Discover and read the best of Twitter Threads about #மாணிக்கவாசகர்

Most recents (4)

#ஆவுடையார்கோவில்_ஸ்ரீஆத்மநாதசுவாமி #மாணிக்கவாசகர்
49 கோடி பொன்னை தன் கருவூலத்தில் இருந்து எடுத்துக் கொடுத்து, கிழக்குக் கடற்கரையில் உள்ள மீமிசல், மணமேற்குடி, கோட்டைப் பட்டினம் ஆகிய துறைமுகங்களுக்குச் சென்று, ஆப்கானிஸ்தான் வழியாகக் கொண்டு வரப்படும் வாகான பரி இலக்கணங்கள் பொருந்திய Image
ஒரு லட்சம் அரபு நாட்டுக் குதிரைகளை வாங்கிவருமாறு தனது அமைச்சர்களில் வயதில் இளையவரான #திருவாதவூரருக்கு உத்தரவிட்டார் #முதலாம்_வரகுணபாண்டியன். பொ.யு 8-ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் முதலாம் வரகுணபாண்டியன். மதுரைக்கு கிழக்கே 30 கிமீ தூரத்தில் உள்ள
சிவத்தலம் #திருவாதவூர். அங்கு அமாத்திய பிராமண குலத்தைச் சேர்ந்த சம்பு ஆசுருதர், சிவக்ஞானரதா என்னும் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் திருவாதவூரர். தனது 8ஆவது வயதிலேயே குரு உபதேசம் பெற்று, திராவிட மொழிகள், வடமொழி, தீட்சா, சிவாகம மந்திரங்கள், நால்வகை வேதங்கள், அர்த்த சாஸ்திரங்கள்,
Read 29 tweets
#சனாதனதர்மம் #யோகிகள் #யோகி_பரமஹம்ச_யோகானந்தா தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்தார். இந்திய தூதரக விருந்து நிகழ்ச்சியில் அவர்
பேசிக் கொண்டிருந்த போதே தன் உடலை நீத்தார். மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொருத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது. இதயமோ நுரைஈரலோ
வேறு எதோ ஒன்று கெட்டுப் போனால் உயிர் நீங்கும் என்பது விஞ்ஞானிகள் நம்பிக்கை. நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை. அது மட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, "33
Read 11 tweets
#மாணிக்கவாசகர் #குருபூஜை
வாதவூரார் என்றும் வாதவூர் தலைவன் எனவும் போற்றப்படுகிற மாணிக்கவாசகருக்கு நேற்று குருபூஜை. மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ள ஒத்தக்கடைக்கு அருகில் கிளை பிரிந்து செல்லும் சாலையில், திருமோகூர் திருத்தலத்தைக் கடந்து, 20 கி.மீ. தொலைவில் திருவாதவூர் Image
எனும் அழகிய தலம் உள்ளது. சிறிய கிராமம். இந்த கிராமத்தின் அளவில் பாதியாக கோயில் அமைந்துள்ளது. அற்புதமான இந்தக் கோயில் பல சாந்நித்தியங்களைக் கொண்ட ஆலயமாக திகழ்கிறது. இதுதான் மாணிக்கவாசகர் அவதரித்த பூமி. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பார்கள். படிப்போர்
உள்ளத்தைப் பக்திப் பெருக்கால் நெகிழச் செய்யும் திருவாசகத்தை உலகுக்கு அளித்தவர் மாணிக்கவாசகப் பெருமான். பாண்டிய நாட்டில் வைகை நதிக்கரையில் அமைந்திருக்கும் திருவாதவூரில் பிறந்தார். அவர் பிறந்த ஊரின் பெயராலேயே ‘திருவாதவூரார்’ என்றே அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே கல்வி, ஞானம்
Read 14 tweets
★தமிழில் என்ன உள்ளது என்று கேட்பவர்களின் பார்வைக்கும்..
★சமய மெய்யியலில் என்ன உள்ளது என்று கேட்பவர்களின் பார்வைக்கும்...

⭐ திருவாசகம்

யானை முதலா எறும்பு ஈறாய

ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்

மானிடப் பிறப்பினுள் மாதா உதரத்து

ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
மொருமதித் தான்றியினிருமையிற் பிழைத்து

மிருமதி விளைவி னொருமையிற் பிழைத்து

மும்மதி தன்னு னம்மதம் பிழைத்து

மீரிரு திங்களிற் பேரிருள் பிழைத்து

மஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்து

மாறு திங்களி னூறலர் பிழைத்து

மேழு திங்களிற் றாழ்புவி பிழைத்து
மெட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்து

மொன்பதில் வருதரு துன்பமும் பிழைத்துக்

தக்க தசமதி தாயொடு தான்படுங்

துக்க சாகரத் துயரிடைப் பிழைத்து..

#திருவாசகம்
#தமிழ்
#சிவம்
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!