Discover and read the best of Twitter Threads about #ரதசப்தமி

Most recents (3)

#ஞாயிறு_ஸ்பெஷல் #சூரியனின்_பெருமைகள்
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்று. அதன் சக்தியால் தான் ஜீவராசிகள், பயிர்கள் வாழ்கின்றன, வளர்கின்றன. கோடை, குளிர், மழை போன்ற பருவ மாற்றங்களும் கூட சூரியனாலேயே ஏற்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சூரியனை இந்துகள் வழிபடுவது வழக்கமாக
உள்ளது. சூரியனை வழிபடும் பிரிவிற்கு சவுமாரம் என்று பொருள். சூரியன் சிவ பெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள். சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன்
#கிரகபதம் என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுது தான் மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் பச்சை நிறமுடைய 7
Read 12 tweets
மகாபாரதத்தில் வரும் கதாபத்திரங்களில் காங்கேயன் என்னும் #பீஷ்மர் மிகச் சிறந்தவர். இவரது தந்தை சாந்தனு ஒரு மீனவ பெண்ணை மணக்க விரும்பினார். பெண் வீட்டில் ஒரு நிபந்தனை விதித்தனர். அவர்கள் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அவர்களின் வாரிசுகளுமே அரியணை ஏற வேண்டும் என்பதே அது. இதைக்
கேட்ட அவர் தன் தந்தையின் மகிழ்ச்சிக்காக அரசாட்சியை துறந்தது மட்டுமன்றி, மணவாழ்க்கையையும் துறந்து பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்வதாக சத்தியம் செய்தார். இந்த கடுமையான விரதத்தை மேற்கொண்டவுடன் அவருக்குக் கிடைத்தப் பெயர் பீஷ்மர்-பயங்கரமானவர் என்று பொருள். இந்த விரதத்தை மேற்கொண்டதால்
அவர் தந்தை மிக மகிழ்ந்து இறைவனிடம் வேண்டி பீஷ்மருக்கு அளித்த வரம் 'இச்சா மரணம்'-தான் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில் மட்டும் மரணம் என்ற வரமாகும். பாரதப் போரின் பத்தாம் நாள் சிகன்டிகை அர்ஜுனனின் தேரில் அவனுக்கு முன் நிற்பதை கண்டார். பீஷ்மர் சிகண்டியைத் தாக்கவில்லை. சிகண்டி
Read 13 tweets
பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால் அப்புண்ணிய காலம் வந்தும் அவர் உயிர் பிரியவில்லை. தான் விரும்பியது போல் ஏன் இன்னும் மரணம் ஏற்படவில்லை, நான் என்ன பாவம் செய்தேன் என்று வேத வியாசரிடம் கேட்டார்.
அதற்கு வியாசர் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்கு அநீதி செய்வது மட்டும் பாவமில்லை அதர்மம் செய்பவர்களை கண்டும் கண்டிக்காமல் இருப்பதும் பாவம். துரியோதனன் சபையில் பாஞ்சாலி துகில் உரியப்பட்டபோது, அவள் காப்பாற்றுங்கள் என்று கதறியபோதும் உன் அங்கங்கள் சும்மா இருந்தன என்றார். செயல்படாத
தர்மம் அதர்மத்தை விட மோசமானது. அந்த பாவத்தினால்தான் நீ விரும்பியபடி மரணம் ஏற்படவில்லை என்று கூறினார். நான் செய்திருக்கும் மாபெரும் பாவத்துக்கு என்ன பிராயச்சித்தம் என்று பீஷ்மர் கேட்டார். அதற்கு வியாசர் யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!