அவரின்
சித்தி சித்தப்பா தான் வளர்க்கிறார்கள். ஶ்ரீ பாலாஜி சுவாமிகளிடம் இருந்து சன்யாசம் பெற்ற பிறகு, நான் ஒரு சன்யாசி வீட்டுக்குள் வரமாட்டேன் என்கிறார். அவரோட சித்தி சித்தப்பாவிற்கு, இப்படி இவர் சொல்கிறாரே! நாம் சரியாக கவனிக்காமல் விட்டோமோ என்று கவலை வந்து விடுகிறது. அப்போது ஒரு நாள்,
Read 10 tweets
#மஹாபெரியவா
ஸ்ரீமடம் பாலு மகாபெரியவாளின் நிழல் என்றுதான் சொல்ல வேண்டும். 1954-ம் வருடம் முதல் மகானை மிகவும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தவர். ஒரு சமயம் மகா பெரியவாளுக்கு மார்வலி வந்து அவஸ்தைப் படுவதைக் கண்ட பாலு, அதற்காகவே சபரிமலை ஐயப்பனிடம் வேண்டிக் கொண்டார். எனவே சபரிமலை
சென்று வர மகாபெரியவாளிடம் உத்தரவு கேட்டார். கேலியான புன்னகையுடன்,
"என்னடா உன் அப்பா, தாத்தா யாராவது சபரி மலைக்குப் போயிருக்காளா? உனக்கென்ன தெரியுமுன்னு நீ போறேங்கறே?" என்று கேட்டார் ஆசார்யா.
"அவா யாரும் போனதில்லே பெரியவா. பெரியவாளுக்கு அடிக்கடி வரும் மார்வலி சரியாகணும்னு ஐயப்பனை
வேண்டிண்டேன். அதனாலே மலைக்குப் போயிட்டு வரேன்" என்று மகானிடம் வேண்டி நின்றார் பாலு. பாலு சொன்னதைக் கேட்ட மகான் சற்று நேரம் யோசிப்பது போலிருந்தது, பிறகு சொன்னார்.
"நீ வெள்ளை வேட்டியோடேயே போலாம். நீ பிரம்மச்சாரிதானே, அதனாலே தோஷமே இல்லே. ஆனால் மலைக்குப் போனதும் சிகப்புத் துண்டைக்
Read 8 tweets
#மஹாபெரியவா
ஒரு முறை ஒரு வயதான பக்தர் பெரியவாவிடம் வந்தார், ‘தான் தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்படுகிறதாகவும், பலவித வைத்தியம் பார்த்தும் குணம் ஆகவில்லை, பெரியவாளே கதி, காப்பாற்ற வேண்டும்’ என்று கதறினார். கருணை மலையோ அமைதியாக அவரை ஏறெடுத்துப் பார்த்து விட்டு “உன்னிடம் Image
சன்னியாசி அல்லது சாதுவின் உடைமை ஏதாவது இருக்கிறதா?” என்று வினவ, வந்த பக்தர், அப்படி எதுவும் என் வசம் இல்லை என்று பதில் கூறினார். த்ரிகால ஞாநியான காஞ்சி முனிவரோ விடாமல் வற்புறுத்திக் கேட்டார். அந்த வயதான பக்தர் நன்கு யோசித்து பிறகு, பல வருடங்களுக்கு முன் ஒரு சந்நியாசி யாத்திரை
செய்யும் வழியில் என் வீடு வந்து ஒரு சிறு தொகையை கொடுத்து, பத்திரமாக வைத்துக்கொள் திரும்பி வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவே இல்லை. அதனால் பணத்தை செலவு செய்து விட்டேன் என்று தெரிவித்தார். இதைக் கேட்ட பெரியவா சிரித்துக் கொண்டே “உடனே அந்த
Read 5 tweets
#மஹாபெரியவா
ஒரு அனுஷத்தில் நடந்த சம்பவம். டிசம்பர் 15,2015 தினமலர், சி. வெங்கடேஸ்வரன்

ஒரு பாட்டி மகாபெரியவரின் பரம பக்தை. அந்தக்கால வழக்கப்படி அவருக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி கணவரை இழந்து விட்டிருந்தார். கணவர் வழியில் நிறைய சொத்து கிடைத்தது அவருக்கு. குழந்தை இல்லை. சொத்து
நிறைய இருந்தால் சொந்த பந்தங்கள் விடுவார்களா என்ன, அவற்றை அடைய துடித்தார்கள். ஆனால் பாட்டி எப்படியோ அதைக் காப்பாற்றிக் கொண்டார். ஒருமுறை, மகாபெரியவரிடம் வந்து, இந்த சொத்து முழுக்க காமாட்சிக்கு தான். ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டினார். பெரியவர் அதை வேண்டாம் என எவ்வளவோ மறுத்தார்.
ஆனால், பணத்துக்கு துளியும் முக்கியத்துவம் கொடுக்காத அவர், பெரியவரை வற்புறுத்தி சொத்துக்களை காமாட்சிக்கு என கொடுத்து விட்டார். இதனால், மடத்தின் சார்பில் அந்த மூதாட்டிக்கு ஒரு வீடு கொடுக்கப்பட்டது. ஒரு முறை அனுஷத்திற்கு மறுநாள், நிறைய பக்தர்கள் பெரியவரைத் தரிசிக்க வந்தார்கள்.
Read 10 tweets
#மஹாபெரியவா சொல்கிறார் “அம்மா குழந்தைக்கு பால் கொடுத்து ஆளாக்கிற மாதிரி, அம்பாள் குரு வடிவாக வந்து ஞானப் பால் கொடுத்து, ஒருத்தனோட அக்ஞானத்தைப் போக்கறா. அதுனாலதான் அம்பாளோட உபாசனைக்கு ஸ்ரீவித்யா உபாசனைன்னு பேர்”
(இது உண்மையில் பெரியவாளுக்கு தான் பொருந்தும்.) அந்த
ஞானத்தை அம்பாள்தான் கொடுக்கிறாள் என்பதற்கு பெரியவா #கேனோபநிஷத்தில் இருந்து ஒரு சம்பவம் சொல்கிறார். அதாவது தேவர்களுக்கே கூட அம்பாள் தான் ஞானத்தைக் குடுத்தாள் என்பதை. ஒரு தடவை தேவாசுர யுத்தத்தின் போது, தேவர்கள் வெற்றி பெற்று விடுகிறார்கள். வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ஒருவரை
ஒருவர் புகழ்ந்து கொண்டு அதிக ஆட்டம் பாட்டம்! பரமாத்மா பார்த்தாராம். இது என்னடா, இந்த தேவர்களுக்கே ஜெயிச்ச உடனே, அசுர குணம் வந்துடும் போல இருக்கே, என்று நினைத்து, அப்படி கெட்டுப் போகக் கூடாது என்று பக்கத்திலேயே ஒரு அடிமுடி காண முடியாத மாதிரி ஜோதி ஸ்வரூபமா ஒளி வடிவமா பகவான் காட்சி
Read 13 tweets
#மஹாபெரியவா
இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில்
உள்ளது. அப்போ பொண்ணப் பெத்தவாளுக்கு?
"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"
கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.

தசாநாம்
பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள். தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்.
ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும் தானம்
Read 8 tweets
#தேர்_இழுப்பதினால்_வரும்_நன்மைகள்
#மஹாபெரியவா நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார். அவருடைய வேதனையை உணர்ந்த பெரியவர் அவரிடம் “தேர் இழுத்திருக்கிறாயோ”என வினவ, இல்லை என்றார் நிலக்கிழார்.
“ஒரு முறை தேர்வடம் இழுத்து
விட்டு, பிறகு உன் பணியைத் தொடரு எல்லாம் நன்றாக முடியும்” என ஆசீர்வதித்தார் மஹா பெரியவர். மூன்று மாதங்களுக்குப் பிறகு புன்னகையுடன் பெரியவரை சந்தித்த நிலக்கிழார் தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது தர்மம் தோற்பதில்லை என்ற நம்பிக்கை வந்துவிட்டது என்றார்.
“தேர் இழுத்தாயோ” என பெரியவர் வினவ
ஆம் அதன் பின் தான் எல்லாம் நன்றாக நடந்தது. என்றார் நிலக்கிழார். தேர் என்பது நடமாடும் கோயில். முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், ஆலயத்துக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் தேர்த்திருவிழா அன்று இறைவனைக் கண்ணாரக் கண்டுகளிக்க முடியும். கோயிலில் தெய்வசக்தி எப்போதும்
Read 10 tweets
#அஷ்டலக்ஷ்மிகோவில்
தென்னிந்தியாவில், தமிழக கடற்கரையில் குடிகொண்டுள்ள ஒரே மஹாலக்ஷ்மி ஆலயம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலக்ஷ்மி ஆலயம். இந்த அபூர்வ ஆலயம் நமக்கு கிடைக்க முக்கிய காரணம் #மஹாபெரியவா. இந்தக் கோவிலுக்கு ஓங்கார க்ஷேத்ரம் என்று பெயர். இது போல் அஷ்டாங்க விமான கோவில்
திருக்கோஷ்டியூரில் உள்ளது. மற்ற இடங்கள், மதுரை கூடலழகர் கோவில், காஞ்சியில் திருத்தாங்கல் வைகுண்டநாதர் ஆலயம், உத்திரமேரூர் நின்றான், இருந்தான் கிடந்தான் ஆலயம் ஆகியவை. அஷ்டலக்ஷ்மி ஆலயம் மூன்றடுக்கு மாடி. இங்கும் மஹா விஷ்ணு நின்றான், இருந்தான் கிடந்தானாக அருள் பாலிக்கிறார். மூலவர்
சந்நிதியில் மஹாவிஷ்ணு, மஹா லக்ஷ்மி இருவரும் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள். ஆலயம் 65 அடி நீளம், 45 அடி அகலம் . உத்திரமேரூர் சுந்தரராஜ பெருமாள் ஆலய அமைப்பு. மூன்று அடுக்குகளில் விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, தனலக்ஷ்மி, ஆதிலக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, தைர்ய லக்ஷ்மி
Read 25 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!